மேலும் அறிய

ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம்: விழுப்புரம் மாவட்டமே ஆன்மிகக் கடலில் மூழ்கியது!

விழுப்புரம் அம்மன் கோயில்களில் கோலாகலமான ஆடிப்பூரம்! வளைகாப்பு உற்சவத்தில் 'வளையல் பிரசாதம்' பெற திரண்ட பெண் பக்தர்கள்

விழுப்புரம்: ஆடி மாதத்தின் மிக முக்கிய ஆன்மிகப் பண்டிகையான ஆடிப்பூரத் திருநாளை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் பிரம்மாண்ட வளைகாப்பு உற்சவம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து, வளையல் பிரசாதத்தைப் பெற்றுச் சென்றனர்.

அம்பாள் அவதார நாள்

உலக உயிர்களைக் காக்கும் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியான பார்வதி தேவி அவதரித்த நாளாகவும், திருமாலையே தன் பக்தியால் ஆட்கொண்ட சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் நாச்சியார் பூலோகத்தில் அவதரித்த நாளாகவும் ஆடிப்பூரம் போற்றப்படுகிறது. பென்மையைப் போற்றி வணங்கும் இந்த நன்னாளில், அம்பாளுக்கு வளைகாப்பு நடத்தி வழிபடுவது தொன்றுதொட்டு நிலவி வரும் ஆன்மிக மரபாகும்.

வண்ண வளையல் அலங்காரம்

ஆடிப்பூரத்தை முன்னிட்டு, விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வீரவாழி அம்மன் திருக்கோயில் மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆதிவாலீஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட பல்வேறு திருத்தலங்களில் அதிகாலை முதலே சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஆயிரக்கணக்கான வண்ண வண்ணக் கண்ணாடி வளையல்களால் அம்மனுக்குச் சார்த்தப்பட்டு, கண்ணைக் கவரும் வகையில் பிரம்மாண்ட வளைகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பக்தர்களின் நம்பிக்கை

ஆடிப்பூர நாளில் அம்மனுக்குச் சாற்றப்பட்ட வளையல்களை பிரசாதமாகப் பெற்று அணிந்து கொண்டால்:

திருமணத் தடைகள் நீங்கி விரைவில் மாங்கல்ய பாக்கியம் கூடிவரும். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு விரைவில் மழலைச் செல்வம் கிட்டும். குடும்பத்தில் அமைதியும், தீர்க்க சுமங்கலி பாக்கியமும் நிலைக்கும் என்பது பக்தர்களின் ஆழமான நம்பிக்கையாகும்.

நீண்ட வரிசையில் பெண்கள்

பூஜைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அம்மனின் அருள்பெற்ற புனித வளையல்கள் அங்கிருந்த பெண் பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகிக்கப்பட்டன. குடும்ப நலன் வேண்டியும், அம்பாளின் அருளைப் பெறவும் ஆயிரக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் மணி கணக்கில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து, வளையல் பிரசாதத்தைப் பெற்றுச் சென்றனர். இதனால் விழுப்புரம் மாவட்டமே ஆன்மிகச் பரவசத்தில் மூழ்கியது.

அம்பாளுக்கு வளைகாப்பு நடப்பது ஏன்?

ஆடி மாதத்தின் மிக முக்கிய ஆன்மிக நன்னாட்களில் ஒன்றான ஆடிப்பூரம், தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தாய்மைக்கும் பெண்மைக்கும் பெருமை சேர்க்கும் இந்த நன்னாளில், அம்மன் கோயில்களில் நடைபெறும் 'ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம்' மிக முக்கியத்துவம் வாய்ந்த வழிபாட்டு நிகழ்வாகக் கருதப்படுகிறது.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் காத்து அருளும் ஜகதாம்பிகையான பார்வதி தேவி அவதரித்த நாளாக ஆடிப்பூரம் போற்றப்படுகிறது. உலக உயிர்கள் அனைத்திற்கும் தாயாக விளங்கக்கூடிய அம்பாளுக்கு, கர்ப்பிணிப் பெண்களுக்கு நடத்துவது போல பக்தர்கள் அனைவரும் ஒன்று கூடி அன்புடனும் பக்தியுடனும் வளைகாப்பு நடத்தி மகிழும் சிறப்பான வைபவமே இந்த ஆடிப்பூர வளைகாப்பு உற்சவமாகும்.

மேலும், பூலோகத்தில் பக்தியால் இறைவனையே ஆட்கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் அவதரித்த நநாளாகவும் இந்நாள் இணைந்து சிறப்பிக்கப்படுகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம்: விழுப்புரம் மாவட்டமே ஆன்மிகக் கடலில் மூழ்கியது!
ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம்: விழுப்புரம் மாவட்டமே ஆன்மிகக் கடலில் மூழ்கியது!
எமனை வென்ற திருக்கடையூரில் சிலிர்க்க வைத்த ஆன்மீக வைபவம்! என்ன தெரியுமா..?
எமனை வென்ற திருக்கடையூரில் சிலிர்க்க வைத்த ஆன்மீக வைபவம்! என்ன தெரியுமா..?
திருவையாறில் அப்பர் கயிலைக் காட்சி விழா: பக்தர்கள் வெள்ளத்தில் திளைத்த ஐயாறப்பர் திருத்தலம்
திருவையாறில் அப்பர் கயிலைக் காட்சி விழா: பக்தர்கள் வெள்ளத்தில் திளைத்த ஐயாறப்பர் திருத்தலம்
"அங்காளம்மா தாயே... அருள் புரிவாயே!" - ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்... மேல்மலையனூரில் விண்ணதிர முழங்கிய பக்தி கோஷம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Embed widget