மேலும் அறிய

Shikhar Dhawan, IPL Record: சாதனை மேல் சாதனை.. ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் ஷிகர் தவான்...!

ஐபிஎல்லில் இந்த சாதனையை நிகழ்த்திய மூன்றாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையை தவான் பெற்றுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 53வது போட்டியில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இதில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் தொடக்க வீரராக களமிறங்கிய ஷிகர் தவான் 47 பந்துகளில் 57 ரன்களுடன் இந்த சீசனில் தனது மூன்றாவது அரைசதத்தை கடந்தார். இவரது பேட்டில் இருந்து 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் பறந்தது. 

இந்த இந்த அரைசதத்தின் மூலம் ஐபிஎல் தொடரில் ஷிகர் தவான் தனது 50வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். ஐபிஎல்லில் இந்த சாதனையை நிகழ்த்திய மூன்றாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையை தவான் பெற்றுள்ளார். டேவிட் வார்னரும், விராட் கோலியும் அவருக்கு முன் இதைச் செய்திருந்தனர். வார்னர் அதிகபட்சமாக 59 அரை சதங்களுடனும் முதலிடத்திலும், விராட் கோலி 50 அரைசதங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். ஷிகர் தவான் தனது 214வது போட்டியில் 213வது இன்னிங்சில் இந்த பெரிய சாதனையை படைத்தார். மேலும் இந்த லீக் வரலாற்றில் விராட் கோலிக்கு அடுத்தபடியாக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையையும் ஷிகர் தவான் பெற்றுள்ளார். தவான் 6593 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், விராட் கோலி  7043 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். 

ஐபிஎல்லில் அதிக அரைசதம் அடித்த வீரர்கள்:

  • டேவிட் வார்னர் - 59
  • விராட் கோலி - 50
  • ஷிகர் தவான் - 50
  • ரோஹித் சர்மா - 41
  • ஏபி டி வில்லியர்ஸ் - 40

ஐபிஎல் 16வது சீசனில் இதுவரை பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் 8 போட்டிகளில் விளையாடியுள்ளார். காயம் காரணமாக ஒரு சில போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. 8 இன்னிங்ஸில் களமிறங்கி 3 அரைசதம் உள்பட 349 ரன்கள் குவித்துள்ளார். இந்த சீசனில் அவரது சிறந்த ஸ்கோர் ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் எடுத்தது. கடந்த சில சீசன்களில் தொடர்ந்து 400-500 ரன்கள் எடுத்த ஒரே பேட்ஸ்மேன் இவர்தான். ஐபிஎல் தொடரில் ஷிகர் தவானின் ஆட்டம் எப்போதும் சிறப்பாக இருந்தது. இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும், ஒரு பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

போட்டி சுருக்கம்: 

பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவானின் 57 ரன்களால் 20 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய கொல்கத்தா அணி, இன்னிங்ஸின் கடைசி பந்தில் 5 விக்கெட்டுகளை இழந்து இந்த இலக்கை எட்டியது.

தோல்விக்கு பிறகு பேசிய ஷிகர் தவான், “கடைசி ஓவரில் அர்ஷ்தீப் அற்புதமாக பந்து வீசினார். இந்தப் போட்டியை கடைசி பந்து வரை எடுத்துச் சென்ற பெருமை அர்ஷ்தீப்பைச் சேரும். எங்களிடம் நல்ல ஆஃப் ஸ்பின் பந்துவீச்சாளர் இல்லை என்று நினைக்கிறேன். அதனால்தான் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு முன்னால் பந்துவீசுவதில் நாங்கள் கொஞ்சம் பலவீனமாகத் தெரிகிறோம். இந்த விக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்” என்று தெரிவித்தார். 

கொல்கத்தா அணிக்கு எதிரான இந்த போட்டியில் பஞ்சாப் அணி தோல்வியடைந்ததால், புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. தற்போது பஞ்சாப் அணிக்கு எஞ்சியிருக்கும் 3 போட்டிகளிலும் வெற்றி பெறுவது பிளேஆஃப் சுற்றுக்கு மிகவும் முக்கியமானது. பஞ்சாப் அணி தனது அடுத்த 2 போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி.. விஷம பிரச்சாரத்தில் ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பு.. சென்னையில் என்ஐஏ அதிரடி!
இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி.. விஷம பிரச்சாரத்தில் ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பு.. சென்னையில் என்ஐஏ அதிரடி!
Joe Root:சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 35 சதம் அடித்த ஜோ ரூட்; எங்கே? எத்தனை சதம்
Joe Root:சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 35 சதம் அடித்த ஜோ ரூட்; எங்கே? எத்தனை சதம்
Pa Ranjith : சாம்சங் ஊழியர்கள் போராட்டத்திற்கு இயக்குநர் ரஞ்சித் ஆதரவு.. தமிழ்நாடு அரசுக்கு கண்டனம்
சாம்சங் ஊழியர்கள் போராட்டத்திற்கு இயக்குநர் ரஞ்சித் ஆதரவு.. தமிழ்நாடு அரசுக்கு கண்டனம்
Group 4 Vacancy: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு இன்ப அதிர்ச்சி; 2,208 இடங்கள் அதிகரிப்பு- கட் ஆஃப் குறைய வாய்ப்பு!
Group 4 Vacancy: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு இன்ப அதிர்ச்சி; 2,208 இடங்கள் அதிகரிப்பு- கட் ஆஃப் குறைய வாய்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thalavai Sundaram Removed From ADMK | தளவாய் நீக்கப்பட்டது ஏன்?தூக்கியடித்த EPS..தூண்டில் போடும் BJPPolice Attack Old Man | வியாபாரியை அறைந்த SI காலில் விழுந்த முதியவர் பரபரப்பு CCTV காட்சிJammu & Kashmir Election Results : சொல்லி அடித்த ராகுல்! மண்ணை கவ்விய பாஜக!மோடி சறுக்கியது எப்படி?Thalavai Sundaram Removed From ADMK:  தளவாய் சுந்தரம் நீக்கம்!எடப்பாடி  அதிரடி..பாஜகவுடன் நெருக்கமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி.. விஷம பிரச்சாரத்தில் ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பு.. சென்னையில் என்ஐஏ அதிரடி!
இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி.. விஷம பிரச்சாரத்தில் ஹிஸ்புத் தஹ்ரீர் அமைப்பு.. சென்னையில் என்ஐஏ அதிரடி!
Joe Root:சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 35 சதம் அடித்த ஜோ ரூட்; எங்கே? எத்தனை சதம்
Joe Root:சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 35 சதம் அடித்த ஜோ ரூட்; எங்கே? எத்தனை சதம்
Pa Ranjith : சாம்சங் ஊழியர்கள் போராட்டத்திற்கு இயக்குநர் ரஞ்சித் ஆதரவு.. தமிழ்நாடு அரசுக்கு கண்டனம்
சாம்சங் ஊழியர்கள் போராட்டத்திற்கு இயக்குநர் ரஞ்சித் ஆதரவு.. தமிழ்நாடு அரசுக்கு கண்டனம்
Group 4 Vacancy: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு இன்ப அதிர்ச்சி; 2,208 இடங்கள் அதிகரிப்பு- கட் ஆஃப் குறைய வாய்ப்பு!
Group 4 Vacancy: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு இன்ப அதிர்ச்சி; 2,208 இடங்கள் அதிகரிப்பு- கட் ஆஃப் குறைய வாய்ப்பு!
Most Hundreds International Cricket :சர்வதேச கிரிக்கெட்டில் ஆக்டிவ் பிளேயர்களின் அதிக சதம்; முதல் இரண்டு இடம் யாருக்கு?
Most Hundreds International Cricket :சர்வதேச கிரிக்கெட்டில் ஆக்டிவ் பிளேயர்களின் அதிக சதம்; முதல் இரண்டு இடம் யாருக்கு?
Goundamani : நடிகர் கவுண்டமணி கைக்கு வந்த 50 கோடி சொத்து...20 ஆண்டுகால போராட்டத்திற்கு பின் வெற்றி
Goundamani : நடிகர் கவுண்டமணி கைக்கு வந்த 50 கோடி சொத்து...20 ஆண்டுகால போராட்டத்திற்கு பின் வெற்றி
ரத்த சோகைக்கு முற்றுப்புள்ளி! அனைவருக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி.. திட்டத்தை நீட்டித்த மத்திய அரசு!
ரத்த சோகைக்கு முற்றுப்புள்ளி! தேர்தல் நெருங்கும் சூழலில் மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!
"அழுக்கேறிய மூளையை சுத்தம் செய்ய முடியாது" தாத்தா ஸ்டைலில் உதயநிதி போட்ட ஒற்றை ட்வீட்!
Embed widget