மேலும் அறிய

முதல் உலகக்கோப்பை வென்று 40 ஆண்டுகள்; 1983-இல் இந்திய அணி வென்ற நாள்… 5 முக்கிய திருப்புமுனை தருணங்கள்!

இந்திய அணி அந்த ஆண்டு கோப்பையை வெல்லும் என்று யாருமே எதிர்பாராத நேரம் அது. அந்த நேரத்தில் வென்றது தான் பலருடைய உழைப்பை, பங்களிப்பை இன்றும் எடுத்து காட்டுகிறது.

1983 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றி வெறும் விளையாட்டு வெற்றியை தாண்டியது. அது ஒரு அழியாத தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமின்றி, அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கு பெரும் உத்வேகம் அளித்த ஒன்று. இதனால் 1983 கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அழியாத இடத்தைப் பிடித்துள்ளது. அந்த ஆண்டின் இறுதிப்போட்டியில் வென்று கோப்பையை தூக்கிய நாள் இன்று. குறிப்பாக இந்திய அணி அந்த ஆண்டு கோப்பையை வெல்லும் என்று யாருமே எதிர்பாராத நேரம் அது. அந்த நேரத்தில் வென்றது தான் பலருடைய உழைப்பை, பங்களிப்பை இன்றும் எடுத்து காட்டுகிறது. குறிப்பாக இந்திய அணி அப்போது கோப்பையை கைப்பற்ற அவர்களுக்கு திருப்பு முனையாக அமைந்தது ஐந்து தருணங்கள் உள்ளன.

  1. ஜிம்பாப்வேக்கு எதிரான ஆச்சரியமளிக்கும் வெற்றி

என்பதுகளின் ஜாம்பவான் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கபில் தேவ் ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் எடுத்தது அந்த ஆட்டத்தின் மிகப்பெரிய திருப்பம். அவர் ஆடிய இந்த குறிப்பிடத்தக்க ஆட்டதிற்கான விடியோ காட்சிகள் இல்லை என்பது இன்றும் பலருக்கு சோகம் தான். அழகான டன்பிரிட்ஜ் வெல்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஆடிய இந்திய அணி 9 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளையும், பின்னர் 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும் இழந்து ஒட்டுமொத்தமாக சரிந்த நிலையில், அவ்வளவுதான் ஆட்டம் முடிந்தது, மதிய உணவுக்கு முன்னரே ஆட்டம் முடியும் என்று பலரும் எண்ணினர். ஆனால் அசாதாரணமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கபில் தேவ். மைதானத்தின் சிறிய பவுண்டரி தூரங்களை இலக்காக வைத்து அவர் ஆடிய ஆட்டம் பலருக்கும் அதிசயம்தான். கபிலின் சதம் வெறும் 72 பந்துகளில் வந்தது, மேலும் அவர் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அயராமல் பேட்டிங் செய்து, ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் எடுத்தார். அவரது ஆட்டத்தில் 6 சிக்ஸர்கள் மற்றும் 16 பவுண்டரிகள் அடங்கும், இது ODI வரலாற்றில் ஒரு அழியாத முத்திரையை ஏற்படுத்தியது. அவரது அதிரடி ஆட்டம் இந்திய அணியை பேரழிவின் விளிம்பில் இருந்து மீட்டு,  8 விக்கெட் இழப்புக்கு 266 ரன்களுக்கு கொண்டு சென்றது. அந்த போட்டியில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் வென்றது.

முதல் உலகக்கோப்பை வென்று 40 ஆண்டுகள்; 1983-இல் இந்திய அணி வென்ற நாள்… 5 முக்கிய திருப்புமுனை தருணங்கள்!

  1. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி வெற்றி

1983 கிரிக்கெட் உலகக் கோப்பையின் அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் வெற்றி, அவர்களின் வரலாற்று வெற்றியை நோக்கி அவர்களைத் தூண்டிய ஒரு முக்கிய தருணமாகும். மைக் பிரேர்லி தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட இந்தியா, எப்படியும் வெல்லாது என்ற நிலையில்தான் போட்டிக்குள் நுழைந்தது, இருப்பினும், அபாரமான உறுதியையும் திறமையையும் அந்த போட்டியில் இந்திய அணியினர் வெளிப்படுத்தினர். இந்த போட்டியில் மொஹிந்தர் அமர்நாத்தின் ஒரு தனித்துவமான செயல்திறன் வெளிப்பட்டது. அவர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் முக்கிய பங்கு வகித்தார். அமர்நாத் மூன்று முக்கியமான விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியது, இங்கிலாந்தை ஒரு சுமாரான ஸ்கோருக்ககுள் கட்டுப்படுத்த உதவியது. பேட்டிங்கிலும் சரிந்த இந்தியாவை மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்தி அமர்நாத் காப்பாற்றி வெற்றிக்கு இழுத்து சென்றார். ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்து, மற்ற பேட்ஸ்மேன்களின் முக்கிய பங்களிப்புகளுடன் இணைந்து அவரது இன்னிங்ஸ் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தது. இங்கிலாந்துக்கு எதிரான இந்த வெற்றி இந்திய அணிக்குள் அபார நம்பிக்கையை ஏற்படுத்தியது. 

தொடர்புடைய செய்திகள்: World Cup Qualifiers: முன்னாள் உலக சாம்பியனை மண்ணை கவ்வ வைத்த ஜிம்பாப்வே..! வெ. இண்டீஸ் பரிதாப தோல்வி..!

  1. சுனில் வால்சனின் மிகப்பெரிய பங்களிப்பு

சுனில் வால்சன், அடிக்கடி கவனிக்கப்படாவிட்டாலும், 1983 கிரிக்கெட் உலகக் கோப்பை வெற்றியில் இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க பங்களிப்பை வழங்கினார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இறுதிப் போட்டியில் வால்சனின் பங்கு இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்தது. அதுவரை களமிரங்காத வால்சன், இறுதிப் போட்டிக்கான லெவன் அணியில் தான் முதன்முறையாக அந்த ஆண்டு உலகக்கோப்பையில் இறங்கினார். முக்கியமான போட்டியில் கூடுதல் வேகப்பந்து வீசாளரை சேர்க்க அணி செய்த முடிவை பயனுள்ளதாக மாற்றினார். பந்து வீச்சில் வல்சனின் ஆட்டம் பாராட்டுக்குரியது. அவரது துல்லியமான மற்றும் ஒழுக்கமான பந்துவீச்சால், வலிமையான மேற்கிந்திய தீவுகளின் பேட்டிங் வரிசையை திணறடித்தார். அவரது ஏழு ஓவர்களில், வெறும் 20 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து மேற்கிந்தியத் தீவுகளின் தொடக்க ஆட்டக்காரர் கார்டன் க்ரீனிட்ஜின் முக்கியமான விக்கெட்டைக் கைப்பற்றினார். ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தவர் ஏன் இன்றும் பேசப்படுகிறது என்றால், அந்த 7 ஓவர்கள் மட்டுமல்லாமல் களத்தில் அவர் செய்த செயல்தான். அனைத்து வீரர்களுக்கும் ஒரு பெரும் உத்வேகத்தை ஆட்டம் முழுவதும் தந்து கொண்டே இருந்தது இந்திய அணியின் வெற்றிக்கு பெருமளவில் உதவியது. மறுமுனையில் அவரது சிக்கனமான பந்து வீச்சு, எதிரணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்த அதுவே பல விக்கெட்டுகளாக மாறியது குறிப்பிடத்தக்கது.

முதல் உலகக்கோப்பை வென்று 40 ஆண்டுகள்; 1983-இல் இந்திய அணி வென்ற நாள்… 5 முக்கிய திருப்புமுனை தருணங்கள்!

  1. சிறப்பான பீல்டிங்

1983 கிரிக்கெட் உலகக் கோப்பையின் போது இந்தியாவின் பீல்டிங் அவர்களின் வெற்றிக்கு முக்கிய அம்சமாகும். அணி வீரர்கள் அனைவரும் சுறுசுறுப்பு மற்றும் தடகள திறன்களை களத்தில் வெளிப்படுத்தியது, பெரும்பாலும் அவர்களின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு செயல்திறன்களால் மறைந்தது என்றே சொல்லலாம். இந்திய வீரர்கள் குறிப்பிடத்தக்க ஃபீல்டிங், கூர்மையான கேட்ச்சிங் திறன்களையும், போட்டி முழுவதும் வெளிப்படுத்தினர். அற்புதமான ரன் அவுட்கள், டைவ்கள் மற்றும் கடினமான கேட்சுகள் ஆகியவற்றுடன் அவர்களின் பீல்டிங் திறமை முக்கியமான தருணங்களில் பெரிய கருவியாக இருந்தது. இறுதிப் போட்டியில் விவ் ரிச்சர்ட்ஸை வெளியேற்ற, கபில் தேவ் பின்னால் ஓடிச்சென்று பிடித்த கேட்ச் இன்றும் பேசப்படும் அற்புதமான கேட்ச் ஆகும்.

  1. பரபரப்பான இறுதிப் போட்டி

புகழ்பெற்ற மேற்கிந்திய பந்துவீச்சு தாக்குதலுக்கு எதிராக 184 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்த இந்திய அணி பேட்மேன்கள் பெரும் பாராட்டுக்குரியவர்கள். இந்திய பேட்டிங் வரிசை தொடக்கத்தில் தடுமாறியது. இருப்பினும், இந்திய மிடில் ஆர்டரின் தூணான அமர்நாத், மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அசைக்க முடியாத உறுதியை வெளிப்படுத்தினார். 26 ரன்களில் ஆட்டமிழக்காத அவரது ஆட்டம் இந்திய இன்னிங்ஸை ஸ்திரப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியது. லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டதே இந்திய அணி வெற்றிக்கு காரணம். குறிப்பாக சையத் கிர்மானி, தேவையான 24 ரன்களை எடுத்தார். ஆனாலும், அந்த வரலாற்று சிறப்புமிக்க நாளில் உண்மையிலேயே வெளிச்சம் இந்திய பந்துவீச்சாளர்கள் மீதுதான் விழுந்தது. கபிலின் எழுச்சியூட்டும் தலைமையின் கீழ், இந்திய பந்துவீச்சு தாக்குதல் ஒரு அற்புதமான செயல்திறனை வழங்கியதுதான் அதற்கு காரணம். இந்திய பந்துவீச்சாளர்களின் இடைவிடாத அழுத்தத்தால் மேற்கிந்திய அணி 140 ரன்களுக்கு ஆட்டமிழக்க, உலகின் சிறந்த அணி அதிர்ச்சியளிக்கும் வகையில் சரிந்தது. இது கிரிக்கெட் வரலாற்றில் மிக வியத்தகு திருப்பங்களில் ஒன்றாக அமைந்து இன்று வரலாறாக மாறி நிற்கிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
Arshdeep Singh: மிட்செலிடம் அத்துமீறிய அர்ஷ்தீப்.. மன்னிப்பு கேட்டும் செஞ்சுவிட்ட ஐசிசி! முழு விவரம்
Arshdeep Singh: மிட்செலிடம் அத்துமீறிய அர்ஷ்தீப்.. மன்னிப்பு கேட்டும் செஞ்சுவிட்ட ஐசிசி! முழு விவரம்
T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கு பிசிசிஐ-யின் பிரம்மாண்ட பரிசு! எவ்வளவு தெரியுமா?
T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கு பிசிசிஐ-யின் பிரம்மாண்ட பரிசு! எவ்வளவு தெரியுமா?
Sanju Samson:
Sanju Samson: "இது ஒரு கனவு!" வலிகளே எனது பலம்.. உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் சஞ்சு சாம்சன் உருக்கம்
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Embed widget