மேலும் அறிய

தஞ்சை: வேங்கராயன் குடிகாடு வில்லாயி அம்மன் கோயிலில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி

தஞ்சை மாவட்டம் வேங்கராயன் குடிக்காட்டில் உள்ள வில்லாயி அம்மன் கோயிலில் இன்று ஐப்பசி பவுர்ணமியை ஒட்டி உலக நன்மை வேண்டி திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.

தஞ்சை மாவட்டம் வேங்கராயன் குடிக்காட்டில் உள்ள வில்லாயி அம்மன் கோயிலில் இன்று ஐப்பசி பவுர்ணமியை ஒட்டி உலக நன்மை வேண்டி திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் வேங்கராயன் குடிக்காட்டில் அமைந்துள்ளது வில்லாயி அம்மன் கோயில். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் உலக நன்மைக்காக ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

காசவள நாடு நமச்சிவாய அருள்நெறி சபை மற்றும் தஞ்சாவூர் அப்பர் தமிழ் மன்றம் ஆகியவை இணைந்து வில்லாயி அம்மன் சன்னதியில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியை நடத்தினர். விநாயகர் வணக்கத்துடன் ஏழு திருமுறைகளும் பாடப்பட்டது. நேற்று காலையில் தொடங்கிய திருவாசக முற்றோதல் தொடர்ந்து இடைவிடாமல் 5 மணி நேரத்துக்கு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அப்பர் தமிழ் மன்ற நிறுவனர் ஆசிரியை புவனசுந்தர லட்சுமி, முனைவர் திருநாவுக்கரசர், காச வளநாடு நமச்சிவாய அருள்நெறி சபை நிர்வாகிகள் தர்மராஜ், கோவிந்தராஜ், செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை வேங்கராயன் குடிகாடு கிராம மக்கள் செய்திருந்தனர். இதையடுத்து வில்லாயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.  நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் ஐப்பசி மாத பவுர்ணமியை ஒட்டி கிரிவலம் நடந்தது. சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டு குழு டிரஸ்ட் சார்பில் பவுர்ணமி கிரிவலம் ல்லப கணபதி சன்னதியில் இருந்து துவங்கியது. திண்டுக்கல் துரைசாமி தலைமை வகித்தார். சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் துணை ஆணையர் உமாதேவி, சுவாமிமலை காவல் ஆய்வாளர் சிவ செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இமயவன் வழிகாட்டுதலுடன் கூட்டு வழிபாடு மற்றும் கிரிவலமும் நடைபெற்றது.

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு டிரஸ்ட் நிர்வாகி கேசவராஜன், மேனேஜிங் டிரஸ்டி சிவசங்கரன், செயலாளர் சேகர், பொருளாளர் சுவாமிநாதன், ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், டிரஸ்டிகள் மாணிக்கம், சண்முகம், நெடுஞ்செழியன் மற்றும் பலர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இதேபோல் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் பிளாஞ்சேரியில் உள்ள காமாட்சி கைலாசநாதர் கோயிலில் சரபசூலினி அம்பாளுக்கு ஜெயமங்களா யாகம் உள்ளது. இக்கோயிலில் தனி சன்னதி கொண்டு அஷ்ட பைரவர்கள் சூழ சரபசூலினி அம்மன் அருள்பாலிக்கிறார்.

பவுர்ணமியையொட்டி இக்கோயிலில் ஜெயமங்களா யாகம் நடந்தது. கோயில் பரம்பரை அறங்காவலர் நாகராஜ சிவாச்சாரியார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் பூஜைகளை செய்தனர். மகா தீபாராதனையை தொடர்ந்து சரப சூலினி சன்னதிக்கு எடுத்துவரப்பட்ட புனித நீரால் அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் தீபாராதனை நடைபெற்றது. யாகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் கண்ணன் குருக்கள் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MP Salary Hike: எம்.பி.க்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய அரசு; தினசரி அலவன்ஸ், ஓய்வூதியமும் அதிகரிப்பு- இவ்வளவா?
MP Salary Hike: எம்.பி.க்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய அரசு; தினசரி அலவன்ஸ், ஓய்வூதியமும் அதிகரிப்பு- இவ்வளவா?
IIT Madras: மின்சார வாகனங்களுக்கு பூஸ்ட்; ஐஐடி சென்னையின் புதிய திட்டம்- என்ன தெரியுங்களா?
IIT Madras: மின்சார வாகனங்களுக்கு பூஸ்ட்; ஐஐடி சென்னையின் புதிய திட்டம்- என்ன தெரியுங்களா?
அதிர்ச்சி… அரசுப்பள்ளி ஆண்டுவிழா; கலந்துகொண்டு பாட்டு பாடிய சரித்திர பதிவேடு குற்றவாளி!
அதிர்ச்சி… அரசுப்பள்ளி ஆண்டுவிழா; கலந்துகொண்டு பாட்டு பாடிய சரித்திர பதிவேடு குற்றவாளி!
Anganwadi Workers: என்னது ஒரே மாசத்துலயா.?! அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்...
என்னது ஒரே மாசத்துலயா.?! அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Puducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்Eknath Shinde | ”ஏக்நாத் ஷிண்டே துரோகியா?”காமெடியனை மிரட்டும் சிவசேனா சூறையாடப்பட்ட STUDIO...!Vignesh Puthur Profile | CSK-வை கதறவிட்ட விக்னேஷ் புதூர் யார்? AUTO DRIVER மகன் To IPL நாயகன்! | MI | Chennai Super Kings | IPL 2025 | Dhoni

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MP Salary Hike: எம்.பி.க்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய அரசு; தினசரி அலவன்ஸ், ஓய்வூதியமும் அதிகரிப்பு- இவ்வளவா?
MP Salary Hike: எம்.பி.க்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய அரசு; தினசரி அலவன்ஸ், ஓய்வூதியமும் அதிகரிப்பு- இவ்வளவா?
IIT Madras: மின்சார வாகனங்களுக்கு பூஸ்ட்; ஐஐடி சென்னையின் புதிய திட்டம்- என்ன தெரியுங்களா?
IIT Madras: மின்சார வாகனங்களுக்கு பூஸ்ட்; ஐஐடி சென்னையின் புதிய திட்டம்- என்ன தெரியுங்களா?
அதிர்ச்சி… அரசுப்பள்ளி ஆண்டுவிழா; கலந்துகொண்டு பாட்டு பாடிய சரித்திர பதிவேடு குற்றவாளி!
அதிர்ச்சி… அரசுப்பள்ளி ஆண்டுவிழா; கலந்துகொண்டு பாட்டு பாடிய சரித்திர பதிவேடு குற்றவாளி!
Anganwadi Workers: என்னது ஒரே மாசத்துலயா.?! அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்...
என்னது ஒரே மாசத்துலயா.?! அங்கன்வாடி பணியாளர்கள் குறித்து அமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்...
11th 12th Exam: 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; கடைசி நாளில் இதைக் கட்டாயம் செய்ங்க- பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!
11th 12th Exam: 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; கடைசி நாளில் இதைக் கட்டாயம் செய்ங்க- பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!
ஏன் நீங்க இணக்கமா இல்லையா? தீர்க்க வேண்டியது தானே? – இபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி
ஏன் நீங்க இணக்கமா இல்லையா? தீர்க்க வேண்டியது தானே? – இபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி
CM Thank ADMK: அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
அதிமுகவிற்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா.?
நர்ஸை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை ஆன்லைனில் வெளியிட்ட நபர்! அதிரடி காட்டிய  போலீஸ்
நர்ஸை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவை ஆன்லைனில் வெளியிட்ட நபர்! அதிரடி காட்டிய போலீஸ்
Embed widget