மேலும் அறிய

ஆக்கூரில் குவிந்த பக்தர்கள்! தான்தோன்றீஸ்வரர் கோயிலில் நடந்த நிகழ்வு - என்ன தெரியுமா?

மயிலாடுதுறையை அடுத்த ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஓம் நம சிவாய கோஷங்கள் முழங்க தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவிலுள்ள ஆக்கூர் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த வாள்நெடுங் கண்ணியம்மன் சமேத தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலில் இன்று வெகு சிறப்பாக மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தேவாரப் பாடல் பெற்ற இக்கோயிலின் புண்ணிய நிகழவான குடமுழுக்கில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி பரவசத்தில் சுவாமி தரிசனம் செய்தனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயம்

சோழர் கால கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தான்தோன்றீஸ்வரர் கோயில், மாடக்கோயில்களில் ஒன்றாகும். கோசெங்கட் சோழனால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இந்த ஆலயம், பல வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டது. நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார் அவதரித்து முக்தி பெற்ற திருத்தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தலத்தின் மற்றொரு முக்கியத்துவம், ஒரு குறுநில மன்னன் ஆயிரம் அடியார்களுக்கு அன்னதானம் அளித்தபோது, இறைவன் ஆயிரத்தில் ஒருவராக வந்து அன்னம் உண்டு மன்னனுக்கு காட்சியளித்ததாக கூறப்படுகிறது. இத்தகைய பல்வேறு பெருமைகள் நிறைந்த இக்கோயில், புதுப்பிக்கப்பட்டு, இன்று அதன் மகா கும்பாபிஷேகத்தை கண்டது.


ஆக்கூரில் குவிந்த பக்தர்கள்! தான்தோன்றீஸ்வரர் கோயிலில் நடந்த நிகழ்வு - என்ன தெரியுமா?

யாக சாலை பூஜைகள் 

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த சில நாட்களாக யாக சாலை பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்று வந்தன. முதல் கால யாக சாலை பூஜைகள் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கி, தினமும் வேத மந்திரங்கள் முழங்க, சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. கும்பாபிஷேக தினபான இன்று காலை, ஆறாம் கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து, பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியங்கள் இசைக்க, மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார் தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.


ஆக்கூரில் குவிந்த பக்தர்கள்! தான்தோன்றீஸ்வரர் கோயிலில் நடந்த நிகழ்வு - என்ன தெரியுமா?

பரவசத்தில் பக்தர்கள் 

பக்தர்கள் பக்தி பரவசம் பொங்க ஓம் நம சிவாய கோஷங்கள் முழங்க, ஊர்வலம் கோயில் கோபுர கலசத்தை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து வேத விற்பன்னர்கள் மற்றும் சிவ ஆகம வல்லுநர்கள் வைத்தியநாத சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர், மந்திரங்கள் ஓத, சுவாமி, அம்பாள் மற்றும் பிற பரிவார மூர்த்திகளின் சன்னதி விமான கலசங்களில் புனித நீரை ஊற்றி குடமுழுக்கு செய்து வைத்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் அரோகரா கோஷங்கள் எழுப்பி, பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.


ஆக்கூரில் குவிந்த பக்தர்கள்! தான்தோன்றீஸ்வரர் கோயிலில் நடந்த நிகழ்வு - என்ன தெரியுமா?

அலைமோதிய பக்தர்களின் கூட்டம் 

கும்பாபிஷேகத்தைக் காண உள்ளூர் மற்றும் இன்றி வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கும்பாபிஷேக நிகழ்வு முடிந்ததும், பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர், மூலவர் வாள்நெடுங் கண்ணியம்மன் மற்றும் தான்தோன்றீஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

சிறப்பு ஏற்பாடுகள்

இந்த நிகழ்வில், கோயில் அறங்காவலர் குழு தலைவர் பாஸ்கரன், செயல் அலுவலர் உமேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு எவ்வித அசம்பாவிதமும் இன்றி கும்பாபிஷேக நிகழ்வை காண, செம்பனார்கோவில் காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். அன்னதானம் மற்றும் குடிநீர் வசதிகள் பக்தர்களுக்கு செய்யப்பட்டிருந்தன. கும்பாபிஷேக நிகழ்வு நிறைவடைந்ததும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஆரம்பம்; வினாத்தாளை புகைப்படம் எடுக்கத்தடை- விடுமுறை எப்போது?
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஆரம்பம்; வினாத்தாளை புகைப்படம் எடுக்கத்தடை- விடுமுறை எப்போது?
Embed widget