![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
விழுப்புரம்: கீழ்பெரும்பாக்கம் பழமை வாய்ந்த திரௌபதியம்மன் கோவில் 473வது ஆண்டு தீமிதி விழா
விழுப்புரம்: கீழ்பெரும்பாக்கம் பழமை வாய்ந்ததுமான திரெளபதியம்மன் கோவிலில் 473 வது ஆண்டு தீமிதி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
![விழுப்புரம்: கீழ்பெரும்பாக்கம் பழமை வாய்ந்த திரௌபதியம்மன் கோவில் 473வது ஆண்டு தீமிதி விழா Villupuram 473rd Dimithi Festival at the ancient draupadi amman temple in Kiliperumbakkam TNN விழுப்புரம்: கீழ்பெரும்பாக்கம் பழமை வாய்ந்த திரௌபதியம்மன் கோவில் 473வது ஆண்டு தீமிதி விழா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/31/daf77ffd1e0655c225ee39709edaf9691680278496226194_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம்: விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் நடைபெற்ற 473 வது ஆண்டு தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி தீ மிதித்த போது ஒருவர் தீ குண்டத்தில் விழுந்ததால் பரபரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதும், பழமை வாய்ந்ததுமான திரெளபதியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தீமிதி திருவிழா விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் 473-ம் ஆண்டாக தீமிதி திருவிழாவிற்காக கொடியேற்ற விழா கடந்த 22-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் 30-ந் தேதி வரை எருமணந்தாங்கல், பொய்யப்பாக்கம், மகராஜபுரம், கீழ்பெரும்பாக்கம், சாலையாம்பாளையம், நாப்பாளைய தெரு, காகுப்பம் உள்ளிட்ட 9 உபயதாரர்களால் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று சாமி வீதிவுலா நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை முதல் திரெளபதியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் மாலை 5 மணியளவில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதற்காக கோவில் முன்பு தீக்குண்டம் அமைக்கப்பட்டதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து, அம்மனுக்கு நடந்த சிறப்பு தீபாராதனையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தீமிது திருவிழாவின் போது இளைஞர் ஒருவர் தீ குண்டத்தில் இறங்கியபோது தீ குண்டத்தில் விழந்ததையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தீயனைப்பு துறையினர் இளைஞரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் தீ குண்டத்தில் விழுந்த இளைஞர் உடம்பில் தீ காயங்களுடன் உயிர் தப்பினார். இச்சம்பவத்தால் தீமிதி திருவிழாவில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)