மேலும் அறிய

மே 15 முதல் ஜூன் 15 வரை, 20 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: ஏன் தெரியுமா?

கடந்த மே மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 20 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 20 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகளை முடக்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 20 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 20 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகளை முடக்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் திருத்தப்பட்ட ஐடி சட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது தொடர்பாக தனது மாதாந்திர அறிக்கையில் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. தனது பயனாளர்களை ஆன்லைன் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய ஐடி சட்டத்தின் நிபந்தனைகள் என்ன?
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய ஐடி சட்டத்தின்படி, "சமூக வலைதளங்கள் அவற்றின் அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்களை வலைதளத்தில் வெளியிட வேண்டும். புகார்களைப் பெறுவது, நடவடிக்கை எடுப்பது போன்றவற்றுக்காக இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். சட்ட ரீதியான உத்தரவுக்கு 36 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய பதிவை யார் முதலில் பதிந்தது என்ற விவரத்தை பகிர வேண்டும்" போன்ற விதிமுறைகள் உள்ளன.

இந்நிலையில் புதிய விதிகளின்படி தாங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து வாட்ஸ் அப் நிறுவனம், "நாங்கள் தொழில்நுட்பத்தின் மீதும், எங்களின் வாடிக்கையாளர்களின் மீதும்  சிறந்த அக்கறையைக் கொண்டுள்ளதால் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் சமரசம் செய்வதில்லை. எங்களின் முதன்மையான கவனன், அபாயகரமான, தேவையற்ற கருத்துகள் வாட்ஸ் அப்பில் பரவாமல் தடுப்பதிலேயே இருக்கிறது. இத்தகைய விஷமங்களைப் பகிரும் கணக்குகளைக் கண்டறிய நாங்கள் நவீன முன்னேறிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம்.

அந்த வகையில் மே 15 முதல் ஜூன் 15 வரையிலான காலகட்டத்தில் 20 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை முடக்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம், வாடிக்கையாளர்கள் தங்களின் தகவல் பறிமாற்றத் தளத்தை அவதூறு பரப்பப் பயன்படுத்தாமல் இருக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஓர் அவதூறைப் பரப்பி அதன் மூலம் அசம்பாவிதங்கள் நடந்து அதன் பின்னர் எங்கிருந்து அந்தத் தகவல் பரவியது என்பதைக் கண்டறிவதைக் காட்டிலும் ஆரம்ப நிலையிலேயே அவதூறுகள் பரவாமல் தடுப்பதே மேல். அதைத்தான் நாங்கள் தொழில்நுட்ப உதவியுடன் செய்கிறோம்.

எங்களின் அவதூறு கண்டறியும் தொழில்நுட்பம் மூன்று வகையில் செயல்படுகிறது. பயனாளர் பதிவு செய்யும் போதும் செய்யும் கண்காணிப்பு, தகவல் பரிமாற்றத்தின் போதான கண்காணிப்பு. ஒரு கருத்துக்கு எந்த மாதிரியான பின்னூட்டம், குறிப்பாக எதிர்மறை பின்னூட்டம் வருகிறது என்பதைக் கண்டறியும் தொழில்நுட்பம் மூலம் இந்த நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்கிறோம். பயனாளர்கள் ரிப்போர்ட், ப்ளாக் பட்டன்களைப் பயன்படுத்தும்போது எங்களுக்கு குறிப்பிட்ட ஒரு கணக்கை கண்காணிக்கும் வேலை தொடங்கிவிடுகிறது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர அறிக்கையை புதிய ஐடி சட்டத்தின் கீழ் வெளியிட்டிருந்தாலும் கூட, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக வாட்ஸ் அப் நிறுவனம் ஒரு வழக்கைத் தொடர்ந்துள்ளது. அதில், புதிய ஐடி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது. இந்தியாவில் வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு 40 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். புதிய ஐடி சட்டத்தின் படி, வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூகவலைதளங்களும் மாதாந்திர அறிக்கை செய்வது அவசியமாக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Samsung Silicon-Carbon Battery: சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
iPhone 17 Price Hike: மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
இன்ஸ்டாகிராமில் வந்தாச்சு மாஸான மாற்றம்! இனி பழைய ஆடியோவை இப்படி சுலபமா மாற்றலாம்!
இன்ஸ்டாகிராமில் வந்தாச்சு மாஸான மாற்றம்! இனி பழைய ஆடியோவை இப்படி சுலபமா மாற்றலாம்!
அடடே... மனிதர்களுக்குன்னு தனியா 'பிரிட்ஜ்'-ஆ? ஜப்பான்காரன் எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா..!
அடடே... மனிதர்களுக்குன்னு தனியா 'பிரிட்ஜ்'-ஆ? ஜப்பான்காரன் எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா..!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
TASMAC SHOP : பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
Embed widget