மேலும் அறிய

அண்ணாமலையார் கோயிலில் நாளை சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் - கோவில் நிர்வாகம் அறிவிப்பு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 30 லட்ச ரூபாயில் புதியதாக புனரமைக்கப்பட்ட சுப்பிரமணியர் தேர் நாளை மாடவிதியில் வெள்ளோட்டம் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவிப்பு

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவம்பர் 27ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்குகிறது. இந்த திருவிழா தொடர்ந்து பத்து நாட்கள் கோலாலமாக நடைபெறும். பத்துநாட்களும் காலையில் விநாயகர், சந்திரசேகரும் , இரவு நேரங்களில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர்,வள்ளி, தெய்வானையும் உண்ணாமுலை அம்மனுடன் அண்ணாமலையாரும் , பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் மாடவீதியில் வீதி உலா நடைப்பெற்றும் அதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர். 

 


அண்ணாமலையார் கோயிலில் நாளை சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் -  கோவில் நிர்வாகம் அறிவிப்பு

அதனைத்தொடர்ந்து தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான டிசம்பர் 6-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு திருக்கோவில் கருவரையினுள் பரணி தீபமும் அதனைத் தொடர்ந்து அன்று மாலை திருக்கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலையே சிவனாக வனங்க கூடிய தீப மலையின் மீது 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

தற்பொழுது கொரோனா தொற்றுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பழைய உற்சாகத்துடன் மீண்டும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு விமரிசையாக கொண்டாடப்பட உள்ள நிலையில் அனைத்து சுவாமி வாகனங்களும் பழுது நீக்கும் பணியிலும், பஞ்சமூர்ததிகளின் திருத் தேர்கள் பழுது நீக்கும் பணிகளும் மும்முரமாக நடைபெற்றது. இந்த ஆண்டு வருகின்ற டிசம்பர் 3-ஆம் தேதி ஏழாம் திருநாளான அன்று மாட வீதிகளில் விநாயகர், சுப்ரமணியர், அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச ரதங்களும் மாட வீதிகளில் ஒன்றன்பின் ஒன்றாக தனித்தனியே பக்தர்கள் தேரினை வடம்பிடித்து இழுத்து வலம் வரவுள்ளனர்.

 


அண்ணாமலையார் கோயிலில் நாளை சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டம் -  கோவில் நிர்வாகம் அறிவிப்பு

 

இந்நிலையில் மாட வீதியில் வலம் வரவுள்ள சுப்பிரமணிய தேரினை பழுது பார்க்கும் பணியில் கடந்த மூன்று மாதங்களாக ஊழியர்கள் ஈடுபட்ட நிலையில் 45 அடி உயரம் கொண்ட சுப்ரமணியர் தேரில் புதியதாக அலங்கார கால்கள், ஐந்து அடுக்குகள் (பண்டிகைகள்), கலச மட்டம் வரை ஊழியர்களால் 30 லட்சம் மதிப்பில் புதியதாக செய்யப்பட்டுளளது. இந்நிலையில் தேரின் உறுதி தன்மையை அறிய வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (20.11.2022) காலை 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் மாட வீதிகளில் வெள்ளோட்டம் நடைபெற உள்ளதாக கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த வெள்ளோட்ட நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், அறநிலையத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சுப்பிரமணிய தேரினை திருவண்ணாமலை நகரில் மட்டும் இன்றி பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் தேரினை வடம்பிடித்து இழக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
TN Rain Alert:  கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain
சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
TN Rain Alert:  கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
பைஜூ ரவீந்திரனுக்கு ₹9,591 கோடி அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காரணம் என்ன?
பைஜூ ரவீந்திரனுக்கு ₹9,591 கோடி அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காரணம் என்ன?
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
Kerala Pooja Bumper Lottery: முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
Embed widget