மேலும் அறிய

Twitter India: ட்விட்டர் இந்திய பிரிவு தலைவர் ‛டிரான்ஸ்பர்’ -காங்கிரஸ் கணக்குகள் முடங்கிய விவகாரத்தின் எதிரொலி!

“காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் போராடும். ட்விட்டரில் எங்களை முடக்குவதன் மூலம் எங்களைத் தடுக்க முடியாது” என தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்ட அக்கட்சியின் 5 மூத்த தலைவர்கள் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காங்கிரஸாரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகள் சமீபத்தில்  தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது. மத்திய அரசுக்கு ஆதரவாக ட்விட்டர் நிறுவனம் செயல்படுவதாக பரவலாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், பலதரப்பிலிருந்து ட்விட்டர் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

டெல்லியில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ராகுல் காந்தி, அந்த சந்திப்பின்போது எடுத்து கொண்ட புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டார். போக்சோ சட்டப்படி, பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படமோ, பெற்றோர், குடும்பதினரின் புகைப்படமோ சமூகவலைதளங்கள் அல்லது பத்திரிக்கைகளில் வெளியிட கூடாது. ஆனால் அதை மீறி ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டதும், அதை சில காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட கட்சியினர் பகிர்ந்ததும் தான் பிரச்னை என கூறப்பட்டது. 

அது குறித்து தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் கொடுத்த புகாரின் பேரில், ராகுல் காந்தி பதிவிட்ட ட்விட்டர் பதிவு நீக்கப்பட்டது. மேலும், ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை முடக்கிவிட்டு ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்தது என்றும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ரந்தீப் சுர்ஜ்வாலா, முன்னாள் அமைச்சரும் பொதுச் செயலாளருமான அஜய் மக்கென், மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ், கட்சியின் மக்களவை கொறடா மாணிக்கம் தாகூர் ஆகியோரது ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டதாகவும் அப்போது தகவல் வெளியானது. 

இது குறித்து பேசிய காங்கிரஸ் கட்சி செய்தித்தொடர்பு துறையின் செயலாளர் வினீத் பூனியா, “காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் போராடும். ட்விட்டரில் எங்களை முடக்குவதன் மூலம் எங்களைத் தடுக்க முடியாது” என தெரிவித்தார். மேலும் டுவிட்டர் நிறுவனத்தை மத்திய அரசு கட்டுப்படுத்துவதாகவும், ட்விட்டர் பாஜகவின் கைப்பாவையாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.  இதைத் தொடர்ந்து தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் மீது காங்கிரஸ் தரப்பிலும் எதிர்கட்சிகள் தரப்பிலும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது. இதனால் ட்விட்டர் நிறுவனத்திற்கு இக்கட்டான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், ட்விட்டர் இந்திய பிரிவு தலைவர் மணிஷ் மகேஸ்வரிவை அமெரிக்காவிற்கு டிரான்ஸ்பர்(பணி மாற்றம்) செய்து ட்விட்டர் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. அனைவரின் கருத்துக்கு மதிப்பளிக்கும் விதமாக ட்விட்டர் நிறுவனம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
Breaking News LIVE OCT 4: ஏகப்பட்ட கேள்விகளை தவெகவினர் மீது வீசுகிறார்கள் - விஜய் அறிக்கை
Breaking News LIVE OCT 4: ஏகப்பட்ட கேள்விகளை தவெகவினர் மீது வீசுகிறார்கள் - விஜய் அறிக்கை
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Priyanka Mohan : மொத்தமாக சரிந்த மேடை! விழுந்த பிரியங்கா மோகன்! ஷாக்கான ரசிகர்கள்Pawan Kalyan on Udhayanidhi : VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
Breaking News LIVE OCT 4: ஏகப்பட்ட கேள்விகளை தவெகவினர் மீது வீசுகிறார்கள் - விஜய் அறிக்கை
Breaking News LIVE OCT 4: ஏகப்பட்ட கேள்விகளை தவெகவினர் மீது வீசுகிறார்கள் - விஜய் அறிக்கை
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
MS Dhoni: கோபத்தில் டிவியை உடைத்த தோனி? ஹர்பஜன் சிங் சொன்னது குப்பை என சிஎஸ்கே பிசியோ ஆவேசம்
MS Dhoni: கோபத்தில் டிவியை உடைத்த தோனி? ஹர்பஜன் சிங் சொன்னது குப்பை என சிஎஸ்கே பிசியோ ஆவேசம்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர்,  வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Superstar Rajinikanth: ரசிகர்கள் உற்சாகம்..! சிகிச்சை ஓவர், வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த், இரவே டிஸ்சார்ஜ்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 4: மிதுனத்துக்கு பணியில் மாற்றம், கடகத்துக்கு தன்னம்பிக்கை வேண்டும்- உங்கள் ராசிக்கான பலன்
PM Kisan Yojana: பிஎம் கிசான் திட்டம் - விவசாயிகளுக்கான அடுத்த தவணை ரூ.6000 எப்போது கிடைக்கும்? விவரங்கள் இதோ..!
PM Kisan Yojana: பிஎம் கிசான் திட்டம் - விவசாயிகளுக்கான அடுத்த தவணை ரூ.6000 எப்போது கிடைக்கும்? விவரங்கள் இதோ..!
Embed widget