மேலும் அறிய

கரூரில் வராகி அம்மன் ஆலயத்தில் பஞ்சமி திதியை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம்

கரூர் உழவர் சந்தை வராகி அம்மன் ஆலயத்தில் பஞ்சமி திதியை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம்.

கரூர் உழவர் சந்தை பிரம்ம தீர்த்த சாலையில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் பஞ்சமி திதியை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு எண்ணைக்காப்பு சாற்றி , பால்,தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வாராகி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

 


கரூரில் வராகி அம்மன் ஆலயத்தில் பஞ்சமி திதியை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம்

 

ஆலயத்தின் சிவாச்சாரியார் வாராகி அம்மனுக்கு உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு, சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு ,நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பஞ்சமி திதி சிறப்பு அபிஷேக மற்றும் அலங்காரத்தைக் காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

கரூர் பழைய ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா.

 


கரூரில் வராகி அம்மன் ஆலயத்தில் பஞ்சமி திதியை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம்

கரூர் நகரப் பகுதியான பழைய ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு  அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயம் அருகே பிரத்யேக யாகசாலை அமைத்து காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்ட பின்னர் முதல் கால யாக வேள்வி, இரண்டாம் கால யாக வேள்வி, மூன்றாம் கால யாக வேள்வி, என நான்கு கால யாக வேள்வி நடைபெற்றது. யாகசாலை யாக வேள்வி கலசத்திற்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் மகா தீபாராதனை காட்டினார். மேள தாளங்கள் முழங்க நான்கு கால யாக சாலையில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த கலசத்தை வான வேடிக்கையுடன் கோபுர கலசத்திற்கு ஆலயத்தில் சிவாச்சாரியார் எடுத்துச் சென்றார்.

 


கரூரில் வராகி அம்மன் ஆலயத்தில் பஞ்சமி திதியை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம்

 

 

கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷே விழா சிறப்பாக நடைபெற்றது. ஆஞ்சநேயர், கணபதி, பாலமுருகன், ஐயப்பன், கருப்பண சுவாமி உள்ளிட்ட சுவாமிகளுக்கு புனிதத் தீர்த்தத்தால் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. கரூர் பழைய ரயில்வே ஸ்டேஷன் காலையில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் ஆலய மகா கும்பாபிஷே விழாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

 

 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Embed widget