மேலும் அறிய

Sai Sudharsan: சர்வதேச அளவில் அறிமுகப் போட்டியிலேயே அரைசதம்; தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த சாய் சுதர்சன்

தென்னிப்பிரிக்கா அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான போட்டியிலேயே இந்திய அணியின் தொடக்க வீரர் சாய் சுதர்சன் அரைசதம் விளாசி அமர்க்களப்படுத்தியுள்ளார். மேலும் இவர் தமிழ்நாட்டினைச் சேர்ந்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் தர கிரிக்கெட்டில் சாய் சுதர்சன் விளையாடி இருந்தாலும் அவர் சர்வதேச போட்டியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணம் ஐபிஎல் தொடர்தான். கடந்த 16வது ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் சார்பாக விளையாடிய சாய் சுதர்சனின் ஆட்டம் வெகுவாக பாராட்டப்பட்டது. குஜராத் அணிக்காக 8 போட்டிகளில் விளையாடிய அவர், மூன்று அரைசதங்கள் உட்பட 362 ரன்கள் குவித்திருந்தார். இதுவரை 12 முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலும், 25 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடி, முதல்தர கிரிக்கெட்டில் 843 ரன்களும், லிஸ்ட் ஏவில் 1269 ரன்களும் எடுத்துள்ளார். டி20 போட்டிகளைப் பொறுத்தவரையில் ஐபிஎல் மற்றும் டி.என்.பி.எல் போட்டிகள் என மொத்தம் 31 டி20 போட்டிகளில் விளையாடி 1324 ரன்கள் சேர்த்துள்ளார். 

இந்நிலையில் அவருக்கு இந்திய அணியில் தொடக்கத்திலேயே வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது நடைபெற்றுவரும் தென்னாப்பிரிக்கா தொடரின் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் சேர்க்கப்பட்டார். அணியில் சேர்க்கப்பட்ட சாய் சுதர்சன் போட்டியில் களமிறக்கப்படுவாரா என்ற கேள்வி இருந்தது. ஆனால் அவருக்கு முதலாவது ஒருநாள் போட்டியிலேயே வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இந்திய அணியின் தொடக்க வீரராகவும் களமிறக்கப்பட்டார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்சன் தனது சர்வதேச அறிமுகப் போட்டியில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தது மட்டும் இல்லாமல் இறுதிவரை களத்தில் தனது விக்கெட்டினை இழக்காமல் இருந்தார். இவர் 43 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரிகளை விளாசி 55 ரன்கள் குவித்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான போட்டியிலேயே அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். தமிழ்நாட்டினைச் சேர்ந்த வீரரான இவர் சர்வதேச கிரிக்கெட்டில் தான் அறிமுகமான போட்டியிலேயே அரைசதம் விளாசி இறுதிவரை களத்தில் தனது விக்கெட்டினை இழக்காமல் இருந்து தமிழ்நாட்டில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களுக்கு உத்வேகத்தினையும் தமிழ்நாட்டிற்கு பெருமையையும் ஏற்படுத்தியுள்ளார். 

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இன்று அதாவது டிசம்பர் 17ஆம் தேதி இந்திய அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதன்படி இந்திய அணி பந்து வீசத் தொடங்கியது. 

இளம் இந்திய பந்து வீச்சாளர்கள் பலமான தென்னாப்பிரிக்கா அணியை என்ன செய்யவுள்ளனர் என்ற ஆவல் இந்திய ரசிகர்களுக்கு இருந்தது. தென்னாப்பிரிக்கா தரப்பிலோ இந்திய அணிக்கு சவாலான இலக்கினை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கினர். ஆனால் தென்னாப்பிரிக்கா அணி 27.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளும் அவேஷ்கான் 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி 16.2 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயம் செய்த 117 ரன்கள் இலக்கினை 2 விக்கெட்டுகள் இழந்த நிலையில் எட்டியது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 12 பேர் பலி; 16 பேரை காணவில்லை - இந்திய வெளியுறவுத்துறை தகவல்
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 12 பேர் பலி; 16 பேரை காணவில்லை - இந்திய வெளியுறவுத்துறை தகவல்
மாறி மாறி தூதுவிடும் ஓபிஎஸ்! - கண்டுகொள்வாரா இபிஎஸ்! - அதிமுகவின் புது வியூகம் எடுபடுமா?
மாறி மாறி தூதுவிடும் ஓபிஎஸ்! - கண்டுகொள்வாரா இபிஎஸ்! - அதிமுகவின் புது வியூகம் எடுபடுமா?
SVAMITVA: சொத்து - நிலப் பிரச்னைக்கு தீர்வு: ஸ்வமித்வா திட்டத்தை அறிமுகம் செய்த அரசு: திட்டம் சொல்வது என்ன?
சொத்து - நிலப் பிரச்னைக்கு தீர்வு: ஸ்வமித்வா திட்டத்தை அறிமுகம் செய்த அரசு: திட்டம் சொல்வது என்ன?
"குண்டும் குழியாக சாலை அமைத்தால் சிறை" கொதித்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கையை விரித்த கூட்டணியினர்! கழற்றி விடப்பட்ட காங்கிரஸ்! என்ன செய்யப் போகிறார் ராகுல்?BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 12 பேர் பலி; 16 பேரை காணவில்லை - இந்திய வெளியுறவுத்துறை தகவல்
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 12 பேர் பலி; 16 பேரை காணவில்லை - இந்திய வெளியுறவுத்துறை தகவல்
மாறி மாறி தூதுவிடும் ஓபிஎஸ்! - கண்டுகொள்வாரா இபிஎஸ்! - அதிமுகவின் புது வியூகம் எடுபடுமா?
மாறி மாறி தூதுவிடும் ஓபிஎஸ்! - கண்டுகொள்வாரா இபிஎஸ்! - அதிமுகவின் புது வியூகம் எடுபடுமா?
SVAMITVA: சொத்து - நிலப் பிரச்னைக்கு தீர்வு: ஸ்வமித்வா திட்டத்தை அறிமுகம் செய்த அரசு: திட்டம் சொல்வது என்ன?
சொத்து - நிலப் பிரச்னைக்கு தீர்வு: ஸ்வமித்வா திட்டத்தை அறிமுகம் செய்த அரசு: திட்டம் சொல்வது என்ன?
"குண்டும் குழியாக சாலை அமைத்தால் சிறை" கொதித்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரி!
மாமனார் மருமகன் இடையே மோதல்; அம்மிக்கல்லில் விழுந்து உயிரிழந்த மாமனார் - சீர்காழியில் சோகம்
மாமனார் மருமகன் இடையே மோதல்; அம்மிக்கல்லில் விழுந்து உயிரிழந்த மாமனார் - சீர்காழியில் சோகம்
அடடே.. ஆசிரியர்களுக்கு இத்தனை நாட்கள் லீவா? யுஜிசி வரைவு அறிக்கை சொல்வது என்ன?
அடடே.. ஆசிரியர்களுக்கு இத்தனை நாட்கள் லீவா? யுஜிசி வரைவு அறிக்கை சொல்வது என்ன?
கரூர்: சட்டவிரோதமாக சேவல் சண்டை: 26 பேர் கைது! கட்டுக்கட்டாக சிக்கிய ரூபாய் நோட்டுகள்!
கரூர்: சட்டவிரோதமாக சேவல் சண்டை: 26 பேர் கைது! கட்டுக்கட்டாக சிக்கிய ரூபாய் நோட்டுகள்!
Suchitra on Ajith; அஜித்தை சீண்டிய சுசித்ரா... கொந்தளிக்கும் ரசிகர்கள்!! அப்படி என்ன சொன்னாங்க.?
அஜித்தை சீண்டிய சுசித்ரா... கொந்தளிக்கும் ரசிகர்கள்!! அப்படி என்ன சொன்னாங்க.?
Embed widget