மேலும் அறிய

பிரசவ வார்டுக்கு நேரில் வந்த ஆதீனம் - பெற்றோர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பக்தர்

தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானத்தின் அவதார திருநாளை அடுத்து அவரது பக்தர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரத்தை ஆதீனம் கைகளால் பரிசாக வழங்கினார்.

தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகளின் அவதார திருநாளை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைக்கு அவரது பக்தர் தங்க மோதிரத்தை பரிசாக வழங்கியுள்ளார்.

பழமையான தருமை ஆதீனம் 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தருமபுரத்தில் 16 -ம் நூற்றாண்டில் குருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட பழமையான சைவத் திருமடம் அமைந்துள்ளது. புகழ்பெற்ற இந்த தருமபுரம் ஆதீனத்தின் 27 வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அருளாட்சி செய்து வருகிறார். 


பிரசவ வார்டுக்கு நேரில் வந்த ஆதீனம் - பெற்றோர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பக்தர்

ஆதீன மடாதிபதி பிறந்தநாள் 

இந்நிலையில் குருமகா சன்னிதானத்தின் அவதாரத் திருநாள் ( பிறந்தநாள் ) மற்றும் மணிவிழா ஆண்டு துவக்கம் புனர்பூசம் நட்சத்திர தினத்தில் நடைபெற்றது. அதனை முன்னிட்டு தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் அதிகாலை திருமடத்தில் சொக்கநாதர் பூஜை செய்தார். தொடர்ந்து மணிவிழாவை ஆண்டாக இந்தாண்டு முழுவதும் தினமும் ஒரு நூல் வீதம் 365 நூல்கள் வெளியிடப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக திருவாலவாயுடையார் பயகர மாலை என்னும் நூலை குருமகா சன்னிதானம் வெளியிட்டார். 


பிரசவ வார்டுக்கு நேரில் வந்த ஆதீனம் - பெற்றோர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பக்தர்

கலசபிஷேகம்

அதனை தொடர்ந்து அவர் 25 வது குருமகா சன்னிதானத்தின் குருபூஜை வழிபாடு செய்த பின்னர் குரு மூர்த்தங்களில் குருவார வழிபாடு மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு சென்ற தருமபுரம் ஆதீனத்திற்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து கோயில் சங்கு மண்டபத்தில் மிருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் உக்ரரத சாந்தி ஹோமங்கள் நடத்தப்பட்டு, கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு தட்சிணாமூர்த்தி சன்னதியில் தருமபுரம் ஆதீன கர்த்தருக்கு கலசபிஷேகம் மற்றும் மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. 


பிரசவ வார்டுக்கு நேரில் வந்த ஆதீனம் - பெற்றோர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பக்தர்

வழிபாடு 

தொடர்ந்து குருமகா சன்னிதானம் விநாயகர், அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி, முருகப்பெருமான் மற்றும் அபிராமி அம்பாள் சன்னதிகளுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். இதனை அடுத்து திருமடத்திற்கு திரும்பிய தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் ஆதீன கோயில்களின் பிரசாதம் பார்த்தார். அதனையடுத்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானத்தின் தந்தை மறைஞான சம்பந்தர், சகோதரர்கள் வெற்றிவேல், விருதகிரி, கார்த்திகேயன் மற்றும் ஆதீன தம்பிரான் சுவாமிகள், ஆதீன பொது மேலாளர் ரங்கராஜன், ஆதீன கோவில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி, சீர்காழி தமிழ் சங்கத் தலைவர் மார்க்கோனி மற்றும் கோவில் கண்காணிப்பாளர் செந்தில் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.


பிரசவ வார்டுக்கு நேரில் வந்த ஆதீனம் - பெற்றோர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பக்தர்

குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான மார்கோனி. இவர் கல்வி, ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்தல் என ஏராளமான சேவைகளை தனது சொந்த வருமானத்தில் செய்து வருகிறார். இந்நிலையில் தீவிர தருமபுர ஆதீனத்தின் பக்தரான இவர் தருமபுரம் ஆதீனத்தின் அறுபதாவது பிறந்தநாளை அடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை சீர்காழி ஆகிய அரசு மருத்துவமனைகளில் ஆதீனம் பிறந்த தினத்தில் பிறந்த பிறந்த குழந்தைகளுக்கு மார்கோனி பவுண்டேசன் சார்பில் 32 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்தார்.


பிரசவ வார்டுக்கு நேரில் வந்த ஆதீனம் - பெற்றோர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பக்தர்

அதற்கான நிகழ்வு மயிலாடுதுறை மற்றும் சீர்காழி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேரில் பங்கேற்று, பச்சிளம் குழந்தைளுக்கு தலா 1 கிராம் தங்க மோதிரம் அணிவித்து அருளாசி கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது.. எல்லோருக்கும் செம்ம சர்ப்ரைஸ்!
நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது.. எல்லோருக்கும் செம்ம சர்ப்ரைஸ்!
Padma Awards 2025: கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ;  கார் ரேசர் அஜித்-க்கு பூஷன்.!  மத்திய அரசு அதிரடி.!
கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ; கார் ரேசர் அஜித்-க்கு பூஷன்.! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.!
Padma Awards 2025:நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு; விருது பெற்ற தமிழர்கள் விவரம்!
Padma Awards 2025:நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு; விருது பெற்ற தமிழர்கள் விவரம்!
"நமக்கு அடையாளத்தை கொடுத்ததே அரசியலமைப்புச் சட்டம்தான்" குடியரசு தலைவர் உரை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN BJP LEADER : ’அண்ணாமலையை தூக்குங்க’’கண்டிசன் போட்ட EPS..நயினாருக்கு அடித்த JACKPOTVarunkumar vs Seeman : ”கொஞ்ச நஞ்ச பேச்சா..” சீமானை சீண்டும் வருண்குமார்? முற்றும் மோதல்!Vengaivayal Issue | Kabbadi Players: தமிழக வீராங்கனைகளுக்கு அடி தூக்கி வீசப்பட்ட Chair! எல்லைமீறிய வட இந்திய நடுவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது.. எல்லோருக்கும் செம்ம சர்ப்ரைஸ்!
நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது.. எல்லோருக்கும் செம்ம சர்ப்ரைஸ்!
Padma Awards 2025: கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ;  கார் ரேசர் அஜித்-க்கு பூஷன்.!  மத்திய அரசு அதிரடி.!
கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ; கார் ரேசர் அஜித்-க்கு பூஷன்.! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.!
Padma Awards 2025:நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு; விருது பெற்ற தமிழர்கள் விவரம்!
Padma Awards 2025:நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு; விருது பெற்ற தமிழர்கள் விவரம்!
"நமக்கு அடையாளத்தை கொடுத்ததே அரசியலமைப்புச் சட்டம்தான்" குடியரசு தலைவர் உரை!
நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
TVK Vs DMK: பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல.? திமுக தலைமைக்கு குடைச்சல் கொடுக்கும் விஜய்யின் ஸ்கெட்ச்...
பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல.? திமுக தலைமைக்கு குடைச்சல் கொடுக்கும் விஜய்யின் ஸ்கெட்ச்...
Republic Day 2025: குடியரசு தினம் கொண்டாடுறீங்களே, இந்த தகவல் எல்லாம் உங்ளுக்கு தெரியுமா.?
குடியரசு தினம் கொண்டாடுறீங்களே, இந்த தகவல் எல்லாம் உங்ளுக்கு தெரியுமா.?
HC Orders TN Govt.: பேருந்து கட்டண உயர்வு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
பேருந்து கட்டண உயர்வு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
Embed widget