மேலும் அறிய

கர்நாடகாவில் தொடங்கி நம்ம கரூருக்கு வந்த காவிரி அம்மன் ரத யாத்திரை

கடந்த மாதம் 21-ம் தேதி கர்நாடகா மாநிலம் தலைக்காவிரியில் துலா தீர்த்த காவிரி அம்மன் ரத யாத்திரை அங்கிருந்து துவங்கியது.

கரூர் அருகே காவிரி ஆற்றுக்கு மஹாதீபாரதனை காண்பித்து வழிபட்ட சாதுக்கள், சந்நியாசிகள்.

அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை இணைந்து 12ம் ஆண்டு காவிரி விழிப்புணர்வு ரத யாத்திரையை காவிரி ஆறு பாயும் மாவட்டங்களில் மேற்கொண்டுள்ளனர். கடந்த மாதம் 21-ம் தேதி கர்நாடகா மாநிலம் தலைக்காவிரியில் துலா தீர்த்த காவிரி அம்மன் ரத யாத்திரை அங்கிருந்து துவங்கியது.

 


கர்நாடகாவில் தொடங்கி நம்ம கரூருக்கு வந்த காவிரி அம்மன் ரத யாத்திரை

 

அதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்கள் வழியாக சென்ற இந்த யாத்திரை கரூர் மாவட்டம் வந்தடைந்தது. இந்நிலையில் நேற்று இரவு கரூரை அடுத்த நெரூரில் காவிரி ஆற்றங்கரையில் காவிரி அம்மனுக்கு லோப முத்ரா யாகம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஆற்றங்கரையில் 7 சாதுக்கள் ஏறி காவிரி மஹா ஆராத்தி காண்பிக்கப்பட்டது. இதனை ஏராளமானோர் ஆன்மீக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 


கர்நாடகாவில் தொடங்கி நம்ம கரூருக்கு வந்த காவிரி அம்மன் ரத யாத்திரை

 

நெரூரில் காவிரி தாய்க்கு மஹா ஆராத்தி

கரூர் அருகே நெரூரில் காவிரி ரத யாத்திரை குழுவினர் சார்பில், காவிரி தாய்க்கு மகா ஆராத்தி விழா நடந்தது. அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம், அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் கரூர் குடும்பம் சார்பில் 12 ஆம் ஆண்டு காவிரி விழிப்புணர்வு, துலா தீர்த்த ரத யாத்திரை கடந்த மாதம் 21 இல் கர்நாடக மாநிலம் குடகுமலையிலிருந்து  தொடங்கியது. இந்த யாத்திரை வரும் 13 இல் நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகாரில் நிறைவு பெறுகிறது. காவிரி ஆற்றின் கறைகளை பலப்படுத்தி தடுப்பணைகள் கட்ட வேண்டும். காவிரி ஆற்றிற்காக தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். நதிகளை தேசிய மயமாக்க வேண்டும். தென்னக நதிகளை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துலா தீர்த்த ரத யாத்திரை தொடங்கியது.

 


கர்நாடகாவில் தொடங்கி நம்ம கரூருக்கு வந்த காவிரி அம்மன் ரத யாத்திரை

இக்குழுவினர் நேற்று முன்தினம் கரூர் வந்தனர். தொடர்ந்து இரண்டாம் நாளாக நேற்று மாலை 5.30 மணிக்கு, நெரூர் படித்துறையில், காவிரி ஆற்றுக்கு லோபா முத்ரா ஹோமம், ஓம் சக்தி வழிபாட்டு மன்றத்தினரின் 108 குடம் பால் அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து காவிரி தாய்க்கு மகா ஆராத்தி விழா சிறப்பாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று காவிரித்தாயை வணங்கினர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் சுவாமி ராமானந்தா, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், வித்யா சங்கர் சரஸ்வதி சுவாமிகள், சுவாமி சந்திரசேகரானந்த  மகாராஜ், அமர்நாத் சுவாமிகள், சுவாமி ஆத்மனந்தா சரஸ்வதி உட்பட பலர் பங்கேற்றனர்.

தலைப்பு செய்திகள்

கோடை வெப்பத்திற்கு ஆன்மீகத் தீர்வு! சீர்காழி ஆலஞ்சேரி அகத்தீஸ்வரர் கோயிலில் நடந்த அதிசயம்!
கோடை வெப்பத்திற்கு ஆன்மீகத் தீர்வு! சீர்காழி ஆலஞ்சேரி அகத்தீஸ்வரர் கோயிலில் நடந்த அதிசயம்!
குபேரனே வழிபட்ட பெருமாள்!… ஒரு நாளில் ஒருமுறை மட்டுமே தரிசனம் கிடைக்கும் அதிசய திருத்தலம்
குபேரனே வழிபட்ட பெருமாள்!… ஒரு நாளில் ஒருமுறை மட்டுமே தரிசனம் கிடைக்கும் அதிசய திருத்தலம்
பட்டினத்தாருக்கும் இந்த விநாயகருக்கும் என்ன தொடர்பு? திருவெண்காட்டில் நடந்த ஆன்மீகப் பெருவிழா!
பட்டினத்தாருக்கும் இந்த விநாயகருக்கும் என்ன தொடர்பு? திருவெண்காட்டில் நடந்த ஆன்மீகப் பெருவிழா!
ஆடி மாத பிறப்பு 2026 எப்போது? அம்மனின் அருள் பெற இந்த மாதத்தில் என்ன செய்ய வேண்டும்? முழு விவரம்!
ஆடி மாத பிறப்பு 2026 எப்போது? அம்மனின் அருள் பெற இந்த மாதத்தில் என்ன செய்ய வேண்டும்? முழு விவரம்!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
Keerthana:
Keerthana: "லஞ்சம் கொடுக்க வேண்டாம்... இதுதான் நல்லாட்சி.." முதலமைச்சர் விஜய்யைப் பாராட்டிய அமைச்சர் கீர்த்தனா
CM Vijay Speech: 5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
Embed widget