மேலும் அறிய

Women U-17 football: யு-17 மகளிர் கால்பந்து அணி வீராங்கனையிடம், அத்துமீறிய துணை பயிற்சியாளர்.. நடவடிக்கை என்ன தெரியுமா?

இந்திய மகளிர் யு-17 கால்பந்து அணி தற்போது நார்வேயில் கால்பந்து தொடரில் பங்கேற்க சென்றுள்ளது.

யு-17 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்காக இந்திய 17 வயதுக்குட்ப்பட்ட(யு-17) மகளிர் அணி தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய மகளிர் அணி இத்தாலி சென்று 4 நாடுகள் போட்டியில் பங்கேற்றது. அதன்பின்னர் தற்போது இந்திய யு-17 மகளிர் அணி நார்வே சென்றுள்ளது. 

இந்நிலையில் கடந்த வாரம் இந்திய யு-17 மகளிர் இத்தாலியில் இருந்தப் போது இந்திய வீராங்கனை ஒருவரிடம் துணை பயிற்சியாளர் அலெக்ஸ் ஆம்ப்ரோஸ் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக முதலில் அந்த வீராங்கனையுடன் தங்கியிருந்த மற்றொரு வீராங்கனை பயிற்சியாளரிடம் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் பயிற்சியாளர் தாமஸ் டென்னர்பி இது தொடர்பாக அலெக்ஸ் ஆம்ப்ரோஸ் இடம் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிகிறது. அதில் அவர் தன்னுடைய தவறை ஒப்புக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. 

நடந்தது என்ன?

இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கால்பந்து சம்மளேனத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து துணை பயிற்சியாளர் அலெக்ஸ் ஆம்ப்ரோஸ் தற்போது இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய யு-17 மகளிர் அணி அடுத்து நார்வேயில் கால்பந்து போட்டியில் பங்கேற்க சென்றுள்ளது. அந்த அணியுடன் அலெக்ஸ் ஆம்ப்ரோஸ் செல்லவில்லை. அவர் இந்தியா திரும்பி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Indian Football (@indianfootball)

கால்பந்து சம்மளேனத்தின் நிலைப்பாடு என்ன?

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கால்பந்து சம்மளேனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “இந்திய யு-17 மகளிர் அணி ஐரோப்பிய சுற்றுப்பயணம் செய்திருந்த போது ஒருவர் வீராங்கனையிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அந்த நபரை இந்திய கால்பந்து சம்மளேனம் உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளது. மேலும் அவரை இந்தியாவிற்கு திரும்பி வந்து விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளோம். இதுபோன்ற தவறான நடவடிக்கைகளை இந்திய கால்பந்து சம்மளேனம் ஒருநாளும் அனுமதிக்காது ” எனத் தெரிவித்துள்ளது. 

 

இத்தாலி சென்று இருந்த இந்திய யு-17 மகளிர் அணி 4 நாடுகள் தொடரில் விளையாடியது. அதில் இத்தாலியிடம் 7-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. அதன்பின்னர் சிலி நாடுவிடம் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அதன்பின்னர் மெக்சிகோவிடம் 2-0 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்திருந்தது. இதைத் தொடர்ந்து தற்போது இந்திய யு-17 மகளிர் அணி நார்வே சென்று ஜூலை 1 முதல் ஜூலை 7 வரை கால்பந்து தொடரில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget