மேலும் அறிய

”பத்திரிக்கையாளர், செய்தி ஊடகங்களின் பதிவுகளை நீக்குங்க “ - தொடர் அழுத்தத்தில் ட்விட்டர் வெளியிட்ட அறிக்கை..!

பதிவுகளை நீக்கம் செய்வதற்கான அழுத்தம் கொடுப்பதில் அமெரிக்கா முதல் இடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன

சமூக வலைத்தளங்களில் முன்னணியாக இருக்கும் ட்விட்டர் நிறுவனம்தான் பெரும்பாலான பிரபலங்களின் நம்பர் ஒன் சாய்ஸ். ”சொல்ல வந்த தகவல்களை சுருக்கமாக சொல்லுங்கள்” என்ற அடிப்படையில் உருவானதுதான் ட்விட்டர். சமீப காலமாக பல இடையூறுகளை சந்தித்தும் வருகிறது.  இந்நிலையில் உலகளவில் சில ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்களின் பதிவுகளை நீக்க அந்தந்த அரசு அறிவுறுத்தி வருவதாக ட்விட்டர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல்  சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே ஊடகவியலாளர்களின் கருத்துகளை நீக்க சமூக வலைத்தளங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு அது சற்று கூடுதலாக இருப்பதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.


”பத்திரிக்கையாளர், செய்தி ஊடகங்களின் பதிவுகளை நீக்குங்க “ - தொடர் அழுத்தத்தில் ட்விட்டர் வெளியிட்ட அறிக்கை..!


இது குறித்து நேற்று (ஜூலை 14) வெளிப்படையான அறிக்கை ஒன்றை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ராயட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ள அந்த தகவலின்படி, கடந்த 2020-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் உலகம் முழுவதும் சரிபார்க்கப்பட்ட (Verified) கணக்குகளை வைத்துள்ள 199 பத்திரிக்கையாளர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் பதிவுகளை நீக்கம் செய்வதற்கான சட்ட கோரிக்கைகளை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளது. அப்போது 361 ஆக இருந்த அந்த கோரிக்கைகள், இந்த ஆண்டின் முதற்பாதியில் 26% அதிகரித்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  மொத்தமாக உலகளவில் கடந்த ஆண்டு ஜூலை 1 முதல் டிசம்பர் 31 வரையில் 14,500 நீக்க கோரிக்கைகள் பெறப்பட்டதாகவும் அதில் 30 சதவிகித கோரிக்கைகளை மட்டுமே ட்விட்டர் பதிலளித்தாகவும் தெரிவித்துள்ளது. பதிவுகளை நீக்கம் செய்வதற்கான அழுத்தம் கொடுப்பதில் அமெரிக்கா முதல் இடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.இது தவிர துருக்கி, பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

சில நாடுகள் சமூக ஊடகங்களுக்கான அணுகலை கட்டுப்படுத்த தொடங்கியுள்ளன. கியூபாவில் தொடர் போராட்டங்களுக்கு பிறகு பேஸ்புக், டெலிகிராம் போன்றவற்றிற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அதே போல நஜீரியா அந்த நாட்டில்  ட்விட்டரை பயன்படுத்த தடை விதித்துவிட்டது. மேலும் தொலைக்காட்சி , வானொலி போன்ற நிறுவனங்கள் ட்விட்டர் மூலமாக தகவல்களை சேமிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்தியாவில் கடந்த மே மாதம் முதல் இந்தியாவில் தொழில்நுட்ப திருத்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இது மக்களின் கருத்து சுதந்திரத்திற்கு முரணானது என அதனை ஏற்காமல் அடம்பிடித்தது ட்விட்டர். மத்திய அரசுடன் பலகட்ட மோதலுக்கு பிறகு  ட்விட்டர் தற்போது அதற்கான பொறுப்பு அதிகாரிகளையும் நியமித்துள்ளது.  சமூக ஊடகங்களை கண்காணிக்கும் வகையில் உருவக்கப்பட்ட புதிய சட்டத்தின் கீழ், கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் அவதூறு, ஆபாசம், வெறுப்புணர்வை தூண்டுதல், வதந்தி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் 133 பேரின் கணக்குகளை இந்தியாவில் நீக்கிதாகதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SIR Last Date: வாக்காளர் திருத்தப் பட்டியல் - விண்ணப்பங்களை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் - தேர்தல் ஆணையம்
SIR Last Date: வாக்காளர் திருத்தப் பட்டியல் - விண்ணப்பங்களை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் - தேர்தல் ஆணையம்
Ditwah Cylone 3 Dead: டிட்வா புயல்; தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு; மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம்; அமைச்சர் முக்கிய அப்டேட்
டிட்வா புயல்; தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு; மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம்; அமைச்சர் முக்கிய அப்டேட்
US Suspends Visa: ஆப்கானிஸ்தானியர்களுக்கு ஆப்பு வைத்த அமெரிக்கா; விசா நிறுத்தம் - ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி
ஆப்கானிஸ்தானியர்களுக்கு ஆப்பு வைத்த அமெரிக்கா; விசா நிறுத்தம் - ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி
Gaza War Death Toll: காசா; உங்க வெறி ஓயாதா.? போர் நிறுத்தத்திலும் தாகிய இஸ்ரேல்; 70,000-த்தை தாண்டிய உயிரிழப்பு
காசா; உங்க வெறி ஓயாதா.? போர் நிறுத்தத்திலும் தாகிய இஸ்ரேல்; 70,000-த்தை தாண்டிய உயிரிழப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Last Date: வாக்காளர் திருத்தப் பட்டியல் - விண்ணப்பங்களை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் - தேர்தல் ஆணையம்
SIR Last Date: வாக்காளர் திருத்தப் பட்டியல் - விண்ணப்பங்களை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம் - தேர்தல் ஆணையம்
Ditwah Cylone 3 Dead: டிட்வா புயல்; தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு; மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம்; அமைச்சர் முக்கிய அப்டேட்
டிட்வா புயல்; தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு; மூழ்கிய பயிர்களுக்கு நிவாரணம்; அமைச்சர் முக்கிய அப்டேட்
US Suspends Visa: ஆப்கானிஸ்தானியர்களுக்கு ஆப்பு வைத்த அமெரிக்கா; விசா நிறுத்தம் - ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி
ஆப்கானிஸ்தானியர்களுக்கு ஆப்பு வைத்த அமெரிக்கா; விசா நிறுத்தம் - ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி
Gaza War Death Toll: காசா; உங்க வெறி ஓயாதா.? போர் நிறுத்தத்திலும் தாகிய இஸ்ரேல்; 70,000-த்தை தாண்டிய உயிரிழப்பு
காசா; உங்க வெறி ஓயாதா.? போர் நிறுத்தத்திலும் தாகிய இஸ்ரேல்; 70,000-த்தை தாண்டிய உயிரிழப்பு
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Diamond: வைரம் வெட்டி எடுத்ததா? கையால செஞ்சதா? கண்டறிவது எப்படி? வித்தியாசம் என்ன?
Diamond: வைரம் வெட்டி எடுத்ததா? கையால செஞ்சதா? கண்டறிவது எப்படி? வித்தியாசம் என்ன?
Top 10 News Headlines: டிட்வா-தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு, பயிர் நிவாரணம்-முதல்வர் முடிவு, இலங்கையில் 23 தமிழர்கள் பலி - 11 மணி செய்திகள்
டிட்வா-தமிழகத்தில் 3 பேர் உயிரிழப்பு, பயிர் நிவாரணம்-முதல்வர் முடிவு, இலங்கையில் 23 தமிழர்கள் பலி - 11 மணி செய்திகள்
Upcoming Cars: ஆண்டின் கடைசியில் சந்தைக்கு வரும் கார்கள் - எல்லாமே எஸ்யுவி தான் - லோ பட்ஜெட் டூ ப்ரீமியம் மாடல்கள்
Upcoming Cars: ஆண்டின் கடைசியில் சந்தைக்கு வரும் கார்கள் - எல்லாமே எஸ்யுவி தான் - லோ பட்ஜெட் டூ ப்ரீமியம் மாடல்கள்
Embed widget