மேலும் அறிய

ஆக்கூரில் குவிந்த பக்தர்கள்! தான்தோன்றீஸ்வரர் கோயிலில் நடந்த நிகழ்வு - என்ன தெரியுமா?

மயிலாடுதுறையை அடுத்த ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஓம் நம சிவாய கோஷங்கள் முழங்க தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவிலுள்ள ஆக்கூர் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த வாள்நெடுங் கண்ணியம்மன் சமேத தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலில் இன்று வெகு சிறப்பாக மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தேவாரப் பாடல் பெற்ற இக்கோயிலின் புண்ணிய நிகழவான குடமுழுக்கில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி பரவசத்தில் சுவாமி தரிசனம் செய்தனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயம்

சோழர் கால கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தான்தோன்றீஸ்வரர் கோயில், மாடக்கோயில்களில் ஒன்றாகும். கோசெங்கட் சோழனால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இந்த ஆலயம், பல வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டது. நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார் அவதரித்து முக்தி பெற்ற திருத்தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தலத்தின் மற்றொரு முக்கியத்துவம், ஒரு குறுநில மன்னன் ஆயிரம் அடியார்களுக்கு அன்னதானம் அளித்தபோது, இறைவன் ஆயிரத்தில் ஒருவராக வந்து அன்னம் உண்டு மன்னனுக்கு காட்சியளித்ததாக கூறப்படுகிறது. இத்தகைய பல்வேறு பெருமைகள் நிறைந்த இக்கோயில், புதுப்பிக்கப்பட்டு, இன்று அதன் மகா கும்பாபிஷேகத்தை கண்டது.


ஆக்கூரில் குவிந்த பக்தர்கள்! தான்தோன்றீஸ்வரர் கோயிலில் நடந்த நிகழ்வு - என்ன தெரியுமா?

யாக சாலை பூஜைகள் 

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த சில நாட்களாக யாக சாலை பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்று வந்தன. முதல் கால யாக சாலை பூஜைகள் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கி, தினமும் வேத மந்திரங்கள் முழங்க, சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. கும்பாபிஷேக தினபான இன்று காலை, ஆறாம் கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து, பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியங்கள் இசைக்க, மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார் தலையில் சுமந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.


ஆக்கூரில் குவிந்த பக்தர்கள்! தான்தோன்றீஸ்வரர் கோயிலில் நடந்த நிகழ்வு - என்ன தெரியுமா?

பரவசத்தில் பக்தர்கள் 

பக்தர்கள் பக்தி பரவசம் பொங்க ஓம் நம சிவாய கோஷங்கள் முழங்க, ஊர்வலம் கோயில் கோபுர கலசத்தை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து வேத விற்பன்னர்கள் மற்றும் சிவ ஆகம வல்லுநர்கள் வைத்தியநாத சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர், மந்திரங்கள் ஓத, சுவாமி, அம்பாள் மற்றும் பிற பரிவார மூர்த்திகளின் சன்னதி விமான கலசங்களில் புனித நீரை ஊற்றி குடமுழுக்கு செய்து வைத்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் அரோகரா கோஷங்கள் எழுப்பி, பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.


ஆக்கூரில் குவிந்த பக்தர்கள்! தான்தோன்றீஸ்வரர் கோயிலில் நடந்த நிகழ்வு - என்ன தெரியுமா?

அலைமோதிய பக்தர்களின் கூட்டம் 

கும்பாபிஷேகத்தைக் காண உள்ளூர் மற்றும் இன்றி வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கும்பாபிஷேக நிகழ்வு முடிந்ததும், பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர், மூலவர் வாள்நெடுங் கண்ணியம்மன் மற்றும் தான்தோன்றீஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

சிறப்பு ஏற்பாடுகள்

இந்த நிகழ்வில், கோயில் அறங்காவலர் குழு தலைவர் பாஸ்கரன், செயல் அலுவலர் உமேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு எவ்வித அசம்பாவிதமும் இன்றி கும்பாபிஷேக நிகழ்வை காண, செம்பனார்கோவில் காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். அன்னதானம் மற்றும் குடிநீர் வசதிகள் பக்தர்களுக்கு செய்யப்பட்டிருந்தன. கும்பாபிஷேக நிகழ்வு நிறைவடைந்ததும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கும்பகோணம் அருகே நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழா: நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
Aadi Perukku: ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிப்பெருக்கு.. தாலிக்கயிறு மாற்ற உகந்த நேரம் எது? - நோட் பண்ணுங்க!
Aadi Perukku: ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிப்பெருக்கு.. தாலிக்கயிறு மாற்ற உகந்த நேரம் எது? - நோட் பண்ணுங்க!
கர்நாடகாவுக்கு பதிலடி? மயிலாடுதுறையில் கரைபுரண்டு ஓடப்போகும் செயற்கை பக்தி வெள்ளம்!
கர்நாடகாவுக்கு பதிலடி? மயிலாடுதுறையில் கரைபுரண்டு ஓடப்போகும் செயற்கை பக்தி வெள்ளம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget