மேலும் அறிய

12 ஆண்டுக்கு பின் தஞ்சை பெரிய கோயிலில் பவுர்ணமி கிரிவலம் - பக்தியுடன் வலம் வந்த பக்தர்கள்

பெரிய கோவிலுக்கு இரவிலும் கூட தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். உலகப்புகழ் பெற்ற பெரியகோயிலை எந்த நேரத்திலும் தரிசனம் செய்துவிட வேண்டும் என்று பக்தர்கள் நினைப்பதுதான்.

தஞ்சாவூர்:தஞ்சாவூர் பெரிய கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் கிரிவலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

பௌர்ணமி நாளில் சிவபெருமானின் திருப்பெயரை உச்சரித்தல்

பொதுவாக பௌர்ணமி கிரிவலம்  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு வாய்ந்தாகும். அம்பிகைக்கு உகந்த பௌர்ணமி நாளில் சிவபெருமானை மட்டுமே மனதில் நினைத்து அவருடைய திருப்பெயரை உச்சரித்துக் கொண்டு பொறுமையாகவும், அமைதியாகவும் நடந்து செல்வதன்  மூலம் சிவபெருமானின் ஆசி நேரடியாக கிடைப்பதோடு பாவங்கள் நீங்கி சகலதோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். 


12 ஆண்டுக்கு பின் தஞ்சை பெரிய கோயிலில் பவுர்ணமி கிரிவலம் - பக்தியுடன் வலம் வந்த பக்தர்கள்

இந்த சிறப்பு வாய்ந்த நாளில் சிவபெருமானின் அருளைப் பெற திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலை நோக்கி பக்தர்கள் படையெடுப்பது வழக்கம். திருவண்ணாமலையை போல் தஞ்சாவூர் பெரிய கோயிலிலும் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் கிரிவலம் செல்ல  ஏற்பாடு செய்யப்பட்டது. 

மிகப்பெரிய கோயில்களில் இடம் பிடித்த தஞ்சை

ஒட்டுமொத்த இந்தியாவை எடுத்துக்கொண்டாலும் மிகப் பெரிய இந்துக் கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பிரபல இந்து கோயில்களைப் பட்டியலிட்டால், தமிழகத்திலிருந்து திருவரங்கம் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோவில், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயில், தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் கோயில் ஆகிய கோயில்கள் நிச்சயம் இடம்பெறும்.

ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்தபோது சோழநாடு வளமடைய ஆரம்பித்திருந்தது. பெரும் செல்வம் குவிய ஆரம்பித்தது. காஞ்சிபுரத்தில் ராஜசிம்மப் பல்லவனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில் ராஜராஜ சோழனை பெரிதும் கவர்ந்தது. "அதன் விளைவாகவே தஞ்சையில் ராஜராஜீச்சரம் எனும் பெருங்கோயில்" எழுந்தது என்று கூறப்படுகிறது.


12 ஆண்டுக்கு பின் தஞ்சை பெரிய கோயிலில் பவுர்ணமி கிரிவலம் - பக்தியுடன் வலம் வந்த பக்தர்கள்

2012ம் ஆண்டு நடந்த கிரிவலம்

பெரிய கோயிலில்  கடந்த 2012ம் ஆண்டு கிரிவலம் நடந்துள்ளது. அதன் பிறகு பக்தர்களின் நீண்ட ஆண்டுகள் கோரிக்கையை ஏற்று தஞ்சை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் கிரிவலம் நடத்துவதற்காக அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொட்ர்ந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலைப்  போல மாதந்தோறும் வரும் பௌர்ணமி நாளன்று மாலை 5 மணியிலிருந்து மறுநாள் காலை 6:00 மணி வரையும் கிரிவலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது‌. 

கிரிவல பாதைக்காக நடைபாதைகள் சீரமைப்பு

இதையடுத்து கிரிவலப் பாதைக்காக பெரிய கோவிலை சுற்றி உள்ள நடைபாதைகள் சீரமைக்கப்பட்டு மின்விளக்குகள் பொருத்தப்பட்டு  குடிநீர் வசதிகள் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில்
புரட்டாசி முதல் பௌர்ணமி நாளான நேற்று 17ம் தேதி பெரிய கோவிலில் வெகு விமர்சையாக கிரிவலம் துவங்கப்பட்டது.

பொதுவாக பெரிய கோவிலுக்கு இரவிலும் கூட தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். உலகப்புகழ் பெற்ற பெரியகோயிலை எந்த நேரத்திலும் தரிசனம் செய்துவிட வேண்டும் என்று பக்தர்கள் நினைப்பதுதான். இந்நிலையில் பௌர்ணமி கிரிவலம் முதல் நாளிலே முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில் பங்கேற்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பௌர்ணமி கிரிவலத்தை ஒட்டி ஏராளமான போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

எந்த நாளில் கிரிவலம் வந்தால் என்ன நன்மை?

பௌர்ணமி நாள் அன்று மட்டும்தான் கிரிவலம் வரவேண்டும் என்பதில்லை வருடத்தின் 365 நாளும் மலை வலம் வரலாம். ஞாயிற்று கிழமை கிரிவலம் வந்தால் சிவலோக பதவி கிட்டும். திங்கட்கிழமை கிரிவலம் வந்தால் இந்திர பதவி கிடைக்கும்.செவ்வாய்க்கிழமை கிரிவலம் வந்தால் கடன், வறுமை நீங்கும். புதன் கிழமை கிரிவலம் வந்தால் கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் கிடைக்கும். வியாழக்கிழமை கிரிவலம் வந்தால் ஞானம் கிடைக்கும். வெள்ளிக்கிழமை கிரிவலம் வந்தால் வைகுண்டப் பதவி கிடைக்கும். சனிக்கிழமை கிரிவலம் வந்தால் பிறவிப்பிணி அகலும். அஷ்டமி நாளில் கிரிவலம் வந்தால் தீவினைகள் போகும். குறிப்பாக செவ்வாய்க்கிழமை கிரிவலம் வருவது மிகவும் சிறப்பு. 

தலைப்பு செய்திகள்

அண்ணன், தம்பிக்கு ராக்கி கட்ட முடியாதா? - கவலை வேண்டாம் போஸ்ட் ஆபிஸின் புதிய ஆஃபர்கள்.. இப்பவே புக் பண்ணுங்க
அண்ணன், தம்பிக்கு ராக்கி கட்ட முடியாதா? - கவலை வேண்டாம் போஸ்ட் ஆபிஸின் புதிய ஆஃபர்கள்.. இப்பவே புக் பண்ணுங்க
புனிதப்பயணம் மேற்கொள்ள 5000 ரூபாய் அரசு மானியம்: விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ...
புனிதப்பயணம் மேற்கொள்ள 5000 ரூபாய் அரசு மானியம்: விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ...
வளையல்களால் மூழ்கிய வல்லக்கோட்டை அம்மன் சந்நிதி! சிலிர்க்க வைக்கும் ஆடிப்பூரம் வைபவம்! 
வளையல்களால் மூழ்கிய வல்லக்கோட்டை அம்மன் சந்நிதி! சிலிர்க்க வைக்கும் ஆடிப்பூரம் வைபவம்! 
அம்மனை நாடி அலைகடலென திரண்ட பக்தர்கள்! ஏகௌரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
அம்மனை நாடி அலைகடலென திரண்ட பக்தர்கள்! ஏகௌரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
Embed widget