மேலும் அறிய

பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வரும் நல்ல மெய்க்க விநாயகர் கோயில்

விநாயகர் என்றால் மேலானவர் என்று பொருள்படும். தனக்கு மேல் தலைவர் ஒருவரும் இல்லை என்பதை உணர்த்துவதே விநாயகரின் தத்துவம்.

தஞ்சாவூர்: ஆண்டுகள் உருண்டோடினாலும் நல்ல மெய்க்க விநாயகர் கோயிலின் பழமை மாறாமல் அப்படியே பாதுகாத்து வருகின்றனர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே வடசேரி மக்கள்.

நமது வழிபாடுகள் எல்லாவற்றிற்கும் முன் நிற்கும் தெய்வம் பிள்ளையார். முழு முதற் கடவுள். பிள்ளையார் சுழியிலிருந்து கோலமிட்டு நடுவில் பிள்ளையார் பிடித்து வைப்பது வரை நம் உயிரோடு கலந்து உறவாடும் தெய்வம் பிள்ளையார்.

எந்த ஒரு காரியம் செய்கிற போதும் பிள்ளையார் சுழி போடுவது, பிள்ளையாருக்கு தேங்காய் அர்ப்பணிப்பது என்று அனைத்தும் பிள்ளையாருடன் ஒட்டிதாகவே நடைபெற்று வருகின்றன. எந்த தெய்வத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு பிள்ளையாருக்கு உண்டு.

விநாயகர் என்றால் மேலானவர் என்று பொருள்படும். தனக்கு மேல் தலைவர் ஒருவரும் இல்லை என்பதை உணர்த்துவதே விநாயகரின் தத்துவம். ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்கும் ஸ்ரீ விநாயகப் பெருமான் அவதரித்த தினமே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது.

இத்தகைய பெருமைகள் கொண்ட விநாயகருக்கு பழமை மாறாமல் ஆண்டுகள் பல கடந்த நிலையிலும் வடசேரியில் ஓடுகள் வேயப்பட்ட வீடு போன்ற அமைப்பில் கோயில் இருக்கிறது. வடசேரியை சேர்ந்த பொதுமக்களின் வீடுகளில் நடக்கும் அனைத்து விசேஷங்களும் இக்கோயில் இருந்துதான் தொடங்கப்படும். எங்களின் மூத்தவர் இவர்தான் என்று பெருமையுடன் சொல்கின்றனர் வடசேரி மக்கள்.


பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வரும் நல்ல மெய்க்க விநாயகர் கோயில்

திருமணம், காது குத்து நிகழ்ச்சி, குழந்தைக்கு பெயர் சூட்டுதல் என அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் இங்கிருந்துதான் சீர்வரிசை எடுத்துச் செல்லுதல். திருமண முடிந்து மணமக்கள் இங்கு வந்து விநாயகரை வணங்கி விட்டுதான் செல்கின்றனர். பக்தர்கள் வேண்டிக் கொள்ளும் வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார் நல்ல மெய்க்க விநாயகர்.

திருமண தடைகள் அகலுதல், குழந்தை வரம், குடும்ப ஒற்றுமை என்று அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றி தருகிறார். இதனால் நல்ல மெய்க்க விநாயகரை வேண்டிய பின்னே அனைத்தும் நடத்துகின்றனர். வடசேரியின் மையப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில்தான் விசேஷங்கள் எது நடக்க இருந்தாலும் அமர்ந்து பேசி முடிவெடுக்கின்றனர். சீர் வரிசை கொடுத்தல், திருமண அழைப்பு என்று இக்கோயிலில் இருந்தே நடக்கிறது.

திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டியவர்களின் வேண்டுதல் நிறைவேறிய உடன் இங்கு வந்து விநாயகரை தரிசித்து செல்வதும் தொடர்ந்து நடக்கிறது. வடசேரி மக்களின் கண்கண்ட தெய்வமாக நல்ல மெய்க்க விநாயகர் விளங்குகிறார் என்பதுதான் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். எத்தனை விஷயங்கள் மாறினாலும் இக்கோயில் அமைப்பை மாற்ற மாட்டோம். அருகில் உள்ள பல கிராமங்களின் கோயில் கட்டுமானங்கள் மாற்றப்பட்டுள்ளது. ஆனால் எங்கள் வடசேரி நல்ல மெய்க்க விநாயகரின் கோயில் இப்படி தான் இருக்கும் என்கின்றனர் இப்பகுதி மக்கள். தலை குனிந்துதான் இக்கோயிலுக்குள் செல்ல வேண்டும். இது விநாயகருக்கு நாம் அளிக்கும் மரியாதை. இக்கோயிலில் சற்று நேரம் அமர்ந்தால் தாலாட்டும் காற்றும் ஜில்லென்ற தரையும் நம்மை அறியாமல் மனக்கவலைகள் அனைத்தையும் போக்கி விடுகிறது. விநாயகர் சதுர்த்தி உட்பட பல்வேறு சிறப்பு பூஜைகளும் நடக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
எங்களைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்; தமிழ்நாடு பொறுக்காது- பொங்கிய உதயநிதி ஸ்டாலின்!
எங்களைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்; தமிழ்நாடு பொறுக்காது- பொங்கிய உதயநிதி ஸ்டாலின்!
காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது நியாயமா முதல்வரே? அண்ணாமலை கேள்வி!
காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது நியாயமா முதல்வரே? அண்ணாமலை கேள்வி!
சாதிகள் இல்லை என்று சொல்லிவிட்டு பள்ளி நுழைவுவாயிலில் சாதி! – சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்
சாதிகள் இல்லை என்று சொல்லிவிட்டு பள்ளி நுழைவுவாயிலில் சாதி! – சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.