மேலும் அறிய

Whatsapp: இந்தியாவில் 37 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் டிசம்பரில் முடக்கம்..! ஏன் தெரியுமா.?

36,77,000 நிறுத்தப்பட்ட கணக்குகளில், 13,89,000 கணக்குகள் பயனர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என முன்கூட்டிய அறிந்து தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான மெசேஜிங் தளமான வாட்ஸ்ஆப், டிசம்பர் 2022 இல் இந்தியா முழுவதும் 36.77 லட்சம் கணக்குகளுக்குத் தடை விதித்ததாக, தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 இன் கீழ் வெளியிடப்பட்ட இந்திய மாதாந்திர அறிக்கையின் டிசம்பர் பதிப்பில் செய்தி அனுப்பும் தளமான வாட்ஸ்ஆப் இந்த செய்தியை வெளியிட்டது.

வாட்ஸ்அப் செயலி

வாட்ஸ்அப் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பிரபலமான மெசேஜிங் செயலியாக உள்ளது.  குறிப்பாக இந்தியாவில் இதற்கான பயனர்கள் அதிகம். தற்போது இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை அனைவரும் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். வெறும்  தகவல்களை பரிமாறும் தளமாக மட்டுமல்லாமல், தற்போது பணப் பரிவர்த்தனை செய்யவும், தொழில் சம்பந்தமாக வீடியோ கால் பேசும் வசதியும், ஆவணங்களை அனுப்பவும் பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது வாட்ஸ்அப் செயலி.

இப்படி பலரால் பயன்படுத்ததப்படும் செயலியை சிலர், பல தவறான செயல்களுக்காகவும் பயன்படுத்துவார்கள். அப்படி செய்யும் கணக்குகளை முடக்கும் வேலையை தொடர்ந்து செய்து பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த முயற்சிக்கிறது வாட்ஸ்ஆப் நிறுவனம். அப்படி மாதாமாதம் எத்தனை கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்பது குறித்த தகவல்களை சரியாக இரண்டாவது மாத துவக்கத்தில் வழக்கமாக அறிவித்து வருகிறது. அதே போல கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் எத்தனை கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்ற தகவலை தற்போது வெளியிட்டுள்ளது. 

Whatsapp: இந்தியாவில் 37 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் டிசம்பரில் முடக்கம்..! ஏன் தெரியுமா.?

எத்தனை கணக்குகள் முடக்கம்?

கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 36.77 லட்சம் கணக்குகளுக்குத் தடை விதித்ததாக, வாட்ஸ்ஆப் அறிக்கை வெளியிட்டுள்ளது. 36,77,000 நிறுத்தப்பட்ட கணக்குகளில், 13,89,000 கணக்குகள் பயனர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என முன்கூட்டிய அறிந்து தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. தடைசெய்யப்பட்ட கணக்குகள் தீங்கிழைக்கும் செயல்களில் ஈடுபட்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நிறுவனம் மேற்கோளிட்டுள்ளது. வாட்ஸ்அப் மூலம் ‘பேட் (bad)’ என அழைக்கப்படும் இந்தக் கணக்குகள், தனது தளத்தில் வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களது தகவல்கள் பாதுகாப்பாக இருக்க, அவற்றை தடை செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்: HBD Simbu : எண்டே கிடையாது டா.. தமிழ் சினிமாவில் தனி நாற்காலி.. சிம்பு பிறந்தநாள் இன்று..

நவம்பரை ஒப்பிட்டால் குறைவு

இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து 1,607 புகார் அறிக்கைகளை குழு பெற்றது. மொத்த புகார்களில், 166 மேல்முறையீடுகள் மீது வாட்ஸ்அப் நடவடிக்கை எடுத்தது. நவம்பர் மாத எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது டிசம்பர் புள்ளிவிவரங்கள் சற்று குறைவாகவே உள்ளன. நவம்பரில், வாட்ஸ்அப் 37.16 லட்சம் கணக்குகளுக்கான சேவைகளை நிறுத்தியது, அதே நேரத்தில் முன்கூட்டியே நிறுத்தப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை 90,000 ஆக இருந்தது. நவம்பர் 2022 இல் 946 புகார்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Whatsapp: இந்தியாவில் 37 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் டிசம்பரில் முடக்கம்..! ஏன் தெரியுமா.?

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021

இந்தியாவில் செயல்படும் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் மற்றும் 50 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்தால், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 இன் ஒரு பகுதியாக மாதாந்திர இணக்க அறிக்கையை வெளியிட வேண்டும். வழிகாட்டுதல்களின்படி, இணக்கம் நிறுவனங்களால் பெறப்பட்ட வாடிக்கையாளர் புகார்கள் மற்றும் அத்தகைய அறிக்கைகளுக்கு எதிராக குழு எடுத்த நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை அறிக்கை வழங்க வேண்டும்.

அரசாங்கத்தின் இந்த வழிகாட்டுதல்கள் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக திட்டமிடப்பட்ட அமைப்பாகும். வாட்ஸ்அப் இந்தியாவில் மிகவும் நம்பகமான செய்தியிடல் செயலிகளில் ஒன்றாக விளங்குகிறது. இந்தியாவில் 53 கோடிக்கும் அதிகமான மக்கள் தொடர்புகள் மற்றும் சமூக தொடர்புகளுக்காக வாட்ஸ்அப்பை நம்பியுள்ளனர். அதனால் இந்த நிறுவனம் தரும் மாதாந்திர அறிக்கை மிகவும் அவசியம் ஆகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
ABP Southern Rising Summit 2025 LIVE:  ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
ABP Southern Rising Summit 2025 LIVE: ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Embed widget