மேலும் அறிய

மத நல்லிணக்கத்திற்கு மற்றொரு சான்று - கோயில் கும்பாபிஷேக விழாவில் நெகிழ்ச்சி சம்பவம்..எங்கே தெரியுமா..?

மயிலாடுதுறை அருகே மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்த இஸ்லாமிய சகோதரர்கள் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகாவுக்கு உட்பட்ட அரிவளூர் கிராமத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காளியம்மன் உள்ளிட்ட ஏழு ஆலயங்களில் புனரமைக்குப் பிறகு இன்று வெகு சிறப்பாக மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் விதமாக, கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் ஆலய நிர்வாகத்துக்கு வாழ்த்து தெரிவித்தபோது, அவர்களுக்கு ஆலயத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பழமை வாய்ந்த ஆலயங்களின் புனரமைப்பு

குத்தாலம் அருகே அமைந்துள்ள அரிவளூர் கிராமம், பல நூற்றாண்டு காலத் தொன்மை வாய்ந்த ஆன்மீகப் பாரம்பரியத்தைக் கொண்டது. இங்கு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பாம்புலி அம்மன், ஸ்ரீ பிடாரியம்மன், ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ வீரன் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆகிய ஏழு ஆலயங்கள் அமைந்துள்ளன.

காலப்போக்கில் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்ட இந்த ஆலயங்களை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கிராமப் பொதுமக்கள் மற்றும் நன்கொடையாளர்கள் துணையுடன் இந்த ஏழு ஆலயங்களும் சிறப்பாக மறுகட்டுமானம் செய்யப்பட்டன. பல மாதங்கள் நடைபெற்ற திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

யாகசாலை பூஜைகள் மற்றும் மகா பூர்ணாகுதி

கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் கடந்த ஒன்றாம் தேதியே தொடங்கின. அன்றைய தினம் முதல் யாகசாலை பூஜைகள் விமரிசையாகத் துவங்கி நடைபெற்று வந்தன. ஏழு ஆலயங்களுக்கும் உரிய புனித நீர் அடங்கிய கடங்கள் யாகசாலையில் வைத்து, வேத மந்திரங்கள் முழங்க ஹோமங்கள் வளர்க்கப்பட்டன.

பாரம்பரிய முறைப்படி நான்கு கால யாகசாலை பூஜைகள் இன்று காலை நிறைவு பெற்றன. பூஜையின் நிறைவாக, மகா பூர்ணாகுதி மற்றும் சிறப்புத் தீபாராதனை செய்யப்பட்டது. யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் கடங்களுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க ஆலயத்தைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

தொடர்ந்து கோபுரக் கலசங்களில் ஊற்ற புனித நீரை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஓத, மேளதாளங்கள் முழங்க, ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு, புனித நீர், ஏழு ஆலயங்களின் கோபுரக் கலசங்களுக்கும் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

கோபுரக் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்ட அந்த கணத்தில், வானில் ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. இந்நிகழ்வு பக்தர்களிடையே பரவசத்தையும் பக்திப் பெருக்கையும் ஏற்படுத்தியது. கும்பாபிஷேகத்தைக் காண வந்த திரளான பக்தர்கள் இறை கோஷமிட்டு இறைவனை வணங்கினர்.

கும்பாபிஷேகம் முடிந்த பின்னர், மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மத நல்லிணக்கத்திற்கு மற்றொரு சான்று

இந்த ஆன்மீக விழாவில் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வும் அரங்கேறியது. அரிவளூர் கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் திரளாக ஆலயத்திற்கு வந்து, கும்பாபிஷேகம் வெற்றிகரமாக நடைபெற்றமைக்காக விழா குழுவினருக்கு சால்வை அணிவித்து தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

மத நல்லிணக்கத்தையும், கிராம ஒற்றுமையையும் எடுத்துக்காட்டும் விதமாக, ஆலய நிர்வாகக் கமிட்டி மற்றும் பொதுமக்கள் சார்பில், இஸ்லாமியப் பெரியவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தச் செயல் அப்பகுதியில் மத நல்லிணக்கத்தின் சின்னமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த மகா கும்பாபிஷேக விழாவில், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ராமன் உட்படப் பல முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இந்த ஏழு ஆலயங்களின் கும்பாபிஷேகம், அரிவளூர் கிராமத்தின் ஆன்மீக வரலாற்றில் ஒரு முக்கியப் படியாக அமைந்துள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Palamedu Jallikattu 2026 LIVE: வாடிவாசலில் துள்ளிய காளைகள்.. மல்லுகட்டும் வீரர்கள்.. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நேரலை!
Palamedu Jallikattu 2026 LIVE: வாடிவாசலில் துள்ளிய காளைகள்.. மல்லுகட்டும் வீரர்கள்.. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நேரலை!
Gold Rate Jan.16th: அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
Trump Gaza Board of Peace: இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Palamedu Jallikattu 2026 LIVE: வாடிவாசலில் துள்ளிய காளைகள்.. மல்லுகட்டும் வீரர்கள்.. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நேரலை!
Palamedu Jallikattu 2026 LIVE: வாடிவாசலில் துள்ளிய காளைகள்.. மல்லுகட்டும் வீரர்கள்.. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நேரலை!
Gold Rate Jan.16th: அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
அப்பாடா, இப்பவாவது மனசு வந்துச்சே.! தங்கம், வெள்ளி விலை குறைந்தது; தற்போதைய விலை என்ன.?
Trump Gaza Board of Peace: இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Top 5 Richest Actors India: இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
Trump Machado Nobel Prize: ட்ரம்ப் கைக்கு வந்த நோபல் பரிசு; எதிர்ப்பை மீறி ஒப்படைத்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ
ட்ரம்ப் கைக்கு வந்த நோபல் பரிசு; எதிர்ப்பை மீறி ஒப்படைத்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ
Tata Punch Facelift EMI: லோன்ல கார் வாங்குற ஐடியா இருக்கா.? வெறும் ரூ.7,672 EMI-ல டாடா பஞ்ச் Facelift வாங்கலாம்; முழு விவரம்
லோன்ல கார் வாங்குற ஐடியா இருக்கா.? வெறும் ரூ.7,672 EMI-ல டாடா பஞ்ச் Facelift வாங்கலாம்; முழு விவரம்
Ajith Kumar: ரூ150 கோடி கொடுத்த ப்ரொடியூசர் இளிச்சவாயனா? ரேஸர் அஜித்குமாரை பொளக்கும் நெட்டிசன்கள்..
Ajith Kumar: ரூ150 கோடி கொடுத்த ப்ரொடியூசர் இளிச்சவாயனா? ரேஸர் அஜித்குமாரை பொளக்கும் நெட்டிசன்கள்..
Embed widget