![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Navratri 2023: நவராத்திரி 6ம் நாள்: கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் துர்கைக்கு காமாட்சி அம்மன் அலங்காரம்
நவராத்திரி முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்று வருகிறது.
![Navratri 2023: நவராத்திரி 6ம் நாள்: கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் துர்கைக்கு காமாட்சி அம்மன் அலங்காரம் Navratri 2023 Sri Kamatshi Goddess decoration on the sixth day of Navratri at Karur Sri Vishwakarma Siddhi Vinayagar Temple TNN Navratri 2023: நவராத்திரி 6ம் நாள்: கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் துர்கைக்கு காமாட்சி அம்மன் அலங்காரம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/21/a13984a4a946f115411b67d44e18b25a1697867278541113_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூர் தேர் வீதி விஸ்வகர்மா சக்தி விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி ஆறாம் நாளை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு ஸ்ரீ காமாட்சி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டது.
நவராத்திரி முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் நாள்தோறும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அது தொடர்ச்சியாக பல்வேறு அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டம் , தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் துர்க்கை அம்மனுக்கு நவராத்திரி ஆராதனை முன்னிட்டு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஆலயத்தில் சிவாச்சாரியார் துர்க்கை அம்மனுக்கு ஸ்ரீ காமாட்சி அம்மன் அலங்காரம் செய்து அதை தொடர்ந்து குங்குமத்தால் 1008 அர்ச்சனைகள் நடைபெற்றது. சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்திய சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்துடன், மகா தீபாராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து அனைத்து மக்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி ஆறாம் நாள் சிறப்பு அலங்காரத்திற்கான ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏற்பாட்டை ஆலயத்தில் சிவாச்சாரியார் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
கரூர் அபய பிரதான ரங்கநாத சுவாமி ஆலயத்தில் நவராத்திரி ஆறாம் நாளை முன்னிட்டு சாமிக்கு ஆண்டாள் அலங்காரம்.
நவராத்திரி முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரூர் மேட்டு தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரங்கநாத ஸ்வாமி ஆலயத்தில் நவராத்திரி ஆறாம் நாளை முன்னிட்டு உற்சவர் அபய பிரதான ரங்கநாத ஸ்வாமிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதைத் தொடர்ந்து ஆலயத்தின் பட்டாச்சாரியார் சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அறிவித்து பிறகு ஆண்டாள் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து சுவாமிக்கு துளசியால் நாமாவளிகள் கூறிய பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது. ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி ஆறாம் நாள் சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக நிகழ்ச்சிக்கான ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)