மேலும் அறிய

Rohit Sharma On T20: டி-20 கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுகிறேனா? - ரோகித் சர்மா விளக்கம்

சர்வதேச டி-20 போட்டிகளில் இருந்து விலகுவது குறித்து, ரோகித் சர்மா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கை உடனான டி-20 தொடர்:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 2-1 என்ற கணக்கில் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை இழந்தது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்க உள்ளது. இதையொட்டி, டி-20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட ரோகித் சர்மா மற்றும் கோலி போன்ற மூத்த வீரர்கள் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். தொடரின் முதல் போட்டி நாளை கவுகாத்தியில் நடைபெற உள்ளது.

ரோகித் செய்தியாளர் சந்திப்பு:

போட்டியை முன்னிட்டு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பந்து வீசிய போது, காலில் அசவுகரியத்தை உணர்ந்ததன் காரணமாக, இலங்கை உடனான தொடரில் இருந்து பும்ரா விலகியதாக விளக்கமளித்தார். நாளைய போட்டியில் இளம் வீரர் சுப்மன் கில் தன்னுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் எனவும், இஷான் கிஷானுடன் விளையாட முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது என்றும் கூறினார்.

டி-20யில் ஓய்வா?

டி-20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ரோகித் சர்மா, "தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவது என்பது சாத்தியமற்றது. இந்திய அணிக்காக அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாடும் வீரர்களுக்கு போதுமான அளவு ஓய்வு கொடுக்க வேண்டும். நானும் அந்த இடத்தில் உள்ளேன். நியூசிலாந்து அணி உடன் 3 டி-20 போட்டிகள் உள்ளன.ஐபிஎல் தொடர் நிறைவடைந்த பிறகு என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம். தற்போதைய சூழலில் டி-20 போட்டிகளில் இருந்து விலகுவது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை" என ரோகித் சர்மா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

பிசிசிஐ போடும் திட்டம்:

விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்புகளில் இருந்து விலகிய பிறகு, தொடக்க ஆட்டக்காரரான  ரோகித் சர்மா 3 விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக பொறுப்பேற்றார். அதைதொடர்ந்து, அவரது தலைமயில் ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்ற இந்திய அணி தோல்வியையே சந்தித்தது. உலகக்கோப்பை தொடருக்குப் பின் நடைபெற்ற, இரண்டு டி-தொடரிலும் ரோகித் சர்மாவிற்கு ஓய்வளிக்கப்பட்டது. அதில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட பாண்ட்யா, தொடரையும் வென்று அசத்தினார்.

இதனிடையே, ஐசிசி தொடர்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் இந்திய அணி, ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பிசிசிஐ நிர்வாகமும் அணியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதன்படி, ரோகித் மற்றும் கோலி போன்ற மூத்த வீரர்களுக்கு டி-20 போட்டிகளில் வாய்ப்பு வழங்காமல், 2024ம் ஆண்டு நடைபெற உள்ள டி-20 உலகக்கோப்பை தொடருக்காக பாண்ட்யா தலைமையில் இளம் இந்திய அணியை உருவாக்க, பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக டி-20 கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா விரைவில் விலகுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த ஃபார்மெட்டில் இருந்து விலகுவது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை என ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
FM Nirmala Sitharaman: ”ரூபாய்” என்பது தமிழே கிடையாது, தவிர்க்க வேண்டிய மொழி பேரினவாதம் - நிதியமைச்சர் ஆவேசம்
FM Nirmala Sitharaman: ”ரூபாய்” என்பது தமிழே கிடையாது, தவிர்க்க வேண்டிய மொழி பேரினவாதம் - நிதியமைச்சர் ஆவேசம்
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget 2025: நெருப்பை பற்றவைத்த தமிழ்நாடு! இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்யும் தங்கம் தென்னரசு
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
FM Nirmala Sitharaman: ”ரூபாய்” என்பது தமிழே கிடையாது, தவிர்க்க வேண்டிய மொழி பேரினவாதம் - நிதியமைச்சர் ஆவேசம்
FM Nirmala Sitharaman: ”ரூபாய்” என்பது தமிழே கிடையாது, தவிர்க்க வேண்டிய மொழி பேரினவாதம் - நிதியமைச்சர் ஆவேசம்
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
TN Budget 2025 live: தமிழ்நாடு பட்ஜெட்..! மக்களின் எதிர்பார்ப்புகள் தீருமா? வாக்குறுதிகள் சட்டமாகுமா?
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
Embed widget