மேலும் அறிய

மும்பை இந்தியன்ஸ் தொடர் வெற்றி எப்படி சாத்தியம்

தொடர்ந்து வெற்றியை குவிக்கும் மும்பை அணியின் தொடர் உற்சாகத்திற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக கிரிக்கெட் ஜாம்பவான்கள் கருதுகின்றனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி ஏன் ஐபிஎல் ஜாம்பவான் என்பதற்கு ஓர் உதாரணம் கொல்கத்தாவிற்கு எதிரான நேற்றைய ஆட்டம். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சென்னை ஆடுகளத்தில் 150 ரன்களை கடந்தால் போதுமென தீர்மானித்து மும்பை பேட்டிங் செய்தது முக்கியமானதொரு அம்சம். மைதானத்தை கணிப்பதில் தனக்குள்ள திறமையை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தினார் ரோஹித் சர்மா. 153 ரன்களை  கொல்கத்தா எளிதாக சேஸ் செய்யுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையிலும் மும்பை பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. கொல்கத்தா அணிக்கு கில், ராணா ஜோடி வேறு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. வேறொரு அணியாக இருந்திருந்தால் எதுரணியின் தொடக்கத்தை பார்த்து வெற்றி பெறும் நம்பிக்கையையே முழுதாக இழந்திருக்கும். ஆனால் மும்பை இந்தியன்ஸ் தன்னுடைய வாய்ப்புக்காக தவம் இருந்தது.


மும்பை இந்தியன்ஸ் தொடர் வெற்றி எப்படி சாத்தியம்

 எதிரணி செய்யும் ஒரு சிறிய தவறு கூட ஆட்டத்தின் முடிவை மாற்றி எழுதுமென

தன்னுடைய அனுபவத்தில் ரோஹித் தெரிந்து வைத்திருந்தார். முதல் விக்கெட்டை சாஹார் கைப்பற்றியதும் மும்பை அணி வீரர்கள் மத்தியில் உற்சாகம் தொற்றிக் கொண்டது. தற்காப்பு ஃபீல்ட் செட்டப் ஒரே நிமிடத்தில் தாக்குதல் பானியாக மாறியது. சுழற்பந்து வீச்சு மட்டுமே வழியென உணர்ந்த ரோஹித் ஷர்மா சஹார், குருனால் பாண்டியா ஆகியோருக்கு தொடர்ந்து பந்துவீச வாய்ப்பு கொடுத்தார். ஒரு கட்டத்தில் ஆஃப் ஸ்பின் வீசுவதற்காக தானே பந்தைக் கையில் எடுத்தார் அவர். ஜஸ்பிரித் பும்ரா ஓவர்களை டெத் ஓவர்களுக்கு என மீதம் வைத்திருந்தது மும்பையின் முக்கியமான நகர்வு. பும்ராவை சமாளிப்பது கடினம் என்பதால் பிற பந்துவீச்சாளர்களை அடித்து ஆட வேண்டிய கட்டாயம் கொல்கத்தா பேட்ஸ்மேன்களுக்கு ஏற்பட்டது. இந்த உளவியல் ரீதியிலான தாக்குதல் மும்பைக்கு நன்றாகவே கைகொடுத்தது. யாரை குறிவைத்து அடித்து ஆடுவது என்பதில் கொல்கத்தா வீரர்கள் தெளிவில்லாமல் இருந்தனர். உலகின் சிறந்த ஃபினிசர்களான தினேஷ் கார்த்திக், ரஸ்ஸல் போன்றவர்களே சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியதை பார்க்க முடிந்தது. 


மும்பை இந்தியன்ஸ் தொடர் வெற்றி எப்படி சாத்தியம்

பொதுவாக இறுதிக் கட்ட ஓவர்களில் ஸ்லிப் பொசிசனில் பீல்டரை நிற்க வைப்பது மிகவும் அரிது. ஆனால் ரோஹித் நேற்றைய போட்டியில் 18வது ஓவரில் அதனை சாத்தியப்படுத்தினார். இந்த தைரியமான அணுகுமுறை தான் மற்ற அணிகளில் இருந்து மும்பையை தனித்துக் காட்டுகிறது. வர்ணணையாளர் ஶ்ரீகாந்த் பாணியில் சொல்வதென்றால் தில்லுக்கு துட்டு." என்னை விட என் மீது கேப்டன் ரோஹித் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்". இது ஆட்டம் முடிந்ததும் ராகுல் சஹார் தனது கேப்டன் பற்றி கூறிய வார்த்தைகள். நம்பிக்கை, வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு, புதுமை. இதுதான் ரோஹித் சர்மாவின் பலம்.  ஒவ்வொரு வருடமும் மும்பை இந்தியன்ஸ், ஐபிஎல் கோப்பை வெல்ல வாய்ப்புள்ள அணியாக  இருப்பதன் ரகசியம் இதுதான்.

தலைப்பு செய்திகள்

400 வீரர்கள், 22 அணிகள்... புதுச்சேரியை கலக்கிய தென்னிந்திய ஹாக்கிப் போட்டி - வென்றது யார்?
400 வீரர்கள், 22 அணிகள்... புதுச்சேரியை கலக்கிய தென்னிந்திய ஹாக்கிப் போட்டி - வென்றது யார்?
IND Vs ENG T20: 20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
Dhoni Kohli: GOAT ரொனால்டோ ஆட்டத்தை நேரில் ரசித்த LEGENDS தோனி, கோலி
Dhoni Kohli: GOAT ரொனால்டோ ஆட்டத்தை நேரில் ரசித்த LEGENDS தோனி, கோலி
Cristiano Ronaldo: ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..

வீடியோ

கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
அரசு வேலை கொடுக்க கூடாது.! அறிவிப்பை நிறுத்துங்க- சிஎம் விஜய்யை நெருக்கும் சிபிஎம்
அரசு வேலை கொடுக்க கூடாது.! அறிவிப்பை நிறுத்துங்க- சிஎம் விஜய்யை நெருக்கும் சிபிஎம்
Embed widget