Maha Shivaratri 2026: மகா சிவராத்திரி.. சிவபெருமானுக்கு படைக்கக்கூடாத 5 பொருட்கள்!
2026 மகா சிவராத்திரி வரும் பிப்ரவரி 15ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் இந்நாளில் இறை வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் படைக்கக்கூடாத 5 பொருட்கள் பற்றிக் காணலாம்.

சிவபெருமானை வழிபடும் மிக முக்கியமான நாளான மகா சிவராத்திரி வழிபாட்டில் நாம் செய்யக்கூடாத விஷயங்கள் பற்றிக் காணலாம்.
2026 மகா சிவராத்திரி
இந்து மதத்தில் பூஜை வழிபாடு என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். எந்த பண்டிகை, எத்தகைய விசேஷ நாட்கள் என்றாலும் விரதமிருந்து, வழிபாடு செய்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இப்படியான நிலையில் மாசி மாதம் பிப்ரவரி 13ம் தேதி பிறக்கிறது. இந்த மாதம் வந்து விட்டாலே நம் அனைவருக்கும் மகா சிவராத்திரி தான் நினைவுக்கு வரும். இத்தகைய நாள் சிவபெருமானுக்குரிய நாளாகும்.
மகா சிவராத்திரி நாளில் மக்கள் இரவு முழுவதும் கண் விழித்து விரதம் இருந்து வழிபடுகிறார்கள். பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் இருந்த நான் தான் பெரியவன் என்ற அகந்தையை அழிக்க சிவபெருமான் ஜோதி வடிவில் தோன்றிய நாளாக மகா சிவராத்திரி பார்க்கப்படுகிறது. இன்றைய நாளில் வீட்டிலும், அருகிலுள்ள சிவலாயங்களிலும் நாம் விரதமிருந்து வழிபடலாம். அப்படி செய்வதால் சிவபெருமான் அருள் பெற்று வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி, செல்வ செழிப்பு ஆகியவை அமையும் என சொல்லப்படுகிறது.
2026ம் ஆண்டு மகா சிவராத்திரி பண்டிகையானது பிப்ரவரி 15ம் தேதி கொண்டாடப்படுகின்றது. அன்று மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை சிவாலயங்களில் 4 கால பூஜை வழிபாடு வெகுவிமரிசையாக நடைபெறும்.
சிவ வழிபாட்டில் படைக்கக்கூடாத பொருட்கள்
சிவபெருமானுக்கு பூஜை வழிபாட்டில் நாம் தாழம்பூ சாற்றக்கூடாது. காரணம் சிவபெருமான் ஜோதி பிழம்பாக தோன்றி தன்னுடைய அடி முடியை கண்டறிபவர் யாரோ அவரே பெரியவன் என விஷ்ணுவையும், பிரம்மாவையும் சோதித்தார். அப்போது தாழம்பூ சிவபெருமானின் தலைமுடியை கண்டதாக பொய் சாட்சியம் அளித்ததால் அது சிவபூஜையில் தடை செய்யப்பட்டுள்ளது.
அடுத்ததாக லட்சுமி தேவியின் வடிவமாக அறியப்படும் துளசியை நாம் ஒருபோது சிவ வழிபாட்டில் பயன்படுத்தக்கூடாது என கூறப்படுகிறது. விஷ்ணுவுக்கு உகந்தது துளசி என்பதாலும் படைக்கப்படுவதில்லை.
சாஸ்திரத்தின்படி குங்குமப்பூ சிவ வழிபாட்டில் மட்டும் படைக்கக்கூடாது. அதனை பார்வதி தேவியுடன் இருக்கும்போது படைப்பது உகந்தது. இது வாழ்க்கையில் செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் பெற்றுத்தரும் என்பது நம்பிக்கையாகும். சங்கு சிவபெருமான் இறை வழிபாட்டில் இடம்பெறுவது முக்கியத்துவம் என்றாலும், மகா சிவராத்திரி நாளில் இரவில் சிவலிங்கத்திற்கு சங்கு நீரை பயன்படுத்து அபிஷேகம் செய்வது அசுபமாக கருதப்படுகிறது.
சிவனுக்கு அரிசி படைப்பது என்பது மிகப்பெரிய சம்பிராதயமாக பார்க்கப்படுகிறது. மஞ்சள் கலந்த முழு அரிசி படைக்கலாம், அரிசியை சாதமாக்கி படைக்கலாம். அதைவிடுத்து அரிசியை உடைத்து படைக்கக்கூடாது. அதேபோல் நெல் தானியங்களையும் படைக்க வேண்டாம் என சொல்லப்பட்டுள்ளது.























