மேலும் அறிய

Ind vs Aus : சோலி முடிஞ்சிது! 13 ஆண்டுகளுக்கு பிறகு பாக்சிங் டெஸ்டில் இந்தியா படுதோல்வி..

Ind vs Aus: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி

இந்தியாவுக்கு எதிரான பாக்சிங் டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. 

BGT தொடர்: 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல்  போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது, இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி டிராவில் முடிந்தது. இதனால் பாக்சிங் டே டெஸ்ட் முக்கியமான போட்டியாக பார்க்கபட்டது.

ஆஸ்திரேலியா ஆதிக்கம்:

மெல்போர்னில்  தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது, ஆஸ்திரேலிய அணி ஸ்டீவன் ஸ்மித்தின் சதத்தால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸ்சில் 475 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட் எடுத்தார். 

அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸ்சில் 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, 191/6 என்கிற இக்கட்டான நிலையில் நிதிஷ் குமார் ரெட்டி சதம் அடித்து இந்திய அணி கவுரமான ஸ்கோர் அடிக்க உதவினார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸ்சில் 106 ரன்கள் முன்னிலை பெற்றது.

340 ரன்கள் இலக்கு: 

அடுத்ததாக இரண்டாவது இன்னிங்ஸ்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு பும்ரா தலைவலி தந்தார்.  அவரது வேகத்தில் ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், லபுஷேனே -கம்மின்ஸ் ஜோடி களத்தில் நங்கூரமிட்டு நல்ல நிலைக்கு கொண்டு சென்றனர். கடைசி விக்கெட்டுக்கு  நாதன் லயன் மற்றும் ஸ்காட் போலாண்ட் இந்திய அணி பவுலர்களுக்கு தண்ணீ காட்டினர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணிக்குன் 340 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. 

இதையும் படிங்க: BGT 2024 : ரெண்டு பேரும் வீட்டுக்கு கிளம்புங்க.. கோலி ரோகித் சொதப்பல் பேட்டிங்.. கொதித்து எழும்பும் ரசிகர்கள்

இந்தியா தடுமாற்றம்:

கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல் ராகுல் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பண்ட் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர், தேனீர் இடைவேளை வரை இருவரும் நிதானமாக ஆடி வந்தனர், இந்திய அணி தேனீர் இடைவேளை வரை 112/3 விக்கெட்டுகளை மட்டும் இழந்திருந்ததால், இந்த போட்டி டிராவில் முடியும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. 

இந்தியா தோல்வி: 

தேனீர் இடைவேளை முடிந்து வந்தவுடன் போட்டி அப்படியே ஆஸ்திரேலிய பக்கம் திரும்பியது, ரிஷப் பண்ட் தேவையில்லாமல் டிராவில் ஹெட் பந்தில் சிக்சருக்கு ஆசைப்பட்டு மார்ஷ்சிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகினார். இதன் பின்னர் வந்த ஜடேஜா 2 ரன்னிலும், நிதிஷ் ரெட்டி 1ரன்னிலும் நடையை கட்டினர், சிறப்பான முறையில் விளையாடி வந்த ஜெய்ஸ்வால் சர்ச்சையான முடிவால் 82 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். 

இதனால் இந்திய அணியின் தோல்வி உறுதியானது, இறுதியில் இந்திய அணி 155 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்த போட்டியை ஆஸ்திரேலியை 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக  13 ஆண்டுகளுக்கு பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. 

 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
Keerthana:
Keerthana: "லஞ்சம் கொடுக்க வேண்டாம்... இதுதான் நல்லாட்சி.." முதலமைச்சர் விஜய்யைப் பாராட்டிய அமைச்சர் கீர்த்தனா
CM Vijay Speech: 5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
Embed widget