மேலும் அறிய

Ronaldo: என்னோட கனவு முடிஞ்சு போச்சு - தோல்வியால் துவண்ட ரொனால்டோ உருக்கமான பதிவு

தனது கனவு முடிந்துவிட்டதாக போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

உலக்கோப்பை கால்பந்தாட்ட தொடரில் மொராக்கோ அணிக்கு எதிரான காலிறுதிப்போட்டியில். நட்சத்திர வீரர் ரொனால்டோ அடங்கிய போர்ச்சுகல் அணி மோதியது. கோடிக்கணக்கான ரசிகர்களுடன் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற போட்டியில், மொராக்கோவுடன் மோதிய போர்ச்சுகல் அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது.  

ரொனால்டோவிற்கு வாய்ப்பு மறுப்பு:

போட்டியின் 42வது நிமிடத்தில் மொரோக்கோ அணி கோல் அடித்தது.  அதன் பின்னர் போட்டியை வென்றால் தான் தொடரில் நீடிக்க முடியும் என்பதால் ரொனால்டோ 50வது நிமிடத்தில் களமிறக்கப்பட்டார். அணி தன்னிடம் உள்நோக்கத்துடன் செயல் பட்டாலும், களமிறங்கியது முதல் தனது உலகக்கோப்பைக் கனவு, ஒட்டுமொத்த போர்ச்சுகலின் பெரும் கனவை மனதில் கொண்டு விளையாடினார்.

ஆனால், பெரும் லட்சியத்துடன் விளையாடியவருக்கு பலன் கிடைக்கவில்லை. மொராக்கோ அணியும் தனது உச்சபட்ச ஆட்டத்தினை வெளிப்படுத்தி ரொனால்டோவை சுற்றி வளைத்து தடுத்துக்கொண்டே இருந்தது. இதனால் போட்டியின் முடிவு மொராக்கோவுக்கு சாதகமாக மாறியது. போட்டியில் தோல்வி அடைந்தது மட்டும் இல்லாமல் உலக்கோப்பை கனவையும் கைவிடவேண்டிய நிலைக்கு ரொனால்டோ ஆளானார். போர்ச்சுகல் அணி ஒருமுறை கூட உலகக்கோப்பையை வெல்லாத நிலையில், உலகக்கோப்பையை வென்று கொடுப்பேன் என சபதம் ஏற்றிருந்த ரொனால்டோ மைதானத்திலேயே கதறி அழுதார். 

 

ரசிகர்கள் சோகம்:

தொடர்ந்து ரொனால்டோவை மூன்று போட்டிகளில் அவமானப்படுத்தும் வகையில் நடத்திய பயிற்சியாளரின் உள்நோக்கம், போர்ச்சுகலின் உலகக்கோப்பை கனவை எட்டமுடியாமல் செய்துள்ளது. 37 வயதான ரொனால்டோ அடுத்த உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு வாய்ப்பு குறைவு என்பதால், தன்னுடைய உலகக்கோப்பை கனவை கத்தாரில் கண்ணீரில் கரைத்துவிட்டார் என்றே கூறவேண்டும். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Cristiano Ronaldo (@cristiano)

கனவுக்காக போராடினேன்:

இந்நிலையில் ரொனால்டோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்த்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  "போர்ச்சுகலுக்கு உலகக் கோப்பையை வெல்வதே எனது வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியக் கனவாக இருந்தது.  அதிர்ஷ்டவசமாக, பல சர்வதேச பரிமாண பட்டங்களை நான் வென்றேன், ஆனால் நம் நாட்டின் பெயரை உலகின் மிக உயர்ந்த மட்டத்தில் வைப்பது எனது மிகப்பெரிய கனவாக இருந்தது. அதற்காக நான் போராடினேன். இந்தக் கனவுக்காக நான் கடுமையாகப் போராடினேன்.

எனது கனவு முடிந்தது - ரொனால்டோ


16 ஆண்டுகளில் 5 உலகக்கோப்பை தொடர்களில் போர்ச்சுகல் அணிக்காக சிறந்த வீரர்களுடன் சேர்ந்து, மில்லியன் கணக்கான போர்ச்சுகல் மக்களின் ஆதரவுடன், வெற்றிக்காக நான் எனது அனைத்தையும் கொடுத்தேன். எல்லாவற்றையும் களத்தில் விட்டுவிட்டேன். நான் சண்டையை விரும்பவில்லை அதேநேரம்  எனது  கனவையும் கைவிடவில்லை.

துரதிர்ஷ்டவசமாக, எனது கனவு முடிந்தது. மோசமாக எதிர்வினையாற்றுவது மதிப்புக்குரியது அல்ல. அதிகம் பேசப்பட்டுள்ளது, அதிகம் எழுதப்பட்டுள்ளது, ஆனால் போர்ச்சுகல் மீதான எனது அர்ப்பணிப்பு ஒரு போதும் மாறவில்லை என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் எப்போதும் எல்லோருடைய இலக்குக்காகவும் போராடும் ஒரு நபராக இருந்தேன். எனது அணியினர் மற்றும் எனது நாட்டை நான் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன். இப்போதைக்கு, சொல்வதற்கு அதிகம் இல்லை. நன்றி, போர்ச்சுகல். நன்றி, கத்தார். கனவு நீடிக்கும் போது அழகாக இருந்தது... இப்போது, ​​ஒரு நல்ல ஆலோசகராக இருக்க வேண்டிய நேரம் இது, மேலும் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க அனுமதிக்க வேண்டும்" என, ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார்.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget