மேலும் அறிய

Sabarimala Temple: தினமும் லட்சத்தை தாண்டும் பக்தர்கள் கூட்டம்... சபரிமலையில் முதியவர்கள், குழந்தைகளுக்கு தனிவரிசை..!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் முதியவர்கள், குழந்தைகள் தரிசனம் செய்ய தனிவரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் முதியவர்கள், குழந்தைகள் தரிசனம் செய்ய தனிவரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சபரிமலையில் தினமும் ஐயப்ப பக்தர்கள் வருகை ஒரு லட்சத்தை தாண்டி வருவதால் பக்தர்கள் பாதுகாப்பு கருதி முதியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தனிவரிசை மூலம் ஐயப்பனை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசம் செய்யும் நிலை உள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, பக்தர்களின் எண்ணிக்கையை 90,000-க்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தி வருகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரிசையில் நிற்பவர்கள் பல மணி நேரம் உணவே, தண்ணீரோ இல்லாமல் நிற்பதாக புகார் எழுந்து வருகிறது. 

நாளுக்குநாள் அதிகரிக்கும் கூட்டம்:

சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தேவசம்போர்டு மற்றும் காவல்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஐயப்ப பக்தர்களை தரிசிக்கவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் மதியம் மற்றும் இரவு நேரங்களில் தரிசன நேரம் மேலும் ஒரு மணிநேரம் நீட்டிக்கப்பட்டது. அதேபோல், நெய்யபிஷேக நேரத்தையும் ஒன்றே முக்கால் மணிநேரம் அதிகரித்தனர்.

கடந்த செவ்வாய்கிழமையன்று முன்பதிவு மூலம் சுமார் 89, 966 பக்தர்கள் தரிசம் செய்தனர். தொடர்ந்து நேற்றைய நாளான புதன் பக்தர்கள் தரிசன எண்ணிக்கை 1 லட்சத்தை தொட்டது. இதனால், பக்தர்கள் தரிசனத்திற்கு பிறகு, உடனடியாக வெளியேற்ற காவல்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, பக்தர்கள் நீண்ட நேரம் கோயிலில் தங்குவதைத் தவிர்க்க தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வழக்கமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. 

தொடர்ந்து, சன்னிதானத்தில் அதிக நெரிசல் ஏற்பட்டால், பம்பா மற்றும் நிலக்கல்லில் இருந்து பக்தர்கள் ஒரு  பக்கத்தில் இருந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

சாரம்குத்தி ஆலத்தில் உள்ள வரிசை வளாகங்களை திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மெய்நிகர் வரிசை வழியாக தினசரி முன்பதிவு செய்யக்கூடிய பக்தர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 90,000 ஆக நிர்ணயிக்கப்பட்டும் வருவதாக தேவசம்போர்டு தகவல் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Embed widget