மேலும் அறிய

Bihar Road: நட்ட நடுரோட்ல குத்தவெச்ச மரங்கள்.. எப்புட்றா வண்டி ஓட்றது? பாலத்திற்கே சவால் விடுக்கும் சாலை

Bihar Road: பீகாரில் ரூ.100 கோடி செலவில் அமைக்கப்பட்ட சாலையின் நடுவே ஆங்காங்கே, மரங்கள் இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bihar Road: விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையின் நடுவே ஆங்காங்கே, மரங்கள் இருப்பது ஆபத்தான பயணத்திற்கு வழிவகுப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

ரூ.100 கோடி செலவில் சாலை:

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 90 டிகிரியில் கட்டப்பட்ட மேம்பாலம், தேசிய அளவில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. உயிருக்கே ஆபத்தான அந்த பாலத்தில் பயணிக்கவே முடியாது என பொதுமக்கள் கூறினாலும், அதெல்லாம் பயணிக்க முடியும் என அதிகாரிகள் விளக்கமளித்தனர். ஆனாலும், இறுதியில் கட்டுமான பணியில் தொடர்புடைய அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அரசு ஒப்பந்தங்களை எடுப்பதில் இருந்து 2 நிறுவனங்களுக்கு தடையும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தான், அதற்கு சற்றும் சளைக்காத விதமாக, பீகாரில் 100 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையின் நடுவே ஆங்காங்கே மரங்கள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நட்டநடுவே குத்தவெச்ச மரங்கள்..

சாலை அமைக்கும் பணிகளின்போது, சாலையோரமாக இருக்கும் வாகனங்கள் மற்றும் அடிகுழாய் ஆகியவற்றை கூட அகற்றாமல், அதன் மேலேயே தார் ஜல்லியை கொட்டிச் செல்வதை நமது ஊரிலேயே அடிக்கடி பார்க்க முடிகிறது. அதன் அப்கிரேடட் வெர்ஷனாக, பீகாரின் ஜெகனாபாத் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாட்னா-கயா பிரதான சாலையின் 7.48 கிலோமீட்டர் நீளத்தின் நடுவில் பல முதிர்ந்த மரங்கள் குறுக்கும் நெடுக்குமாக அமைந்துள்ளன. இதன் காரணமாக அந்த சாலை விரிவாக்கத் திட்டம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் குறித்த விமர்சனங்களைத் தூண்டிவிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு மற்றும் பணி திறன் மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

ரூ.100 கோடி கோவிந்தாவா?

பாட்னாவிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த திட்டம், ரூ.100 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதி மற்றும் இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த சாலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், சாலை முழுவதும் ஆங்கேங்கே இருகும் முற்றிலும் வளர்ந்த மரங்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி, விபத்து அபாயத்தை அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். குறைந்தபட்சம் அந்த மரங்களில் வாகன விளக்குகளை பிரதிபலிக்கக் கூடிய ரிஃப்ளெக்டர்களோ, மரங்கள் இருப்பதை அறியச் செய்யும் வகையில் கருப்பு மற்றும் வெள்ளை நிற வண்ணம் கூட தீட்டப்படவில்லை. மரங்கள் நேர்க்கோட்டில் கூட இன்றி, வளைந்து நெளிந்து சாலையின் பல்வேறு பகுதிகளில் இருப்பது மிகுந்த ஆபத்தாக கருதப்படுகிறது.

இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில், பணிகள் முடிந்த சாலையில் இவ்வளவு மரங்கள் எப்படி அப்படியே விடப்பட்டன என்பது குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளனர். இந்த வினோதமான கட்டுமானத்தால் கோபமடைந்த ஒரு பயனர், "திட்டமிடல் இல்லை. பொது அறிவு இல்லை. வரி செலுத்துவோர் பணம் வீணடிக்கப்படும் மற்றொரு அத்தியாயம் இது" என்று சமூக வலைதளத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

மரங்கள் அகற்றப்படாதது ஏன்?

திட்டமிடல் கட்டத்தில், சாலை அமைப்பதற்கு இடையூறாக இருந்த மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம், வனத்துறையிடம் அனுமதி கோரியுள்ளது. ஆனால் அதனை நிராகரித்த வனத்துறை, சாலை அமைக்க பயன்படுத்திய 14 ஹெக்டேர் வன நிலத்திற்கு இழப்பீடு கோரியுள்ளது. இந்த நிபந்தனையை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்த நிர்வாகம், திட்டத்தை தாமதப்படுத்துவதற்குப் பதிலாக இருக்கும் மரங்களைச் சுற்றி சாலை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பீகார் சாலை கட்டுமானத் துறையோ அல்லது உள்ளூர் மாவட்ட நிர்வாகமோ அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை. இந்த பீகார் மாநிலத்திற்கு தான், நாட்டின் மற்ற எந்த மாநிலத்தை காட்டிலும் அதிகப்படியான உட்கட்டமைப்பு திட்டங்கள், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Embed widget