மேலும் அறிய

Tiruchendur Soorasamharam: நாளை சூரசம்ஹாரம்.. கோலாகலமான திருச்செந்தூர்.. படையெடுக்கும் முருக பக்தர்கள்!

Tiruchendur Soorasamharam 2025: திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நாளை நடக்க உள்ளது. இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

தமிழ் கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். முருகனுக்கு உகந்த நாட்கள் ஏராளமாக இருந்தாலும் முருகனின் சூரசம்ஹாரம் மிக மிக பிரசித்தி பெற்றது. ஐப்பசி மாதத்தில் தீபாவளிக்குப் பிறகு வரும் அமாவாசை பிரதமை தொடங்கி சஷ்டி வரை இந்த சூரசம்ஹார நிகழ்வு நடக்கிறது. முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்ததை குறிப்பிடும் விதமாக இந்த சூரசம்ஹாரம் நடந்து வருகிறது.

நாளை சூரசம்ஹாரம்:

இதன்படி, நடப்பாண்டில் அக்டோபர் 27ம் தேதி சூரசம்ஹாரம் நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, நாளை சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் நடக்கிறது. இதற்காக அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் களைகட்டி காணப்படுகிறது. 

திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்:

சூரசம்ஹாரத்தை காண நாளை மட்டும் திருச்செந்தூர் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்டை மாவட்டங்களான திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்பட தென்மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னை, திருச்சி, கோவை, சேலம் போன்ற பெருநகரங்களில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 


Tiruchendur Soorasamharam: நாளை சூரசம்ஹாரம்.. கோலாகலமான திருச்செந்தூர்.. படையெடுக்கும் முருக பக்தர்கள்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சாமிக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது. பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சூரசம்ஹாரத்தை காண கடற்கரையில் பக்தர்கள் குவிவார்கள் என்பதால் கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட உள்ளனர். 

களைகட்டிய முருகன் கோயில்கள்:

திருச்செந்தூர் மட்டுமின்றி அறுபடை வீடுகளிலும் சூரசம்ஹாரத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அறுபடை வீடுகள் மட்டுமின்றி சென்னையில் உள்ள வடபழனி, நாகையில் உள்ள சிக்கல் சிங்காரவேலர் கோயில் என தமிழ்நாட்டின் அனைத்து முருகன் கோயிலிலும் சூரசம்ஹாரம் நடக்க உள்ளது. மலேசியாவில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோயில், சிங்கப்பூரில் உள்ள கோயில் உள்ள பல கோயில்களிலும் சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.
 
சூரசம்ஹாரம் நாளை நடைபெற உள்ள நிலையில், நாளை மறுநாள் முருகப்பெருமானின் திருக்கல்யாணத்துடன் சூரசம்ஹாரம் நிறைவு பெற உள்ளது.  திருச்செந்தூர் மட்டுமின்றி பக்தர்கள் அதிகளவு வருவார்கள் என்று கருதப்படும் முருகன் கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Tiruchendur Soorasamharam: நாளை சூரசம்ஹாரம்.. கோலாகலமான திருச்செந்தூர்.. படையெடுக்கும் முருக பக்தர்கள்!

இதையடுத்து, பல கோயில்களிலும் பக்தர்களின் வசதிக்கான அன்னதானமும் நடைபெற உள்ளது. குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். திருச்செந்தூர் கடற்கரையில் கோபுரங்கள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சூரசம்ஹார நிகழ்விற்காக முருக பக்தர்கள் ஒரு வார காலமாக கந்த சஷ்டி விரதம் இருந்து வேண்டி வருகின்றனர். கந்த சஷ்டி விரதம் இருக்க இயலாத பக்தர்கள் சூரசம்ஹார நாளில் மட்டும் விரதம் இருப்பது வழக்கம் ஆகும். முருகனுக்கு பாலாபிஷேகம், பன்னீர் அபிஷேகம் என பல அபிஷேகங்கள் நடக்கும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Top Searched Travel Destinations: 2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
2025-ல் கூகுள் பயண தேடலில் முதலிடம் பிடித்தது எது? - அட நம்ம புதுச்சேரிக்கு எந்த இடம் தெரியுமா?
Ration Shop: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Tatkal Ticket Booking: கவுண்டர்களில் தட்கல் முன்பதிவு செய்ய ஓடிபி அவசியம்.. கொதிக்கும் பயணிகள்!
Embed widget