மேலும் அறிய

Sanjay Manjrekar : சர்ச்சை நாயகன் சஞ்சய் மன்ஞ்ரேக்கர்! வாங்கிக்கட்டிய 5 பரிதாபங்கள்!

சர்ச்சைகளுக்கு பெயர் போன சஞ்சய் மன்ஞ்ரேக்கர் வாங்கி கட்டிக்கொண்ட டாப் 5 சம்பவங்கள்!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரராக விளையாடி ஓய்வுபெற்ற பின் சஞ்சய் மன்ஞ்ரேக்கர் 20 ஆண்டுகளாக கிரிக்கெட் வர்ணனையாளர் என்ற பெயரில் சர்ச்சைகளை பேசி வருகிறார். இதில் கிரிக்கெட் வீரர்கள் பலர் வெளிநாட்டு வீரர்களை விமர்சனம் செய்து ஃபேமஸ் ஆவார்கள், ஆனால் சொந்த நாட்டு வீரர்களையே விமர்சனம் செய்து ரசிகர்களிடமிருந்தும், கிரிக்கெட் வீரர்களிடமிருந்தும் வசமாக வாங்கி கட்டி கொள்வது சஞ்சய் மன்ஞ்ரேக்கரின் தனி ஸ்டைல். சாதனைகளை போற்றி கிரிக்கெட் வீரர்கள் பேசப்படுவதும், ட்ரெண்டாவதும் பார்த்திருப்பீர்கள், ஆனால் திட்டி தீர்ப்பதற்காகவே #SanjayManjrekar என்னும் ஹாஷ்டாக் பலமுறை ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆன பெருமையும் இவரையே சேரும்.

கடந்தாண்டு வாங்கிய அடிக்கு பின் கொஞ்சம் அமைதி காத்து வந்த மன்ஞ்ரேக்கர், தற்போது மீண்டும் தன்னுடைய பழைய ஃபார்மிற்கு திரும்பியுள்ளார். அண்மை காலத்தில் சஞ்சய் மன்ஞ்ரேக்கர் கொளுத்திப்போட்ட டாப் 5 சம்பவங்களை தற்போது காணலாம்...

1) ரவீந்திர ஜடேஜா vs சஞ்சய் மன்ஞ்ரேக்கர் 

Sanjay Manjrekar : சர்ச்சை நாயகன் சஞ்சய் மன்ஞ்ரேக்கர்! வாங்கிக்கட்டிய 5 பரிதாபங்கள்!

2019 உலகக்கோப்பை நடைபெற்று கொண்டிருக்கும் போது இந்திய அணி சிறப்பாக விளையாடி கொண்டிருந்த நேரத்தில், ரவீந்திர ஜடேஜா குறித்து ஒரு கருத்து கூறி அனைவர் கவனத்தையும் தன் பக்கம் இழுத்தார் சஞ்சய் மன்ஞ்ரேக்கர். "ரவீந்திர ஜடேஜா ஒரு பிட் & பீசஸ்" அதாவது முழுமையான வீரர் இல்லை என்ற குண்டை போட்டார் சஞ்சய் மன்ஞ்ரேக்கர். இது மிக பெரிய சர்ச்சையாக உருவெடுக்க, அரையிறுதி போட்டியில் களமிறங்கிய ஜடேஜா 59 பந்துகளில் 77 ரன்களை விளாசினார். 

தன் பேட்டிங்கால் பதிலடி கொடுத்த ஜடேஜா, ட்விட்டரில் சஞ்சய் மன்ஞ்ரேக்கரை குறிப்பிட்டு "உன்னை விட நான் இரண்டு மடங்கு அதிக அளவிலான போட்டிகளை விளையாடியுள்ளேன், விளையாடி கொண்டே இருக்கிறேன். மதிக்க கற்றுக்கொள்ளுங்கள், உங்களுடைய வயிற்றுப்போக்கு ஏற்படும் வார்த்தைகளை போதுமான அளவு கேட்டுவிட்டேன்" என்று பதிவிட்டார்.

2) ஹர்ஷா போக்லே vs சஞ்சய் மன்ஞ்ரேக்கர் 

Sanjay Manjrekar : சர்ச்சை நாயகன் சஞ்சய் மன்ஞ்ரேக்கர்! வாங்கிக்கட்டிய 5 பரிதாபங்கள்!

உலக கிரிக்கெட்டில் இவரின் வர்ணனைக்கென்றே தனி ரசிகர்கள் உண்டு - அவர் தான் ஹர்ஷா போக்லே. பெரும்பாலும் கிரிக்கெட் விளையாடிய முன்னாள் வீரர்கள் பின்னாளில் வர்ணனையாளர் ஆவார்கள், ஆனால் எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாத இவரின் கிரிக்கெட் அறிவு ஆழமானது. ஒருமுறை அதை சீண்டி பார்த்த சஞ்சய் மன்ஞ்ரேக்கர் இந்தியா vs வங்கதேசம் இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்று கொண்டிருக்கும்போது நேரலையில் ஹர்ஷாவை வம்பிழுத்தார். சில முறை பேட்ஸ்மேன் தங்கள் ஹெல்மெட்டில் பவுன்சர் பந்துகளை அடி வாங்கினர், இதனை கண்ட ஹர்ஷா போட்டி முடிந்தவுடன் பேட்ஸ்மேன் இடம் பிங்க் பந்துகள் கண்ணுக்கு தெரிவதில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா என கேட்கவேண்டும் என்றார். உடனே "நீங்கள் கேட்டுதான் தெரிஞ்சிக்கணும் ஹர்ஷா, ஆனால் நான் கிரிக்கெட் விளையாடியுள்ளேன், அங்கு என்ன நடக்கிறது என்பது பற்றிய யோசனை எனக்கு உள்ளது" என சஞ்சய் மன்ஞ்ரேக்கர் தெரிவித்தார். அதாவது களத்தில் இறங்கி விளையாடிய அனுபவம் எனக்கு உண்டு, உங்களுக்கு இல்லை என குத்தி காண்பித்தார். ஹர்ஷா போக்லே கேட்டு தெரிந்துகொள்வதில் தவறில்லை என முடித்துக்கொண்டார். இது மிக பெரிய சர்ச்சையாக மாற "நான் தவறு செய்துவிட்டேன், இந்த சம்பவத்திற்காக வருந்துகிறேன்" என சஞ்சய் மன்னிப்பு கேட்டார்.

3) ஹர்திக் பாண்டியா vs சஞ்சய் மன்ஞ்ரேக்கர்

ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெறும் ஒருநாள் தொடருக்கு முன்பு, அந்த தொடர் குறித்து பேசிய சஞ்சய் மன்ஞ்ரேக்கர் "என்னுடய அணியில் ஹர்திக் பாண்டியாவிற்கு இடமில்லை, இந்திய அணி மிடில் ஆர்டரில் இவரை தேர்வு செய்து தவறு செய்துவிட்டது" என்றார். காயத்திலிருந்து மீண்டு வந்த ஹர்திக் பாண்டியா அந்த தொடரில் பந்துவீசாமல், பேட்ஸ்மேனாக மட்டும் செயல்பட்டார். ஒருநாள் போட்டிகளில் ஒரு முழுமையான பேட்ஸ்மேனாக விளையாடும் தகுதி கிடையாது என்றார். அந்த தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய ஹர்திக் பாண்டியா 2 முறை 90 ரன்களை கடந்து 210 ரன்கள் விளாசினார். இறுதியாக என் கணிப்பை பாண்டியா பொய் ஆக்கிவிட்டார் என மூக்கை உடைத்து கொண்டார் சஞ்சய் மன்ஞ்ரேக்கர்.

4) ரவீந்திர ஜடேஜா vs சஞ்சய் மன்ஞ்ரேக்கர்

Sanjay Manjrekar : சர்ச்சை நாயகன் சஞ்சய் மன்ஞ்ரேக்கர்! வாங்கிக்கட்டிய 5 பரிதாபங்கள்!

ஜடேஜாவிற்கு இந்திய டெஸ்ட் அணியில் அதிகம் வாய்ப்பு கொடுப்பதால், ரவிச்சந்திரன் அஸ்வினால் கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியவில்லை. எங்கே நமது இடம் கேள்விக்குறியாகி விடுமோ என அஸ்வின் பந்துவீச்சில் மட்டுமே கவனம் செலுத்துகிறார், ஆனால் டெஸ்ட் போட்டிகளில் 5 சதம் விளாசியுள்ள அஸ்வின் ஒரு சிறந்த ஆல் ரவுண்டர். ஜடேஜாவை தேர்வு செய்து இந்திய அணி அஸ்வின் ஆட்டத்தை வீண் செய்கிறது என அஸ்வின் vs ஜடேஜா இடையே கொளுத்தி போட்டார். ஆனால் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்பவே அஸ்வின், ஜடேஜா இருவரும் அணியில் தேர்வு செய்யப்படுவதாக கேப்டன் விராட் கோலி பதிலடி கொடுத்தார்.

5) ரவிச்சந்திரன் அஸ்வின் vs சஞ்சய் மன்ஞ்ரேக்கர்

Sanjay Manjrekar : சர்ச்சை நாயகன் சஞ்சய் மன்ஞ்ரேக்கர்! வாங்கிக்கட்டிய 5 பரிதாபங்கள்!

இது தான் சஞ்சய் மன்ஞ்ரேக்கர் மிக லேட்டஸ்டாக கிளப்பியுள்ள சர்ச்சை. என்னது அஸ்வின் ஆல் டைம் கிரேட் ஆஹ் ? அஸ்வின் ஒரு சிறந்த வீரர், ஆனால் ஆல் டைம் சிறந்த வீரர் என்றெல்லாம் சொல்லாதீர்கள், அவர் இன்னும் இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் தன்னை நிரூபிக்க வேண்டி இருக்கிறது என்று அவர் பேசிய விவகாரம் தீயாக பரவி வருகிறது.

கபில் தேவ் அடுத்த படியாக 400 டெஸ்ட் விக்கெட் வீழ்த்தி, 5 சதம் அடித்த ஒரே வீரராக வலம்வருகிறார் அஸ்வின். அவரை பார்த்து இப்படி சொல்வதா என ரசிகர்கள் சஞ்சய் மன்ஞ்ரேக்கரை சமூக வலைத்தளங்களில் வறுத்து புரட்டி வருகின்றனர். இந்நிலையில் தனது வழக்கமான பணியில் இதற்கு ரிப்ளை அளித்துள்ள அஸ்வின் "அப்படி சொல்லாத டா சாரி மனசு எல்லாம் வலிக்கறது" என்னும் அந்நியன் திரைப்பட வசனம் அடங்கிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் அனைவரும் இதனை பகிர்ந்து சஞ்சய் மன்ஞ்ரேக்கரை ட்விட்டரில் ட்ரோல் செய்து வருகின்றனர். தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை பேசி வந்த சஞ்சய் மன்ஞ்ரேக்கர் 2020-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க தொடர் மற்றும் ஐபிஎல் தொடர் வர்ணனை குழுவிலிருந்து கழட்டிவிட்டது பிசிசிஐ. இந்நிலையில் சில காலமாக அமைதி காத்து வந்த சஞ்சய் மீண்டும் வாயை திறந்து வாங்கி கட்டிக்கொள்ளும் தனது வழக்கத்தை தொடங்கி இருக்கிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி
பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி
"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Breaking News LIVE: பாசிச கொள்கையை பாஜக கடைபிடிக்கிறது - திமுக எம்.பி ஆ. ராசா 
Breaking News LIVE: பாசிச கொள்கையை பாஜக கடைபிடிக்கிறது - திமுக எம்.பி ஆ. ராசா 
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167 கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin Vs Vijay | திமுக அடி மடியிலேயே.. சவால் விடும் விஜய்..! BEAST MODE ஆரம்பம்Rahul Gandhi | ”அய்யோ பாவம் ராகுல் இது நியாயமா பிர்லா?” சபையில் நடந்தது என்ன?Chennai's Amirtha | அடுத்த கட்ட பாய்ச்சலில் பிரபல கல்வி குழுமம்..பிராண்ட் அம்பாசிடராக ஸ்ரீலீலாJagan Mohan Reddy  vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி
பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி
"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Breaking News LIVE: பாசிச கொள்கையை பாஜக கடைபிடிக்கிறது - திமுக எம்.பி ஆ. ராசா 
Breaking News LIVE: பாசிச கொள்கையை பாஜக கடைபிடிக்கிறது - திமுக எம்.பி ஆ. ராசா 
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167 கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Visu Birthday : குடும்ப சித்திரங்களின் ஏகலைவன் விசுவின் பிறந்தநாள் இன்று !
Visu Birthday : குடும்ப சித்திரங்களின் ஏகலைவன் விசுவின் பிறந்தநாள் இன்று !
அதிரடி! மக்கள் நல்வாழ்வு, வனத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு புதிய செயலாளர்கள்  - முழு விவரம்
அதிரடி! மக்கள் நல்வாழ்வு, வனத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு புதிய செயலாளர்கள் - முழு விவரம்
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
செப்டம்பர் 17-ல் மதுவிலக்கு மாநாடு பெண்கள் தலைமையில் நடத்தப்படும் - விசிக தலைவர் திருமாவளவன்
செப்டம்பர் 17-ல் மதுவிலக்கு மாநாடு பெண்கள் தலைமையில் நடத்தப்படும் - விசிக தலைவர் திருமாவளவன்
Embed widget