மேலும் அறிய

SANJU SAMSON: “மக்கள் என்னை அதிர்ஷ்டம் இல்லாதவன் என்கிறார்கள்”- சஞ்சு சாம்சன் கடும் வேதனை!

மக்கள் தன்னை துரதிர்ஷ்டவசமான கிரிக்கெட் வீரர் என்று அழைப்பதாக இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் வேதனை தெரிவித்துள்ளார்.

அதிரடி ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன்:

சஞ்சு சாம்சன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுகமானார்.  அந்த போட்டியில் 8வது வீரராக களம் இறங்கிய இவர் 24 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார்.

அதேபோல், சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானர். அதில் மூன்றாவது வீரராக களம் கண்ட சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸர் என மொத்தம் 46 ரன்களை எடுத்தார்.  அதேநேரம், இவர் இன்னும் ஒரு டெஸ்ட் போட்டிகளில் கூட விளையாடவில்லை.


 கடைசியாக இந்த ஆண்டு நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியிலும், அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியிலும் இடம் பெற்றார். அதன் பிறகு ஆசிய கோப்பை 2023, உலகக் கோப்பை 2023, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடர் என்று எதிலும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடர்களில் மட்டுமே இடம் பெற்று விளையாடி வருகிறார்.

இதனிடையே, இதுவரை அவர் விளையாடிய 13 ஒருநாள் போட்டிகளில் 55.71 என்ற சராசரியில் 390 ரன்களை குவித்திருக்கிறார். அதேபோல், இந்திய அணிக்காக 24 டி 20 போட்டிகளில் விளையாடி 374ரன்கள் எடுத்துள்ளார்.

ராஜஸ்தான் கேப்டன்:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக இருக்கிறார். இந்த நிலையில் தான் இந்திய அணியில் இடம் பெறாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்படு தன்னை மக்கள் அதிர்ஷ்டமில்லாதவன் என்று அழைக்கிறார்கள் என்று யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர் வேதனைபட தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், ”இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா எப்போதும் எனக்கு ஆதரவு அளித்துள்ளார். ஐபிஎல் தொடரின் போது நான் கேப்டனான பின் 2வது நபராக எனக்கு போன் செய்தவர் ரோகித் சர்மா தான். ஐபிஎல் தொடரில் எனது அறிமுகம் முதலே என்னை பாராட்டி வருகிறார். மும்பை அணிக்கு எதிராக அதிக சிக்சர் அடிக்கிறாய் என்று கிண்டல் செய்வார். எப்போது நட்புடன் பழகுபவர் ரோகித் சர்மா.

அதேபோல் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்பதால், என்னை பலரும் அதிர்ஷ்டம் இல்லாத வீரர் என்று சொல்கிறார்கள். ஆனால் நான் கிரிக்கெட் விளையாட தொடங்கிய போது, இப்படியான இடத்தில் இருப்பேன் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்” சஞ்சு சாம்சான்.

சசி தரூர் கேள்வி:


இதனிடையே, இந்த நிலையில் சஞ்சு சாம்சனை அணியில் எடுக்காதது குறித்து ரசிகர் ஒருவர், அவரின் சாதனையை குறிப்பிட்டு எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை ஷேர் செய்து, அதற்கு பதில் அளித்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர்" இது உண்மையிலேயே விவரிக்க முடியாதது. சஞ்சு சாம்சனை அணியில் மட்டும் எடுத்திருக்கக் கூடாது. இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்திருக்க வேண்டும்.

சூர்யகுமாரை விட கேரள அணிக்கு, ராஜஸ்தான் அணிக்கு அவர் கேப்டனாக பணியாற்றி அனுபவம் அதிகம். கிரிக்கெட்டை விரும்பும் மக்களுக்கு தேர்வுக்குழு இது குறித்தி விளக்கம் அளிப்பது அவசியம். மேலும், சாஹலை ஏன் தேர்வு செய்யவில்லை ? ” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் தலைவர் சசி தரூர்.

 

 

தலைப்பு செய்திகள்

Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!
கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
ஆசிய கோப்பை 2027 அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget