மேலும் அறிய

மத நல்லிணக்கத்திற்கு மற்றொரு சான்று - கோயில் கும்பாபிஷேக விழாவில் நெகிழ்ச்சி சம்பவம்..எங்கே தெரியுமா..?

மயிலாடுதுறை அருகே மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்த இஸ்லாமிய சகோதரர்கள் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகாவுக்கு உட்பட்ட அரிவளூர் கிராமத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காளியம்மன் உள்ளிட்ட ஏழு ஆலயங்களில் புனரமைக்குப் பிறகு இன்று வெகு சிறப்பாக மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் விதமாக, கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் ஆலய நிர்வாகத்துக்கு வாழ்த்து தெரிவித்தபோது, அவர்களுக்கு ஆலயத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பழமை வாய்ந்த ஆலயங்களின் புனரமைப்பு

குத்தாலம் அருகே அமைந்துள்ள அரிவளூர் கிராமம், பல நூற்றாண்டு காலத் தொன்மை வாய்ந்த ஆன்மீகப் பாரம்பரியத்தைக் கொண்டது. இங்கு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பாம்புலி அம்மன், ஸ்ரீ பிடாரியம்மன், ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ வீரன் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆகிய ஏழு ஆலயங்கள் அமைந்துள்ளன.

காலப்போக்கில் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்ட இந்த ஆலயங்களை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கிராமப் பொதுமக்கள் மற்றும் நன்கொடையாளர்கள் துணையுடன் இந்த ஏழு ஆலயங்களும் சிறப்பாக மறுகட்டுமானம் செய்யப்பட்டன. பல மாதங்கள் நடைபெற்ற திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

யாகசாலை பூஜைகள் மற்றும் மகா பூர்ணாகுதி

கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் கடந்த ஒன்றாம் தேதியே தொடங்கின. அன்றைய தினம் முதல் யாகசாலை பூஜைகள் விமரிசையாகத் துவங்கி நடைபெற்று வந்தன. ஏழு ஆலயங்களுக்கும் உரிய புனித நீர் அடங்கிய கடங்கள் யாகசாலையில் வைத்து, வேத மந்திரங்கள் முழங்க ஹோமங்கள் வளர்க்கப்பட்டன.

பாரம்பரிய முறைப்படி நான்கு கால யாகசாலை பூஜைகள் இன்று காலை நிறைவு பெற்றன. பூஜையின் நிறைவாக, மகா பூர்ணாகுதி மற்றும் சிறப்புத் தீபாராதனை செய்யப்பட்டது. யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் கடங்களுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க ஆலயத்தைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

தொடர்ந்து கோபுரக் கலசங்களில் ஊற்ற புனித நீரை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஓத, மேளதாளங்கள் முழங்க, ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு, புனித நீர், ஏழு ஆலயங்களின் கோபுரக் கலசங்களுக்கும் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

கோபுரக் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்ட அந்த கணத்தில், வானில் ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. இந்நிகழ்வு பக்தர்களிடையே பரவசத்தையும் பக்திப் பெருக்கையும் ஏற்படுத்தியது. கும்பாபிஷேகத்தைக் காண வந்த திரளான பக்தர்கள் இறை கோஷமிட்டு இறைவனை வணங்கினர்.

கும்பாபிஷேகம் முடிந்த பின்னர், மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மத நல்லிணக்கத்திற்கு மற்றொரு சான்று

இந்த ஆன்மீக விழாவில் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வும் அரங்கேறியது. அரிவளூர் கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் திரளாக ஆலயத்திற்கு வந்து, கும்பாபிஷேகம் வெற்றிகரமாக நடைபெற்றமைக்காக விழா குழுவினருக்கு சால்வை அணிவித்து தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

மத நல்லிணக்கத்தையும், கிராம ஒற்றுமையையும் எடுத்துக்காட்டும் விதமாக, ஆலய நிர்வாகக் கமிட்டி மற்றும் பொதுமக்கள் சார்பில், இஸ்லாமியப் பெரியவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தச் செயல் அப்பகுதியில் மத நல்லிணக்கத்தின் சின்னமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த மகா கும்பாபிஷேக விழாவில், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ராமன் உட்படப் பல முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இந்த ஏழு ஆலயங்களின் கும்பாபிஷேகம், அரிவளூர் கிராமத்தின் ஆன்மீக வரலாற்றில் ஒரு முக்கியப் படியாக அமைந்துள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: திமுகவிடம் இருந்து 51 தொகுதிகளை பறித்த விஜய் - 61 தொகுதிகளில் 5000 வாக்குகளில் பறிபோன வெற்றி
TVK Vijay: திமுகவிடம் இருந்து 51 தொகுதிகளை பறித்த விஜய் - 61 தொகுதிகளில் 5000 வாக்குகளில் பறிபோன வெற்றி
TVK Cong: ”TVK கூட்டணிக்கு ஓகே, ஆனால்” சௌமியாவிற்கு சுகாதாரத்துறை? காங்., எத்தனை அமைச்சர்கள்?
”TVK கூட்டணிக்கு ஓகே, ஆனால்” சௌமியாவிற்கு சுகாதாரத்துறை? காங்., எத்தனை அமைச்சர்கள்?
TVK Vijay: மே.7 பதவியேற்பு..! அமைச்சர்களை வீழ்த்தியவர்களுக்கு கேபினெட்டில் இடம்? விஜயின் உத்தேச பட்டியல்
மே.7 பதவியேற்பு..! அமைச்சர்களை வீழ்த்தியவர்களுக்கு கேபினெட்டில் இடம்? விஜயின் உத்தேச பட்டியல்
TN Election 2026: மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்ற 5 வேட்பாளர்கள் - அதிமுக 3, எடப்பாடி டாப் லிஸ்ட்
மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்ற 5 வேட்பாளர்கள் - அதிமுக 3, எடப்பாடி டாப் லிஸ்ட்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: திமுகவிடம் இருந்து 51 தொகுதிகளை பறித்த விஜய் - 61 தொகுதிகளில் 5000 வாக்குகளில் பறிபோன வெற்றி
TVK Vijay: திமுகவிடம் இருந்து 51 தொகுதிகளை பறித்த விஜய் - 61 தொகுதிகளில் 5000 வாக்குகளில் பறிபோன வெற்றி
TVK Cong: ”TVK கூட்டணிக்கு ஓகே, ஆனால்” சௌமியாவிற்கு சுகாதாரத்துறை? காங்., எத்தனை அமைச்சர்கள்?
”TVK கூட்டணிக்கு ஓகே, ஆனால்” சௌமியாவிற்கு சுகாதாரத்துறை? காங்., எத்தனை அமைச்சர்கள்?
TVK Vijay: மே.7 பதவியேற்பு..! அமைச்சர்களை வீழ்த்தியவர்களுக்கு கேபினெட்டில் இடம்? விஜயின் உத்தேச பட்டியல்
மே.7 பதவியேற்பு..! அமைச்சர்களை வீழ்த்தியவர்களுக்கு கேபினெட்டில் இடம்? விஜயின் உத்தேச பட்டியல்
TN Election 2026: மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்ற 5 வேட்பாளர்கள் - அதிமுக 3, எடப்பாடி டாப் லிஸ்ட்
மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்ற 5 வேட்பாளர்கள் - அதிமுக 3, எடப்பாடி டாப் லிஸ்ட்
DMK: தவெக பெயரை சொல்லக்கூட தயங்கும் திமுக.. இதுதான் அரசியல் நாகரீகமா? - விளாசும் நெட்டிசன்கள்!
DMK: தவெக பெயரை சொல்லக்கூட தயங்கும் திமுக.. இதுதான் அரசியல் நாகரீகமா? - விளாசும் நெட்டிசன்கள்!
TVK: தவெக தனிப்பெரும்பான்மையை தடுத்த 11 தொகுதிகள் எது? எது?
TVK: தவெக தனிப்பெரும்பான்மையை தடுத்த 11 தொகுதிகள் எது? எது?
RB Choudhary : திரைப்பட தயாரிப்பாளர் ஆர் பி செளத்ரி விபத்தில் மரணம்
RB Choudhary : திரைப்பட தயாரிப்பாளர் ஆர் பி செளத்ரி விபத்தில் மரணம்
DMK: திமுக படுதோல்விக்கு அடித்தளமிட்ட 7 காரணங்கள்! என்னென்ன ஓர் அலசல்
DMK: திமுக படுதோல்விக்கு அடித்தளமிட்ட 7 காரணங்கள்! என்னென்ன ஓர் அலசல்
Embed widget