மேலும் அறிய

TNPL Cricket : டி.என்.பி.எல். சாம்பியன் பட்டத்தை "மதுரை பாந்தர்ஸ்" கைப்பற்றும் - கேப்டன் சதுர்வேதி நம்பிக்கை

டி.என்.பி.எல். சாம்பியன் பட்டத்தை மதுரை பாந்தர்ஸ் அணி கைப்பற்றும் என்று மதுரை கேப்டன் சதுர்வேதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய அளவில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறுவதைப் போல தமிழ்நாடு அளவில் டி.என்.பி.எல். நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான டி.என்.பி.எல். போட்டி வரும் 23-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் சென்னை, கோவை, மதுரை, சேலம் என தமிழ்நாட்டின் 8 முக்கிய நகரங்களின் அணிகள் மோதுகின்றனர். இவற்றில் முக்கிய அணியாக மதுரை பாந்தர்ஸ் கருதப்படுகிறது. இந்த அணியின் புதிய சீருடை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், மதுரை பாந்தர்ஸ் அணியின் சி.இ.ஒ எம்.டி.மகேஷ்,மதுரை பாந்தர்ஸ் அணியின் டைடில் ஸ்பான்சரான மார்க் நிறுவனத்தின் சி.எப்.ஒ மோகன் பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்கள்.

மதுரை பாந்தர்ஸ் அணியின் கேப்டன் சதுர்வேதி பேசியதாவது “6வது சீசன் டி.என்.பி.எல் தொடர் 23 ஆம் தேதி தொடங்குகிறது. 5 சீசன் தொடர்களும் மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. மதுரை பாந்தர்ஸ் அணி சிறப்பான வீரர்களை ஏலம் எடுத்து வருகிறது. இந்த முறையும் அணிக்கு சிறந்த வீரர்கள் கிடைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பயிற்சியின் போது சிறப்பாக விளையாடினார்கள். பாண்டிச்சேரியில் நடைபெற்ற பயிற்சி போட்டியிலும் வீரர்கள் அனைவரும் சிறந்த திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதனால் இந்த சீசனில் மதுரை பாந்தர்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது. 


TNPL Cricket : டி.என்.பி.எல். சாம்பியன் பட்டத்தை

டி.என்.பி.எல் தொடரை சர்வதேச அளவில் எடுத்து செல்வதற்கான முயற்சியில் அதன் நிர்வாகிகள் ஈடுபடுவார்கள் என்று நம்புகிறோம். கொரோனாவால் கடந்த சீசன் சென்னையில் மட்டும் நடைபெற்றது. ஆனால், இந்த சீசனில் கூடுதலாக கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஆகிய இரண்டு இடங்களில் போட்டி நடைபெறுகிறது. இது எங்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கிறது. அங்கு சென்று விளையாடுவதை ரொம்பவே எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அனைத்து இடங்களிலும் எங்கள் அணிக்கு மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம். எதிர்காலத்தில் மதுரையிலும் டி.என்.பி.எல் தொடர் நடைபெறும் என்று நம்புகிறேன்.” என்றார்.

சீருடையை வெளியிட்டு பேசிய மதுரை பாந்தர்ஸ் அணியின் சி.இ.ஓ எம்.டி.மகேஷ், “டி.என்.பி.எல் கிரிக்கெட் இளைஞர்களிடம் கிரிக்கெட்டை கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பதோடு, கிரிக்கெட்டில் புதிய புரட்சியையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  இந்த வருட தொடரில் மதுரை பாந்தர்ஸ் சிறப்பாக விளையாடும். அணியின் வீரர்கள் அனைவரும் அதிக திறன் கொண்டவர்கள். குறிப்பாக ஐ.பி.எல் தொடரில் விளையாடிய வருண் சக்கரவர்த்தி மீண்டும் டி.என்.பி.எல் தொடரில் விளையாடுகிறார். இதனால் இந்த வருடம் டி.என்.பி.எல் தொடர் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்க்கும்.


TNPL Cricket : டி.என்.பி.எல். சாம்பியன் பட்டத்தை

முன்பெல்லாம் ரஞ்சி டிராபி விளையாடினால் தான் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியும். ஆனால், இப்போதெல்லாம் மாறிவிட்டது. டி.என்.பி.எல் விளையாடினால், அதன் மூலம் ஐ.பி.எல் தொடரில் விளையாடி இந்திய அணியில் இடம் பிடித்து விடுகிறார்கள். எனவே, இப்போது கிரிக்கெட் முழுமையாக மாறிவிட்டது. டி20 தொடர் போல் டி10 போட்டிகளும் வந்துவிட்டது. அதனால், டி.என்.பி.எல் தொடரில் விளையாட இளைஞர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். வீரர்கள் தேர்வு வைத்தால் குறைந்தது 1000 வீரர்கள் வருகிறார்கள்.

வருண் சக்ரவர்த்தி, நட்ராஜ் போன்ற வீரர்கள் டி.என்.பி.எல் மூலமாக கிரிக்கெட்டில் மிகப்பெரிய வளர்ச்சியடைந்திருப்பதால், இளைஞர்களுக்கு மட்டும் இன்றி கிரிக்கெட் உலகிற்கும் டி.என்.பி.எல் புதிய வழியை திறந்திருக்கிறது” என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
IPL 2025 KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
IPL 2025 KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
"பேச அனுமதி கேட்டா.. ஓடிட்டாரு" ஓம் பிர்லா மீது ராகுல் காந்தி புகார்.. என்னாச்சு?
Embed widget