மேலும் அறிய

Para Athletics Championships: உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்: அதிக பதக்கம் வென்று இந்தியா புதிய சாதனை..

ஜப்பானில் நடைபெற்று வரும் 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 12 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானின் கோபே நகரில் நடந்து வருகிறது. இதில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர் வீராங்கணைகள் கலந்துக்கொண்டுள்ளனர்.

போட்டியின் 6 வது நாளான நேற்று ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டி நடைபெற்றது. இதில் எப்46 பிரிவில் இந்தியாவை சேர்ந்த சச்சின் சர்ஜிராவ் கிலாரி 16.30 மீட்டர் தூரம் எறிந்து புதிய ஆசிய சாதனை படைத்துள்ளார். மேலும் இந்த பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு முன்பு கடந்த ஆண்டு பாரிசில் நடந்த போட்டியில் 16.21 மீட்டர் தூரம் குண்டு எறிந்து சாதனை படைத்திருந்தார். அந்த சாதனையை இந்த முறை அவர் முறியடித்து மகுடம் சூட்டியுள்ளார். கனடா வீரர் கிரேக் ஸ்டீவர்ட் (16.14 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், குரோஷிய வீரர் லூகா பாகோவிச் (16.04 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

 இதனை தொடர்ந்து ஆண்களுக்கான உருளை கட்டை எறிதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த தரம்பிர் 33.61 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப்பதக்கத்தை  கைப்பற்றினார்.

ஜப்பானின் கோபியில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தீப்தி ஜீவன்ஜி இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்து அசத்தினார்.  தீப்தி ஜீவன்ஜி பெண்களுக்கான 400 மீட்டர் டி20 பிரிவு பந்தயத்தில் 55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனையாக செய்து புதிய வரலாறு படைத்தார். இவரை தொடர்ந்து, துருக்கியின் அய்செல் ஒன்டர் 55.19 வினாடிகளுடன் இரண்டாவது இடத்தையும், ஈக்வடாரின் லிசான்ஷெலா அங்குலோ 56.68 வினாடிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். மொத்தமாக இந்திய அணி இதுவரை 5 தங்கம், 4 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என 12 பதக்கங்களை கைப்பற்றி உள்ளது. இதுவரை நடந்த உலக பாரா தடகள் போட்டியில் இந்தியா கைப்பற்றிய அதிகபட்ச பதக்கங்கள் இதுவே ஆகும்.

கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் 3 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்த 10 பதக்கங்கள் கைப்பற்றி இருந்தது.  சீனா 48 பதக்கங்களுடன் முன்னிலையில் உள்ளது.

ஆண்கள் குண்டு எறிதல் போட்டியில் வென்ற சச்சின் கூறுகையில், “ நான் இப்போட்டியில் தங்கம் வெல்வேன் என நினைத்தேன். தங்கம் கைப்பற்றியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம் பாரிஸில் பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ச்சி பெற்றுள்ளேன். ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வெல்வேன்” என் கூறியுள்ளார்.         

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget