மேலும் அறிய

உலகின் மிகப்பெரிய  உலக மொபைல் மாநாடு.! 6ஜி, ஏஐ குறித்த ஆராய்ச்சியில் மத்திய அரசு..!

உலக மொபைல் மாநாடு புதுமைகளை விரைவுபடுத்துவதற்கும், டிஜிட்டல் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் முக்கியமானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலக மொபைல் மாநாடு :

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் மார்ச் 3 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை வரை நடைபெறவுள்ள  உலகின் மிகப்பெரிய  உலக மொபைல் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாடானது மிகவும் செல்வாக்குமிக்க தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.    இந்தியா சார்பில் உலக மொபைல் மாநாடு- 2025 -ல்,  மத்திய தொலைத்தொடர்புத் துறை  அமைச்சர்  ஜோதிராதித்ய சிந்தியா கலந்து கொள்கிறார்.இந்தியா மொபைல் மாநாடு- 2025- ன் முன்னோட்ட நிகழ்ச்சியை அவர் வெளியிடுவதுடன், உலக மொபைல் மாநாட்டில் இந்தியாவின் அரங்கையும்  திறந்து வைக்க உள்ளார்.

இந்தியா மொபைல் மாநாடு என்பது இந்தியாவின் கண்டுபிடிப்பு சூழல் அமைப்பை முன்னிலைப்படுத்தும் தளமாகும். மேலும் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் தங்கள் அதிநவீன முன்னேற்றங்கள் மற்றும் நிலையான தீர்வுகளை இதில் காட்சிப்படுத்துகின்றனர். இந்திய அரங்கில் 38 இந்திய தொலைத்தொடர்பு உபகரண உற்பத்தியாளர்கள் தங்களின் அதிநவீன தயாரிப்புகளான வன்பொருள், மென்பொருள் ஆகிய இரண்டையும் காட்சிப்படுத்துவார்கள்.

இதுகுறித்து மத்திய சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது , “ அமைச்சரின் பங்கேற்பானது டிஜிட்டல் மற்றும் மொபைல் சூழல் அமைப்பில் உலகளாவிய தலைவராக இந்தியாவின் வளர்ந்து வரும் பங்கை எடுத்துக் காட்டுகிறது. அவரது பங்கேற்பு டிஜிட்டல் மாற்றம், புத்தாக்கம், தொலைத் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்தில் சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டும்.

Also Read: Trump Zelensky: என்ன நடந்திட்டிருக்கு இங்க.! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோட் சூட் அணியாததுதான் பிரச்னையா .!

6ஜி-ஏஐ ஆராய்ச்சி:

5ஜி, செயற்கை நுண்ணறிவு, 6ஜி, குவாண்டம் மற்றும் அடுத்த தலைமுறை மொபைல் தொழில்நுட்பங்களில் அதிநவீன முன்னேற்றங்களை ஆராய்வதற்காக, தமது பயணத்தின் போது, தொலைத்தொடர்பு அமைச்சர், உலகளாவிய தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுடன் உரையாடுவார். இந்த நிகழ்வு மொபைல் துறையை வடிவமைக்கும் முக்கிய போக்குகளை விவாதிப்பதற்கான ஒரு தளமாகச் செயல்படுவதுடன், இந்தியாவின் டிஜிட்டல் விருப்பங்களை நிறைவேற்றும்.


உலகின் மிகப்பெரிய  உலக மொபைல் மாநாடு.! 6ஜி, ஏஐ குறித்த ஆராய்ச்சியில் மத்திய அரசு..!

அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தமது பயணம் குறித்து,  “இந்தியா வேகமாக உலகளாவிய தொழில்நுட்ப மையமாக உருவாகி வருகிறது. மேலும் உலக மொபைல் மாநாடு போன்ற நிகழ்வுகளில் சர்வதேச கூட்டாளர்களுடனான எங்கள் ஈடுபாடு புதுமைகளை விரைவுபடுத்துவதற்கும், டிஜிட்டல் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் முக்கியமானது. உலகளாவிய நிபுணர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், மொபைல் மற்றும் தொலைத்தொடர்புத் துறையில் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகளைப் பற்றி விவாதிப்பதற்கும் நான் எதிர்நோக்குகிறேன்’’ என்று தெரிவித்தார்.

அறிவு பரிமாற்றம்:

‘உலகளாவிய தொழில்நுட்ப நிர்வாகம்’,  ‘புதுமை மற்றும் ஒழுங்குமுறையை சமநிலைப்படுத்துதல்: தொலைத்தொடர்பு கொள்கை மீதான உலகளாவிய பார்வைகள்’ உள்ளிட்ட பல முக்கிய அமர்வுகளில் அமைச்சர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்சிலோனாவில் நடக்கும்  உலக மொபைல்  காங்கிரஸ் 2025-ல் பங்கேற்பது, உலகெங்கிலும் உள்ள உயர்மட்ட நிர்வாகிகள், தொலைநோக்கு பார்வையாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை ஒன்றிணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இது உத்திசார் ஒத்துழைப்பு, அறிவு பரிமாற்றம் மற்றும் இந்தியாவின் தொழில்நுட்பத் தலைமையை வெளிப்படுத்துவதற்கான தளத்தை வழங்குகிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை  - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை  - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
Embed widget