மேலும் அறிய

IND vs RSA: தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்தியாவின் செயல்பாடு எப்படி? டி20 வரலாறு இதுதான்!

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி 20 போட்டிகளில் இந்திய அணி இதுவரை தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

ஐசிசி உலகக் கோப்பை தோல்விக்கு பின்னர், இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் டி 20 தொடரில் விளையாடியது. 

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம்:

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இச்சூழலில், வரும் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி டிசம்பர் 10 ஆம் தேதி டி 20 போட்டியில் விளையாடுகிறது. இந்நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி 20 தொடரையும் இந்திய அணி வெல்லுமா என்பது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:

முன்னதாக, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரிலும் இந்திய அணியின் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விராட் கோலி, ரோகித் சர்மா, முகமது ஷமி உள்ளிட்ட வீரர்கள் ஓய்வில் இருக்கின்றனர். 

மறுபுறம், ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியில் டேவிட் மில்ல, ஹென்றிக்ஸ், க்ளாசென் உள்ளிட்ட அதிரடி வீரர்கள் இருப்பதாலும், சொந்த மண்ணில் இந்த போட்டி நடைபெறுவதாலும் தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால், இந்திய அணிதான் இதற்கு முன்னர் அங்கு டி20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. 

டி 20 போட்டியில் இதுவரை:

சர்வதேச அளவில் இந்திய அணி இதுவரை தென்னாப்பிரிக்க அணியுடன் 24 டி20 போட்டிகளில் மோதியுள்ளது. இதில், இந்திய அணி 13 வெற்றிகளையும், தென்னாப்பிரிக்க அணி 10 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது.  ஒரு போட்டி மட்டும் மழையால் கைவிடப்பட்டுள்ளது. முன்னதாக, இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் அந்த அணியுடன் 7 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில், இந்திய அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்க அணி 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. 

தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக ரன்கள்:

தென்னாப்பிரிக்க மண்ணில் டி 20 போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் யார் என்று பார்த்தால், ஷிகர் தவான் 143 ரன்களும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன், எம்.எஸ்.தோனி 135 ரன்களும், ரோஹித் சர்மா 135 ரன்களும் எடுத்துள்ளனர்.

அதேபோல், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி 20 போட்டியில் இதுவரை எந்த இந்திய வீரரும் சதம் அடித்ததில்லை. ஆனால், ரோகித் சர்மா மட்டும் இரண்டு முறை அரைசதம் அடித்துள்ளார். அதேபோல், தனிநபர் அதிகபட்ச  ஸ்கோராக மணிஷ் பாண்டே 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற டி 20 போட்டியில் 79 ரன்கள் எடுத்துள்ளார்.

அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர்கள்:

தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர்களாக, புவனேஷ் குமார் மற்றும் ஆர்.பி.சிங் ஆகியோர் இருக்கின்றனர். அதன்படி, புவனேஷ் குமார் 7 விக்கெட்டுகளையும், ஆர்பி சிங் 4 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.  மேலும், ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரராகவும் புவனேஷ் குமார் தான் இருக்கிறார். அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 24 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகிறது வேலை! நீதிமன்ற உத்தரவால் பெரும் பரபரப்பு
அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகிறது வேலை! நீதிமன்ற உத்தரவால் பெரும் பரபரப்பு
பாட்டி, தம்பி, காதலி.. ஐவர் கொடூர கொலை.. வேட்டை ஆடிய இளைஞர்.. கேரளாவை அதிரவிட்ட சம்பவம்!
பாட்டி, தம்பி, காதலி.. ஐவர் கொடூர கொலை.. வேட்டை ஆடிய இளைஞர்.. கேரளாவை அதிரவிட்ட சம்பவம்!
AUS vs SA: மழை வந்தா என்ன? ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்க போட்டியில் ரசிகர்களுக்கு காத்திருக்கு விருந்து!
AUS vs SA: மழை வந்தா என்ன? ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்க போட்டியில் ரசிகர்களுக்கு காத்திருக்கு விருந்து!
TN Rains: மீண்டும் ஆரம்பிக்கும் மழையின் ஆட்டம்! நாளை மறுநாள் முதல் எந்தெந்த மாவட்டத்தில் வெளுக்கப்போது?
TN Rains: மீண்டும் ஆரம்பிக்கும் மழையின் ஆட்டம்! நாளை மறுநாள் முதல் எந்தெந்த மாவட்டத்தில் வெளுக்கப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகிறது வேலை! நீதிமன்ற உத்தரவால் பெரும் பரபரப்பு
அரசு தற்காலிக பணியாளர்களுக்கு பறிபோகிறது வேலை! நீதிமன்ற உத்தரவால் பெரும் பரபரப்பு
பாட்டி, தம்பி, காதலி.. ஐவர் கொடூர கொலை.. வேட்டை ஆடிய இளைஞர்.. கேரளாவை அதிரவிட்ட சம்பவம்!
பாட்டி, தம்பி, காதலி.. ஐவர் கொடூர கொலை.. வேட்டை ஆடிய இளைஞர்.. கேரளாவை அதிரவிட்ட சம்பவம்!
AUS vs SA: மழை வந்தா என்ன? ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்க போட்டியில் ரசிகர்களுக்கு காத்திருக்கு விருந்து!
AUS vs SA: மழை வந்தா என்ன? ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்க போட்டியில் ரசிகர்களுக்கு காத்திருக்கு விருந்து!
TN Rains: மீண்டும் ஆரம்பிக்கும் மழையின் ஆட்டம்! நாளை மறுநாள் முதல் எந்தெந்த மாவட்டத்தில் வெளுக்கப்போது?
TN Rains: மீண்டும் ஆரம்பிக்கும் மழையின் ஆட்டம்! நாளை மறுநாள் முதல் எந்தெந்த மாவட்டத்தில் வெளுக்கப்போது?
காங்கிரஸை கை கழுவுகிறாரா சசி தரூர்? பாஜக அமைச்சருடன் போட்டோ.. யாரும் எதிர்பார்க்கல!
காங்கிரஸை கை கழுவுகிறாரா சசி தரூர்? பாஜக அமைச்சருடன் போட்டோ.. யாரும் எதிர்பார்க்கல!
Maha Shivratri 2025: நாளை மகாசிவராத்திரி! கட்டாயம் கோயிலில் இருக்க வேண்டிய நேரம் என்ன?
Maha Shivratri 2025: நாளை மகாசிவராத்திரி! கட்டாயம் கோயிலில் இருக்க வேண்டிய நேரம் என்ன?
மிஸ் பண்ணிடாதீங்க.. ரயில்வேயில் 32,438 காலியிடங்கள்; ஆர்ஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
மிஸ் பண்ணிடாதீங்க.. ரயில்வேயில் 32,438 காலியிடங்கள்; ஆர்ஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
''முதல்வர்போல விளம்பர மோகத்தில் திரியும் அன்பில்; அமைச்சராக நீடிக்க உரிமையில்லை''- சாடும் அண்ணாமலை!
''முதல்வர்போல விளம்பர மோகத்தில் திரியும் அன்பில்; அமைச்சராக நீடிக்க உரிமையில்லை''- சாடும் அண்ணாமலை!
Embed widget