மேலும் அறிய

IND vs RSA: தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்தியாவின் செயல்பாடு எப்படி? டி20 வரலாறு இதுதான்!

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி 20 போட்டிகளில் இந்திய அணி இதுவரை தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

ஐசிசி உலகக் கோப்பை தோல்விக்கு பின்னர், இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் டி 20 தொடரில் விளையாடியது. 

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம்:

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இச்சூழலில், வரும் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி டிசம்பர் 10 ஆம் தேதி டி 20 போட்டியில் விளையாடுகிறது. இந்நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி 20 தொடரையும் இந்திய அணி வெல்லுமா என்பது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:

முன்னதாக, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரிலும் இந்திய அணியின் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விராட் கோலி, ரோகித் சர்மா, முகமது ஷமி உள்ளிட்ட வீரர்கள் ஓய்வில் இருக்கின்றனர். 

மறுபுறம், ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியில் டேவிட் மில்ல, ஹென்றிக்ஸ், க்ளாசென் உள்ளிட்ட அதிரடி வீரர்கள் இருப்பதாலும், சொந்த மண்ணில் இந்த போட்டி நடைபெறுவதாலும் தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால், இந்திய அணிதான் இதற்கு முன்னர் அங்கு டி20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. 

டி 20 போட்டியில் இதுவரை:

சர்வதேச அளவில் இந்திய அணி இதுவரை தென்னாப்பிரிக்க அணியுடன் 24 டி20 போட்டிகளில் மோதியுள்ளது. இதில், இந்திய அணி 13 வெற்றிகளையும், தென்னாப்பிரிக்க அணி 10 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது.  ஒரு போட்டி மட்டும் மழையால் கைவிடப்பட்டுள்ளது. முன்னதாக, இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் அந்த அணியுடன் 7 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில், இந்திய அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்க அணி 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. 

தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக ரன்கள்:

தென்னாப்பிரிக்க மண்ணில் டி 20 போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் யார் என்று பார்த்தால், ஷிகர் தவான் 143 ரன்களும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன், எம்.எஸ்.தோனி 135 ரன்களும், ரோஹித் சர்மா 135 ரன்களும் எடுத்துள்ளனர்.

அதேபோல், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி 20 போட்டியில் இதுவரை எந்த இந்திய வீரரும் சதம் அடித்ததில்லை. ஆனால், ரோகித் சர்மா மட்டும் இரண்டு முறை அரைசதம் அடித்துள்ளார். அதேபோல், தனிநபர் அதிகபட்ச  ஸ்கோராக மணிஷ் பாண்டே 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற டி 20 போட்டியில் 79 ரன்கள் எடுத்துள்ளார்.

அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர்கள்:

தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர்களாக, புவனேஷ் குமார் மற்றும் ஆர்.பி.சிங் ஆகியோர் இருக்கின்றனர். அதன்படி, புவனேஷ் குமார் 7 விக்கெட்டுகளையும், ஆர்பி சிங் 4 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.  மேலும், ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரராகவும் புவனேஷ் குமார் தான் இருக்கிறார். அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 24 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS : “முதல்வர் மு.க.ஸ்டாலின் எனும் Dictator” EPS சரமாரி விமர்சனம்..!
“முதல்வர் மு.க.ஸ்டாலின் எனும் Dictator” EPS சரமாரி விமர்சனம்..!
TN 12th Result 2025: பிளஸ் 2 மாணவர்களே.. முன்கூட்டியே வெளியாகும் தேர்வு முடிவுகள்- எப்போ தெரியுமா?
TN 12th Result 2025: பிளஸ் 2 மாணவர்களே.. முன்கூட்டியே வெளியாகும் தேர்வு முடிவுகள்- எப்போ தெரியுமா?
Southwest Monsoon: அக்னி வெயிலுக்கு குட்-பை! முன் கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்!
Southwest Monsoon: அக்னி வெயிலுக்கு குட்-பை! முன் கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்!
சாலை விபத்தில் காயமடைந்தால் இனி இலவச சிகிச்சை! தனியார் மருத்துவமனைக்கும் உத்தரவு போட்ட ஒன்றிய அரசு
சாலை விபத்தில் காயமடைந்தால் இனி இலவச சிகிச்சை! தனியார் மருத்துவமனைக்கும் உத்தரவு போட்ட ஒன்றிய அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi meet PM Modi | இந்தியா - பாகிஸ்தான் பதற்றம்! மோடி - ராகுல் சந்திப்பு! பின்னணி என்ன?DMDK Issue: விஜயபிரபாகரனுக்கு பதவியா? தேமுதிகவில் வெடித்த கலகம்! சமாளிப்பாரா பிரேமலதா? | Premalathaபுலம்பிய திமுக நிர்வாகிகள்! உடனே ஆக்‌ஷன் எடுத்த ஸ்டாலின்! அமைச்சர்களிடம் கறார்Madurai Aadheenam: திட்டமிட்டு கொல்ல முயற்சியா? குற்றம் சாட்டிய மதுரை ஆதீனம்! வெளியான CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS : “முதல்வர் மு.க.ஸ்டாலின் எனும் Dictator” EPS சரமாரி விமர்சனம்..!
“முதல்வர் மு.க.ஸ்டாலின் எனும் Dictator” EPS சரமாரி விமர்சனம்..!
TN 12th Result 2025: பிளஸ் 2 மாணவர்களே.. முன்கூட்டியே வெளியாகும் தேர்வு முடிவுகள்- எப்போ தெரியுமா?
TN 12th Result 2025: பிளஸ் 2 மாணவர்களே.. முன்கூட்டியே வெளியாகும் தேர்வு முடிவுகள்- எப்போ தெரியுமா?
Southwest Monsoon: அக்னி வெயிலுக்கு குட்-பை! முன் கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்!
Southwest Monsoon: அக்னி வெயிலுக்கு குட்-பை! முன் கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்!
சாலை விபத்தில் காயமடைந்தால் இனி இலவச சிகிச்சை! தனியார் மருத்துவமனைக்கும் உத்தரவு போட்ட ஒன்றிய அரசு
சாலை விபத்தில் காயமடைந்தால் இனி இலவச சிகிச்சை! தனியார் மருத்துவமனைக்கும் உத்தரவு போட்ட ஒன்றிய அரசு
IPL 2025 playoffs scenarios: ஐபிஎல் - 7 அணிகள், 4 இடங்கள் - பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல யாருக்கு என்ன வாய்ப்பு? RCB, MI, PBKS
IPL 2025 playoffs scenarios: ஐபிஎல் - 7 அணிகள், 4 இடங்கள் - பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல யாருக்கு என்ன வாய்ப்பு? RCB, MI, PBKS
கத்திரி வெயிலுக்கு ரெஸ்ட் கொடுத்த கனமழை... வெந்து போய் கிடந்த திருச்சி மக்களுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ்
கத்திரி வெயிலுக்கு ரெஸ்ட் கொடுத்த கனமழை... வெந்து போய் கிடந்த திருச்சி மக்களுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ்
Karthigai Deepam: வளையல் போட வரும் கார்த்தி! கைதாகிறாரா ராஜராஜன் - கார்த்திகை தீபத்தில் பரபரப்பு
Karthigai Deepam: வளையல் போட வரும் கார்த்தி! கைதாகிறாரா ராஜராஜன் - கார்த்திகை தீபத்தில் பரபரப்பு
Defence Mock Drill: போர்க்கால ஒத்திகை - 244 மாவட்டங்கள், தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? என்னவெல்லாம் நடக்கும்? - முழு விவரம்
Defence Mock Drill: போர்க்கால ஒத்திகை - 244 மாவட்டங்கள், தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? என்னவெல்லாம் நடக்கும்? - முழு விவரம்
Embed widget