மேலும் அறிய

மே 15 முதல் ஜூன் 15 வரை, 20 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: ஏன் தெரியுமா?

கடந்த மே மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 20 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 20 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகளை முடக்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 20 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 20 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகளை முடக்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் திருத்தப்பட்ட ஐடி சட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது தொடர்பாக தனது மாதாந்திர அறிக்கையில் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. தனது பயனாளர்களை ஆன்லைன் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய ஐடி சட்டத்தின் நிபந்தனைகள் என்ன?
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய ஐடி சட்டத்தின்படி, "சமூக வலைதளங்கள் அவற்றின் அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்களை வலைதளத்தில் வெளியிட வேண்டும். புகார்களைப் பெறுவது, நடவடிக்கை எடுப்பது போன்றவற்றுக்காக இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். சட்ட ரீதியான உத்தரவுக்கு 36 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய பதிவை யார் முதலில் பதிந்தது என்ற விவரத்தை பகிர வேண்டும்" போன்ற விதிமுறைகள் உள்ளன.

இந்நிலையில் புதிய விதிகளின்படி தாங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து வாட்ஸ் அப் நிறுவனம், "நாங்கள் தொழில்நுட்பத்தின் மீதும், எங்களின் வாடிக்கையாளர்களின் மீதும்  சிறந்த அக்கறையைக் கொண்டுள்ளதால் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் சமரசம் செய்வதில்லை. எங்களின் முதன்மையான கவனன், அபாயகரமான, தேவையற்ற கருத்துகள் வாட்ஸ் அப்பில் பரவாமல் தடுப்பதிலேயே இருக்கிறது. இத்தகைய விஷமங்களைப் பகிரும் கணக்குகளைக் கண்டறிய நாங்கள் நவீன முன்னேறிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம்.

அந்த வகையில் மே 15 முதல் ஜூன் 15 வரையிலான காலகட்டத்தில் 20 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை முடக்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம், வாடிக்கையாளர்கள் தங்களின் தகவல் பறிமாற்றத் தளத்தை அவதூறு பரப்பப் பயன்படுத்தாமல் இருக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஓர் அவதூறைப் பரப்பி அதன் மூலம் அசம்பாவிதங்கள் நடந்து அதன் பின்னர் எங்கிருந்து அந்தத் தகவல் பரவியது என்பதைக் கண்டறிவதைக் காட்டிலும் ஆரம்ப நிலையிலேயே அவதூறுகள் பரவாமல் தடுப்பதே மேல். அதைத்தான் நாங்கள் தொழில்நுட்ப உதவியுடன் செய்கிறோம்.

எங்களின் அவதூறு கண்டறியும் தொழில்நுட்பம் மூன்று வகையில் செயல்படுகிறது. பயனாளர் பதிவு செய்யும் போதும் செய்யும் கண்காணிப்பு, தகவல் பரிமாற்றத்தின் போதான கண்காணிப்பு. ஒரு கருத்துக்கு எந்த மாதிரியான பின்னூட்டம், குறிப்பாக எதிர்மறை பின்னூட்டம் வருகிறது என்பதைக் கண்டறியும் தொழில்நுட்பம் மூலம் இந்த நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்கிறோம். பயனாளர்கள் ரிப்போர்ட், ப்ளாக் பட்டன்களைப் பயன்படுத்தும்போது எங்களுக்கு குறிப்பிட்ட ஒரு கணக்கை கண்காணிக்கும் வேலை தொடங்கிவிடுகிறது" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதாந்திர அறிக்கையை புதிய ஐடி சட்டத்தின் கீழ் வெளியிட்டிருந்தாலும் கூட, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக வாட்ஸ் அப் நிறுவனம் ஒரு வழக்கைத் தொடர்ந்துள்ளது. அதில், புதிய ஐடி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது. இந்தியாவில் வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு 40 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். புதிய ஐடி சட்டத்தின் படி, வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூகவலைதளங்களும் மாதாந்திர அறிக்கை செய்வது அவசியமாக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சிசிடிவி விதிகளில் அதிரடி மாற்றம்! இனி உளவு பார்க்க முடியாது.. மத்திய அரசின் மாஸ்டர் ஸ்ட்ரோக்
சிசிடிவி விதிகளில் அதிரடி மாற்றம்! இனி உளவு பார்க்க முடியாது.. மத்திய அரசின் மாஸ்டர் ஸ்ட்ரோக்
Smartphones Under 20K: ரியல்மி to மோட்டோரோலா வரை.! ரூ.20,000-க்குள்ள ஒரு செமத்தியான போன் வாங்கனுமா.? இந்தாங்க லிஸ்ட்
ரியல்மி to மோட்டோரோலா வரை.! ரூ.20,000-க்குள்ள ஒரு செமத்தியான போன் வாங்கனுமா.? இந்தாங்க லிஸ்ட்
ஸ்மார்ட்போன் தண்ணீரில் நனைந்தால் என்ன செய்வது? - செய்யக்கூடாத 5 தவறுகள்! உடனே தெரிந்து கொள்ளுங்கள்
ஸ்மார்ட்போன் தண்ணீரில் நனைந்தால் என்ன செய்வது? - செய்யக்கூடாத 5 தவறுகள்! உடனே தெரிந்து கொள்ளுங்கள்
Oneplus Shutdown: ஒன்பிளஸ் பிரியர்களுக்கு ஷாக்.! நிறுவனம் மூடப்படுவதாக வெளியான அதிர்ச்சித் தகவல்; என்னதான் ஆச்சு.?
ஒன்பிளஸ் பிரியர்களுக்கு ஷாக்.! நிறுவனம் மூடப்படுவதாக வெளியான அதிர்ச்சித் தகவல்; என்னதான் ஆச்சு.?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sundar C: தேர்தல் களத்தில் குதித்த சுந்தர்.சி.. எந்த கட்சி சார்பில், எந்த தொகுதியில் போட்டி? 
Sundar C: தேர்தல் களத்தில் குதித்த சுந்தர்.சி.. எந்த கட்சி சார்பில், எந்த தொகுதியில் போட்டி? 
IPL 2026: ஐபிஎல் போட்டியில் தோனி விளையாட மாட்டார் - சிஎஸ்கே அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
IPL 2026: ஐபிஎல் போட்டியில் தோனி விளையாட மாட்டார் - சிஎஸ்கே அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
KP Sharma Oli: அதாம்லே வர்கீசு.. நேபாளம் முன்னாள் பிரதமர் கைது.. பதவியேற்ற மறுநாளே பாலேந்திர ஷா சம்பவம்!
KP Sharma Oli: அதாம்லே வர்கீசு.. நேபாளம் முன்னாள் பிரதமர் கைது.. பதவியேற்ற மறுநாளே பாலேந்திர ஷா சம்பவம்!
IPL 2026 RCB vs SRH: இன்று முதல் ஐபிஎல் திருவிழா.. பெங்களூரு - ஹைதராபாத் மோதல்.. யார் கெத்து?
IPL 2026 RCB vs SRH: இன்று முதல் ஐபிஎல் திருவிழா.. பெங்களூரு - ஹைதராபாத் மோதல்.. யார் கெத்து?
Jothimani MP: தொண்டர்கள் உழைப்பை தின்னும் சிலர்.. பரபரப்பு ட்வீட்.. யாரை சொல்கிறார் ஜோதிமணி?
Jothimani MP: தொண்டர்கள் உழைப்பை தின்னும் சிலர்.. பரபரப்பு ட்வீட்.. யாரை சொல்கிறார் ஜோதிமணி?
TVK Vijay: விஜயை தடுக்க குழி தோண்டப்பட்டதா? உண்மை இதுதான்.. சென்னை மாநகராட்சி விளக்கம்!
TVK Vijay: விஜயை தடுக்க குழி தோண்டப்பட்டதா? உண்மை இதுதான்.. சென்னை மாநகராட்சி விளக்கம்!
R Parthiban: எனக்கு சாதியே வேண்டாம் சாமி.. பார்த்திபன் திடீர் முடிவு - நெட்டிசன்களுக்கு கிடைத்த வெற்றி!
R Parthiban: எனக்கு சாதியே வேண்டாம் சாமி.. பார்த்திபன் திடீர் முடிவு - நெட்டிசன்களுக்கு கிடைத்த வெற்றி!
இரவு முழுவதும் இரு மகள்களை தலைகீழாக தொங்க விட்ட தந்தை.. ஒருவர் உயிரிழப்பு!
இரவு முழுவதும் இரு மகள்களை தலைகீழாக தொங்க விட்ட தந்தை.. ஒருவர் உயிரிழப்பு!
Embed widget