மேலும் அறிய

வருகிறது மகா சிவராத்திரி: ருத்ராட்ச பூஜை செய்வது எப்படி? ஏன் செய்ய வேண்டும்?

இந்துக்கள் மகா சிவராத்திரியைக் கடைப்பிடிக்க ஆயத்தமாகி வருகின்றனர். இந்த மகா சிவராத்திரியில் ருத்ராட்ச பூஜை செய்வது எப்படி என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.

இந்துக்கள் மகா சிவராத்திரியைக் கடைப்பிடிக்க ஆயத்தமாகி வருகின்றனர். இந்த மகா சிவராத்திரியில் ருத்ராட்ச பூஜை செய்வது எப்படி என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.

சிவ சின்னங்களில் முக்கியமானது ருத்ராட்சம். இது சிவனின் அம்சமாகவே கருதப்படுகிறது. ருத்ரன் என்பது சிவ ரூபத்தை குறிக்கும். அட்சம் என்றால் கண்கள் என்று பொருள். சிவனின் கண்களுக்கு நிகரானது. ருத்ரனின் அட்சம் என்பதால் ருத்ராட்சம் என்ற பெயர் உண்டாயிற்று.

சிவ தாண்டவத்தின் போது ருத்ரனின் கண்களில் இருந்து சிந்திய நீர்த் துளிகளில் இருந்து ருத்ராட்ச மரங்கள் உண்டாகின. இவற்றில் முளைத்த மணிகள் போன்ற காய்களுக்கு ருத்ராட்சம் என்ற பெயர் ஏற்பட்டது. கேட்ட வளங்களை தரக் கூடிய கருணா மூர்த்தி என்பதனால் ருத்ராட்சம் அணிபவர்களை எந்த தீமையும் நெருங்காது.

மகா சிவராத்திரி, பிரதோஷம், சிவ பூஜை, ருத்ர ஜபம் போன்ற சிவ வழிபாட்டிற்குரிய நேரங்களில், சிவாலயங்களில் நடக்கும் வழிபாட்டின் போது ருத்ராட்ச மாலை அணிவது மிக அதிகமான பலனை தரக் கூடியதாகும். குறிப்பாக மந்திர உச்சாடனம் செய்யும் போது ருத்ராட்சம் பயன்படுத்தி ஜபம் செய்வது பல மடங்கு நன்மைகளை தரும்.

ருத்ராட்சம் வைத்திருப்பவர்கள் அல்லது அணிந்திருப்பவர்கள், ருத்ராட்ச மாலையை பால் அல்லது பன்னீரில் மூழ்க வைத்து எடுக்கலாம். கங்கா தீர்த்தம் இருந்தால் அதிலும் மூழ்க வைத்து எடுத்து, நன்றாக துடைத்து விட்டு, கையில் வைத்து, இரு கைகளாலும் மூடி, தீட்சை பெற்றவர்களாக இருந்தால் தீட்சை மந்திரத்தை 108 முறை உச்சரிக்கலாம். தீட்சை பெறாதவர்கள், ஓம் நவ சிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தை 108 முறை சொல்லி உச்சாடனம் செய்ய வேண்டும். பிறகு அந்த மாலையை சிவ பெருமானின் படத்திலோ அல்லது லிங்கத்தின் மீதோ அணிவிக்க வேண்டும்.

வீட்டில் சிவ லிங்கம் வைத்திருப்பவர்கள், மகா சிவராத்திரியன்று நான்கு காலங்களுக்கும் உரிய அபிஷேக பொருட்களை பயன்படுத்தி, அந்தந்த காலங்களுக்குரிய நைவேத்தியம் படைத்து சிவ பூஜை செய்யலாம். முடியாதவர்கள், வெறும் தண்ணீர் வைத்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, இரண்டு வில்வ இலைகளையாவது பயன்படுத்தி அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

மகா சிவராத்திரி வரலாறு: 

தங்களுக்குள் யார் பெரியவர் என்று பிரம்மனும், விஷ்ணுவும் வாதிட்டனர். அந்த வாத்திற்கு பதில் தேடி சிவபெருமானிடம் வந்தனர். அவர்களில் யார் பெரியவர் என்பதை விளக்கிட சிவபெருமான் ஒரு சோதனையை நடத்தினார். தனது தலையையும், பாதத்தையும் காண்பவரே உங்களுள் பெரியவர் என்று கூறி வானத்திற்கும், பூமிக்குமாய் ஜீவஜோதியாய் எழுந்தருளினார்.அந்த சோதனையை ஏற்று வராக அவதாரம் எடுத்து சிவபெருமானின் காலடியைக் காண பூமியைத் தோண்டி சென்றார் விஷ்ணு. அன்னத்தின் வடிவத்தைப் பெற்ற பிரம்மன் சிவபெருமானின் உச்சியைக் காண வானத்திற்கு எழும்பினார்.

இருவரும் கடுமையாக முயற்சித்தும் சிவனின் தலையையோ, அடியையோ காண முடியவில்லை. தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விஷ்ணு திரும்பினார்.உயர உயரப் பறந்து முயன்ற பிரம்மன் களைப்படைந்திருந்த நிலையில், வானத்தில் இருந்து பூமியை நோக்கி விழுந்துக் கொண்டிருந்த தாழம்பூவைக் கண்டார்.

எங்கிருந்து வருகிறாய் என்று பிரம்மன் கேட்க, நான் சிவனின் தலைமுடியில் இருந்து விழுந்து கொண்டிருக்கிறேன். யுகம், யுகமாய் பயணித்தும் பூமியை அடையவில்லை என்று கூறியது. தான் சிவனின் தலை முடியைக் கண்டதாக அவரிடம் சாட்சி கூறுமாறு பிரம்மன் கேட்க, தாழம்பூ அதற்கு ஒப்புக்கொண்டு அவ்வாறே சிவபெருமானிடமும் உரைத்தது. பிரம்மனுக்காக தாழம்பூ பொய் கூறியதைக் கேட்ட சிவபெருமான் கோபமுற்று ஜோதி வடிவாய் இருந்தவர், அக்னிப் பிழம்பாக மாறினார். இதனால் இந்திரன், எமன், அக்னி, குபேரன் உள்ளிட்ட பாலகர்கள் எட்டு பேரும் மற்றும் தேவர்களும் அமைதி பெற வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், ஓர் மலையாய் அடங்கி சிறிய ஜோதியாய் அதன் உச்சியில் தென்பட, அனைவரும் வணங்கினர்.அந்த நாளே மகா சிவராத்திரியாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: விஜய்க்கு 27ம் தேதி கண்டம்.. சட்டமன்ற தேர்தலில் ஜெயிப்பாரா? - ஜோதிடர் ஷெல்வி கணிப்பு!
TVK Vijay: விஜய்க்கு 27ம் தேதி கண்டம்.. சட்டமன்ற தேர்தலில் ஜெயிப்பாரா? - ஜோதிடர் ஷெல்வி கணிப்பு!
புனித இரவில் விடிய விடிய தொழுகை.. மதுரையில் குவிந்த இஸ்லாமியர்கள் - காரணம் என்ன?
புனித இரவில் விடிய விடிய தொழுகை.. மதுரையில் குவிந்த இஸ்லாமியர்கள் - காரணம் என்ன?
மூன்று குளங்களில் புனித நீராடினால் எம பயம் நீங்குமா? திருவெண்காட்டில் நடந்த விசேஷ தீர்த்தவாரி! 
மூன்று குளங்களில் புனித நீராடினால் எம பயம் நீங்குமா? திருவெண்காட்டில் நடந்த விசேஷ தீர்த்தவாரி! 
மதுரை மக்களின் பல ஆண்டுகால கனவு நிறைவேறியது.. மீனாட்சியம்மன் கோயில் வாசலில் மத்திய அமைச்சர் நெகிழ்ச்சி !
மதுரை மக்களின் பல ஆண்டுகால கனவு நிறைவேறியது.. மீனாட்சியம்மன் கோயில் வாசலில் மத்திய அமைச்சர் நெகிழ்ச்சி !
West Bengal | Phase 1

294 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

294 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Phase 1

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Phase 1

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Phase 1

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Phase 1

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

ABP Premium

வீடியோ

CV Shanmugam on Nayanthara | ”எனக்கு நயன்தாரா வேணும்! கனவை நிறைவேத்துவாரா” எல்லை மீறிய சிவி சண்முகம்
MK Stalin biopic | ஸ்டாலினாக சமுத்திரக்கனி? படமாகும் வாழ்க்கை வரலாறு! விஜய் சேதுபதி யார் கேரக்டர்?
DMK VCK Alliance | ”6 சீட் பத்தாது, 10 குடுங்க” விடாப்பிடியாக நிற்கும் திருமா இழுபறியில் திமுக-விசிக
Adani Group Helps Tamil Farmers | இயற்கை விவசாயம் உதவும் அதானி குழுமம் தமிழர்களின் வெற்றிக் கதை
Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டி.. முடிவெடுத்த விஜய்.. கரை சேருமா?
TVK Vijay: 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டி.. முடிவெடுத்த விஜய்.. கரை சேருமா?
Iran US war: சண்டைலா நிறுத்த முடியாது.. அமெரிக்கா, இஸ்ரேல் முட்டி போடனும் - ஈரானின் மொஜ்தாபா உறுதி
Iran US war: சண்டைலா நிறுத்த முடியாது.. அமெரிக்கா, இஸ்ரேல் முட்டி போடனும் - ஈரானின் மொஜ்தாபா உறுதி
Iran Israel War:
Iran Israel War: "ஈரான் போரை ஆதரிக்க முடியாது.." அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு இயக்குனர் ராஜினாமா ! அதிர்ச்சியில் ட்ரம்ப்
TVK Candidate List: விஜய் முதல் ஆதவ் அர்ஜுனா வரை.. சென்னையை தவெக தலைவர்கள் குறிவைத்தது ஏன்?
TVK Candidate List: விஜய் முதல் ஆதவ் அர்ஜுனா வரை.. சென்னையை தவெக தலைவர்கள் குறிவைத்தது ஏன்?
Dindigul Srinivasan: ’’சேலை மட்டுமா, பாவாடை கிடையாதா?’’ திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு- பொளக்கும் நெட்டிசன்கள்
Dindigul Srinivasan: ’’சேலை மட்டுமா, பாவாடை கிடையாதா?’’ திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு- பொளக்கும் நெட்டிசன்கள்
Demonte Colony 3: டிமான்டி காலனி 3 லைப்ரேரியன் வேடத்தில் இவரா? செம ட்ரீட் இருக்கு!
Demonte Colony 3: டிமான்டி காலனி 3 லைப்ரேரியன் வேடத்தில் இவரா? செம ட்ரீட் இருக்கு!
ஒருவழியாக கருப்பு படத்தை வாங்க முன்வந்த ஓடிடி நிறுவனம்..எத்தனை கோடிக்கு தெரியுமா?
ஒருவழியாக கருப்பு படத்தை வாங்க முன்வந்த ஓடிடி நிறுவனம்..எத்தனை கோடிக்கு தெரியுமா?
TN Election Rewind: அண்ணாவுக்கு சேவல், கருணாநிதிக்கு உதயசூரியன்! ஆளாளுக்கு ஒரு சின்னம் - திமுகவிலா இப்படி?
TN Election Rewind: அண்ணாவுக்கு சேவல், கருணாநிதிக்கு உதயசூரியன்! ஆளாளுக்கு ஒரு சின்னம் - திமுகவிலா இப்படி?
Embed widget