மேலும் அறிய

Pele Death: மறைந்தது கால்பந்தின் ’கருப்பு முத்து’ .. மூன்று முறை உலகக்கோப்பையை முத்தமிட்ட பீலே காலமானார்..!

எல்லா காலத்திலும் கால்பந்து வீரர்களில் சிறந்த வீரராகவும், மூன்று முறை ஃபிபா உலகக் கோப்பை வென்ற ஒரே வீரராகவும் அறியப்பட்ட பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே தனது 82 வயதில் காலமானார்.

கால்பந்து பற்றி ஒரு அணு அளவு கூட தெரியாத நபர்களிடம் கால்பந்து பற்றி கேட்டால், அவர்கள் உச்சரிக்கும் வீரர்களில் மெஸ்ஸியும், ரொனால்டோவும் இருப்பர். இந்த இரு வீரர்கள் கால்பந்தை கடந்து உலகம் முழுவதும் அவ்வளவு புகழ் பெற்றவர்கள்.

இவர்கள் இருவருக்கும் முன்னதாகவே, தலைவனுக்கு தலைவனாக இருந்தவர்தான் பீலே. எல்லா காலத்திலும் கால்பந்து வீரர்களில் சிறந்த வீரராகவும், மூன்று முறை ஃபிபா உலகக் கோப்பை வென்ற ஒரே வீரராகவும் அறியப்பட்ட பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே தனது 82 வயதில் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் நேற்று இரவு தெரிவித்தனர். 

இதுகுறித்து பீலே மகள் கெலி நாசிமெண்டோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எங்களுக்கு அனைத்தையும் கொடுத்த உங்களுக்கு நன்றி, உங்களை எல்லையில்லாமல் நேசிக்கிறோம். நிம்மதியாக இருங்கள்" என பதிவிட்டு இருந்தார். 

சிகிச்சை:

கடந்த செப்டம்பர் 2021 ஆம் ஆண்டு பீலேவுக்கு பெருங்குடலில் இருந்து கட்டி அகற்றப்பட்டதிலிருந்து பீலே தொடர்ந்து கீமோதெரபிக்கு உட்படுத்தப்பட்டார். அதேபோல், கடந்த 2012 ஆம் ஆண்டு தோல்வியுற்ற இடுப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு உதவியின்றி நடப்பதில் சிரமம் இருந்தது. பிப்ரவரி 2020 இல், கொரோனா வைரஸ் தொற்றுநோய் கண்டறியப்பட்டது. 

வாழ்க்கை குறிப்பு:

எட்சன் அரான்டெஸ் டோ நாசிமெண்டோ என்ற இயற்பெயர் கொண்ட பீலே, 1957 ஆம் ஆண்டு ஜூலை 7ம்தேதி மராகனா நகரில் நடந்த சர்வதேச கால்பந்துப் போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு எதிராக பீலே பிரேசில் அணியில் முதன்முதலாக அறிமுகமாகி தனது 16 வயதிலேயே முதல் கோலை பதிவு செய்தார்.

1958 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் விளையாடி பிரேசில் அணிக்காக கோப்பையை பெற்று தந்தார்.இதன்மூலம் இளம் வயதில் உலகக் கோப்பையை வென்அ ஒரே கால்பந்து வீரர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. 

தொடர்ந்து 1962, 1970 களில் பிரேசில் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் பீலே. இதையடுத்து மூன்று முறை உலகக் கோப்பை வென்ற ஒரே கால்பந்து வீரர் என்ற மிகப்பெரிய பிம்பம் பீலேவுக்கு கிடைத்தது. தற்போது வரை இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியவில்லை. 

பீலே பிரேசிலுக்காக 92 போட்டிகளில் 77 கோல்கள் உட்பட, தனது 21 ஆண்டுகால வாழ்க்கையில் 1,363 போட்டிகளில் 1,281 கோல்களை அடித்ததன் மூலம் உலக சாதனை படைத்துள்ளார். 1958, 1962 மற்றும் 1970 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே வீரர் சாண்டோஸ் ஹீரோ ஆவார்.

2000 ஆம் ஆண்டில், பீலே அவர்களின் நூற்றாண்டின் சிறந்த வீரராக ஃபிஃபாவால் அறிவிக்கப்பட்டார். பிரேசிலுக்காக 77 கோல்களை அடித்து  அதிக கோல் அடித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பீலே விளையாடிய காலத்தில் அவர்தான் அதிக சம்பளம் பெற்ற ஒரே விளையாட்டு வீரராக இருந்தவர். கடந்த 1977 ஆம் ஆண்டு கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்ற பீலே, தற்போது வரை பல கால்பந்து வீரர்களுக்கு ஐகானாக திகழ்ந்து வருகிறார். 

திருமண வாழ்க்கை:

கருப்பு முத்து, ஃபிஃபாவால் 'தி கிரேட்டஸ்ட்' என்றும் அழைக்கப்படும் பிரேசிலிய கால்பந்து வீரர் பீலே, மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு மொத்தம் 7 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget