மேலும் அறிய

Dhanalakshmi: ஊக்கமருந்து பயன்படுத்திய தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு 3 ஆண்டுகள் தடை.. முழு விவரம்..

தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டபந்தயத்தில் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி காமன்வெல்த் போட்டிகளுக்கான இந்திய அணியில் தேர்வாகியிருந்தார். காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்பாக இவருடைய ரத்த மாதிரியில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து உட்கொள்ள பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதன்காரணமாக அவர் காமன்வெல்த் போட்டிகளுக்கான இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். 

 

இந்நிலையில் தற்போது தனலட்சுமி சர்வதேச போட்டிகளில் பங்கேற்க 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தடகள ஒழுங்குமுறை அமைப்பு(Athletics Integrity Unit) தனலட்சுமிக்கு 3 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தனலட்சுமியின் ரத்த மாதிரியில் மெட்டாடியோனைன் என்ற தடை செய்யப்பட்ட பொருள் கண்டறியப்பட்டிருந்தது. 

 

இந்தப்  பொருளை பயன்படுத்தியதாக ஒப்புக் கொண்டு தனலட்சுமி தடகள ஒழுங்குமுறை அமைப்பிற்கு பதில் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அவருடைய தடைக் காலம் 4 ஆண்டுகளிலிருந்து 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த கால கட்டங்களில் தனலட்சுமியின் முடிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. கடந்த மே 1ஆம் தேதி தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் வென்ற இருந்த பட்டமும் பறிக்கப்பட்டுள்ளது. 

 

கஜகிஸ்தான் நாட்டில் கோஸ்நோவ் சர்வதேச தடகள போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தனலட்சுமி பங்கேற்றார். இந்தப் போட்டியில் பந்தய தூரத்தை 22.89 விநாடிகளில் கடந்து தனலட்சுமி சேகர் தங்கப் பதக்கம் வென்றார். அத்துடன் 200 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் தன்னுடைய சிறப்பான நேரத்தையும் அவர் பதிவு செய்திருந்தார். இதன்மூலம் அவர் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்று இருந்தார். திருச்சி மாவட்டம் கூடுர் கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி சிறு வயதிலேயே தனது தந்தையை இழந்தவர், தாய் விவசாயக் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். தன்னுடைய வறுமையை விளையாட்டு மூலம் தனலட்சுமி வென்று வந்தார். இந்தச் சூழலில் தனலட்சுமியின் தடை சற்று அதிர்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு தமிழ்நாடு தடகள வீரரான டொனால்ட் மகிமைராஜ் ட்ரிபிள் ஜம்ப் போட்டிகளில் பங்கேற்று வந்தார். இவர் கடந்த ஆண்டு நைரோபியில் நடைபெற்ற யு-20 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 4வது இடத்தை பிடித்திருந்தார். அவரும் ஊக்க மருந்து பரிசோதனையில் சிக்கியிருந்தார். அவருக்கு தற்போது 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Embed widget