மேலும் அறிய
Top 10 News Headlines: டெல்டா பகுதிகளான 38 கிராமங்கள், தமிழில் ட்வீட் செய்த மோடி, ஏஐ-சுந்தர் பிச்சை எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines Today Nov. 22nd: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

11 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
-
மதுரை மற்றும் கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் சேவைக்கான விரிவான திட்ட அறிக்கையை மறுபரிசீலனை செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம். இவ்விவகாரம் குறித்து எப்போது வேண்டுமானாலும் பிரதமரை சந்திக்க தான் தயாராக உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- கடலூர் மாவட்டம் திருமுட்டம் வட்டத்தில் உள்ள 38 வருவாய் கிராமங்களை, காவிரி டெல்டா பகுதியாக அறிவித்து அரசாணை வெளியீடு. பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை வைத்த நிலையில் கடந்த ஜூலையில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர்.
- மாவட்ட வாரியாக, உள் அரங்குகளில் மக்கள் சந்திப்பை நடத்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை முதல் காஞ்சிபுரத்தில் இருந்து மக்கள் சந்திப்பை தொடங்க உள்ளதாகவும் தகவல.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,360 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.11,630-க்கும், ஒரு சவரன் ரூ.93,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- வங்கக் கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி. டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்.
- இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 692.57 பில்லியனாக அதிகரிப்பு. நவம்பர் மாதத்தின் முதல் இரு வாரங்களில் மட்டும் 5.54 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல்.
- தான் சம்பாதித்தவற்றில் 90 சதவீதத்தை கட்சிக்கும், தேர்தல் பிரசாரத்திற்கும் செலவழித்துவிட்டதாகவும், அதனால் பீகார் மக்கள் தனது கட்சிக்கு ஆண்டுக்கு ரூ.1,000 நிதியாக வழங்குமாறும் ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் கேட்டுக்கொண்டுள்ளார்.
- உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், இரண்டரை வயதுக் குழந்தையின் காயத்திற்கு ஃபெவிகுவிக் பசையை பயன்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- தென்னாப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியினர் அளித்த வரவேற்பில் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் அடைந்ததாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
- செயற்கை நுண்ணறிவை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என்றும் ஏஐ ஒரு புரட்சிகரமான வளர்ச்சி என்றாலும், தற்போது அதில் சில பகுத்தறிவற்ற தன்மை உள்ளதாகவும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி பந்துவீசி வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















