மேலும் அறிய

மத நல்லிணக்கத்திற்கு மற்றொரு சான்று - கோயில் கும்பாபிஷேக விழாவில் நெகிழ்ச்சி சம்பவம்..எங்கே தெரியுமா..?

மயிலாடுதுறை அருகே மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்த இஸ்லாமிய சகோதரர்கள் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகாவுக்கு உட்பட்ட அரிவளூர் கிராமத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காளியம்மன் உள்ளிட்ட ஏழு ஆலயங்களில் புனரமைக்குப் பிறகு இன்று வெகு சிறப்பாக மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் விதமாக, கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் ஆலய நிர்வாகத்துக்கு வாழ்த்து தெரிவித்தபோது, அவர்களுக்கு ஆலயத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பழமை வாய்ந்த ஆலயங்களின் புனரமைப்பு

குத்தாலம் அருகே அமைந்துள்ள அரிவளூர் கிராமம், பல நூற்றாண்டு காலத் தொன்மை வாய்ந்த ஆன்மீகப் பாரம்பரியத்தைக் கொண்டது. இங்கு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பாம்புலி அம்மன், ஸ்ரீ பிடாரியம்மன், ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ வீரன் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆகிய ஏழு ஆலயங்கள் அமைந்துள்ளன.

காலப்போக்கில் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்ட இந்த ஆலயங்களை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கிராமப் பொதுமக்கள் மற்றும் நன்கொடையாளர்கள் துணையுடன் இந்த ஏழு ஆலயங்களும் சிறப்பாக மறுகட்டுமானம் செய்யப்பட்டன. பல மாதங்கள் நடைபெற்ற திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

யாகசாலை பூஜைகள் மற்றும் மகா பூர்ணாகுதி

கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் கடந்த ஒன்றாம் தேதியே தொடங்கின. அன்றைய தினம் முதல் யாகசாலை பூஜைகள் விமரிசையாகத் துவங்கி நடைபெற்று வந்தன. ஏழு ஆலயங்களுக்கும் உரிய புனித நீர் அடங்கிய கடங்கள் யாகசாலையில் வைத்து, வேத மந்திரங்கள் முழங்க ஹோமங்கள் வளர்க்கப்பட்டன.

பாரம்பரிய முறைப்படி நான்கு கால யாகசாலை பூஜைகள் இன்று காலை நிறைவு பெற்றன. பூஜையின் நிறைவாக, மகா பூர்ணாகுதி மற்றும் சிறப்புத் தீபாராதனை செய்யப்பட்டது. யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் கடங்களுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க ஆலயத்தைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

தொடர்ந்து கோபுரக் கலசங்களில் ஊற்ற புனித நீரை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஓத, மேளதாளங்கள் முழங்க, ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு, புனித நீர், ஏழு ஆலயங்களின் கோபுரக் கலசங்களுக்கும் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

கோபுரக் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்ட அந்த கணத்தில், வானில் ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. இந்நிகழ்வு பக்தர்களிடையே பரவசத்தையும் பக்திப் பெருக்கையும் ஏற்படுத்தியது. கும்பாபிஷேகத்தைக் காண வந்த திரளான பக்தர்கள் இறை கோஷமிட்டு இறைவனை வணங்கினர்.

கும்பாபிஷேகம் முடிந்த பின்னர், மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மத நல்லிணக்கத்திற்கு மற்றொரு சான்று

இந்த ஆன்மீக விழாவில் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வும் அரங்கேறியது. அரிவளூர் கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் திரளாக ஆலயத்திற்கு வந்து, கும்பாபிஷேகம் வெற்றிகரமாக நடைபெற்றமைக்காக விழா குழுவினருக்கு சால்வை அணிவித்து தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

மத நல்லிணக்கத்தையும், கிராம ஒற்றுமையையும் எடுத்துக்காட்டும் விதமாக, ஆலய நிர்வாகக் கமிட்டி மற்றும் பொதுமக்கள் சார்பில், இஸ்லாமியப் பெரியவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தச் செயல் அப்பகுதியில் மத நல்லிணக்கத்தின் சின்னமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த மகா கும்பாபிஷேக விழாவில், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ராமன் உட்படப் பல முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இந்த ஏழு ஆலயங்களின் கும்பாபிஷேகம், அரிவளூர் கிராமத்தின் ஆன்மீக வரலாற்றில் ஒரு முக்கியப் படியாக அமைந்துள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget