மேலும் அறிய

மத நல்லிணக்கத்திற்கு மற்றொரு சான்று - கோயில் கும்பாபிஷேக விழாவில் நெகிழ்ச்சி சம்பவம்..எங்கே தெரியுமா..?

மயிலாடுதுறை அருகே மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்த இஸ்லாமிய சகோதரர்கள் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகாவுக்கு உட்பட்ட அரிவளூர் கிராமத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காளியம்மன் உள்ளிட்ட ஏழு ஆலயங்களில் புனரமைக்குப் பிறகு இன்று வெகு சிறப்பாக மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் விதமாக, கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் ஆலய நிர்வாகத்துக்கு வாழ்த்து தெரிவித்தபோது, அவர்களுக்கு ஆலயத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பழமை வாய்ந்த ஆலயங்களின் புனரமைப்பு

குத்தாலம் அருகே அமைந்துள்ள அரிவளூர் கிராமம், பல நூற்றாண்டு காலத் தொன்மை வாய்ந்த ஆன்மீகப் பாரம்பரியத்தைக் கொண்டது. இங்கு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பாம்புலி அம்மன், ஸ்ரீ பிடாரியம்மன், ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ வீரன் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆகிய ஏழு ஆலயங்கள் அமைந்துள்ளன.

காலப்போக்கில் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்ட இந்த ஆலயங்களை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கிராமப் பொதுமக்கள் மற்றும் நன்கொடையாளர்கள் துணையுடன் இந்த ஏழு ஆலயங்களும் சிறப்பாக மறுகட்டுமானம் செய்யப்பட்டன. பல மாதங்கள் நடைபெற்ற திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

யாகசாலை பூஜைகள் மற்றும் மகா பூர்ணாகுதி

கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் கடந்த ஒன்றாம் தேதியே தொடங்கின. அன்றைய தினம் முதல் யாகசாலை பூஜைகள் விமரிசையாகத் துவங்கி நடைபெற்று வந்தன. ஏழு ஆலயங்களுக்கும் உரிய புனித நீர் அடங்கிய கடங்கள் யாகசாலையில் வைத்து, வேத மந்திரங்கள் முழங்க ஹோமங்கள் வளர்க்கப்பட்டன.

பாரம்பரிய முறைப்படி நான்கு கால யாகசாலை பூஜைகள் இன்று காலை நிறைவு பெற்றன. பூஜையின் நிறைவாக, மகா பூர்ணாகுதி மற்றும் சிறப்புத் தீபாராதனை செய்யப்பட்டது. யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் கடங்களுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க ஆலயத்தைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

தொடர்ந்து கோபுரக் கலசங்களில் ஊற்ற புனித நீரை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஓத, மேளதாளங்கள் முழங்க, ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு, புனித நீர், ஏழு ஆலயங்களின் கோபுரக் கலசங்களுக்கும் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

கோபுரக் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்ட அந்த கணத்தில், வானில் ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. இந்நிகழ்வு பக்தர்களிடையே பரவசத்தையும் பக்திப் பெருக்கையும் ஏற்படுத்தியது. கும்பாபிஷேகத்தைக் காண வந்த திரளான பக்தர்கள் இறை கோஷமிட்டு இறைவனை வணங்கினர்.

கும்பாபிஷேகம் முடிந்த பின்னர், மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மத நல்லிணக்கத்திற்கு மற்றொரு சான்று

இந்த ஆன்மீக விழாவில் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வும் அரங்கேறியது. அரிவளூர் கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் திரளாக ஆலயத்திற்கு வந்து, கும்பாபிஷேகம் வெற்றிகரமாக நடைபெற்றமைக்காக விழா குழுவினருக்கு சால்வை அணிவித்து தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

மத நல்லிணக்கத்தையும், கிராம ஒற்றுமையையும் எடுத்துக்காட்டும் விதமாக, ஆலய நிர்வாகக் கமிட்டி மற்றும் பொதுமக்கள் சார்பில், இஸ்லாமியப் பெரியவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தச் செயல் அப்பகுதியில் மத நல்லிணக்கத்தின் சின்னமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த மகா கும்பாபிஷேக விழாவில், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ராமன் உட்படப் பல முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இந்த ஏழு ஆலயங்களின் கும்பாபிஷேகம், அரிவளூர் கிராமத்தின் ஆன்மீக வரலாற்றில் ஒரு முக்கியப் படியாக அமைந்துள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

அகத்திய முனிவருக்கு சிவன் திருக்கல்யாணக் காட்சி தந்த புனிதத்தலம் எங்கிருக்கு தெரியுங்களா?
அகத்திய முனிவருக்கு சிவன் திருக்கல்யாணக் காட்சி தந்த புனிதத்தலம் எங்கிருக்கு தெரியுங்களா?
12 நாட்களும் 12 அவதாரம்! காஞ்சி சந்தவெளி அம்மன் கோவிலில் தொடங்கப்போகும் பிரம்மாண்டம்..
12 நாட்களும் 12 அவதாரம்! காஞ்சி சந்தவெளி அம்மன் கோவிலில் தொடங்கப்போகும் பிரம்மாண்டம்..
50 ஆண்டு காலப் பாசம்..பிரிய மனமில்லாத மக்கள்! மயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகைக்கு என்ன நேரும்?
50 ஆண்டு காலப் பாசம்..பிரிய மனமில்லாத மக்கள்! மயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகைக்கு என்ன நேரும்?
இந்திரனே வந்து வழிபட்ட தலம்! 'வந்தாரை வாழ வைக்கும்' வல்லக்கோட்டை முருகனின் கல்யாண வைபவம்!
இந்திரனே வந்து வழிபட்ட தலம்! 'வந்தாரை வாழ வைக்கும்' வல்லக்கோட்டை முருகனின் கல்யாண வைபவம்!

வீடியோ

''லஞ்சம் ஊழல் NO EXCUSE'' சாட்டை சுழற்றும் விஜய் அதிகாரிகள் 6 பேர் SUSPEND
”ஊழல் பண்ண பதவி காலி” CM விஜய் வார்னிங்! பதறும் தவெக அமைச்சர்கள்
”வெயில்ல நிக்காம போறாரு” கேள்வி கேட்ட பொதுமக்கள் ESCAPE ஆன அமைச்சர் ஸ்ரீநாத்!
Kovai TVK Issue : பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
Embed widget