மேலும் அறிய

Koovagam Festival 2025: உலகப் புகழ் பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா கோலாகல தொடக்கம்

உலகப்புகழ் பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா இன்று சாகை வார்த்தால் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கள்ளக்குறிச்சி: உலகப்புகழ் பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா இன்று சாகை வார்த்தால் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏழு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வீடுகளில் வந்த குழு கூடங்களை படையல் செய்து கூழ்கள் பக்தர்களுக்கு வழங்கினர்.
 
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு கூத்தாண்டவர் திருக்கோவில் உள்ளது. திருநங்கைகள் தங்கள் கணவராக பாவித்து கொண்டு ஆண்டுதோறும் கொண்டாடும் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா இன்று சாகைபார்த்தல் மற்றும் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் கூவாகம் நத்தம் சிவாலயாங்குளம் வேலூர் உட்பட ஏழு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தங்களது வீடுகளில் படையல் செய்து ஊர்வலமாக கொண்டு வந்த கூழ்குடங்களை கூத்தாண்டவர் கோவில் முன்பாக வைத்து சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்திருந்த கூழ் பொது மக்களுக்கு  வழங்கப்பட்டது. இதில் கூவாகம் நத்தம் உள்ளிட்ட ஏழு கிராமங்கள் மட்டுமின்றி உளுந்தூர்பேட்டையை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 
மகாபாரதப் போரில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் போர் கொண்ட போது பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டுமென்றால் 32 சாமுத்திரிகா லட்சணம் பொருந்திய ஆண் மகனை பலி கொடுக்க வேண்டும் அதற்கு கிருஷ்ணனையும் அர்ஜுனனையும் பலி கொடுக்க முடியாத நிலையில் அதற்கு மூன்றாவது நபராக அரவணை தேர்ந்தெடுக்கின்றனர். இதற்காக அரவணை சந்தித்து கேட்டபோது தான் பலியாக ஒப்புக்கொண்ட அரவான் அதற்கு முதல் நாள் தனக்கு திருமணம் செய்து திருமண வாழ்க்கையை தான் அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையை விடுக்கிறார். இடிந்தால் பலியாகப் போகும் ஒருவரை மணக்க எந்த பெண்ணும் முன் வராத நிலையில் கிருஷ்ண பரமாத்மா மோகினி அவதாரம் எடுத்து பெண்ணாக உருமாறுகிறார். தொடர்ந்து அரவணை திருமணம் செய்து கொண்டு இரவு முழுவதும் ஒரு பெண் கொடுக்கும் அனைத்து சுகத்தையும் மோகினி அரவனுக்கு கொடுத்த நிலையில் மறுநாள் காலை அரவான் பலி கொடுக்கிறார்.
 
இதுவே கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவின் வரலாறு. அதனால் கூவாகம் கூத்தாண்டவர் தங்கள் கணவராக பாவித்துக்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள திருநங்கைகள் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவிற்கு வருவார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகளுக்கு தாலி கட்டிடும் நிகழ்ச்சி வருகின்ற 13ஆம் தேதி இரவு நடக்கிறது. இந்த திருவிழாவில் தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் திருநங்கைகள் கோவில் முன்பாக பூசாரிகள் கையால் தாலி கட்டிக் கொண்டு தங்களை மணப்பெண்கள் போல் அலங்கரித்துக் கொண்டு அரவணை தங்கள் கணவராக பாவித்து கொண்டு கும்மியடித்து விடிய விடிய ஆட்டம் ஆடி பாட்டு பாடி மகிழ்வார்கள். மறுநாள் 14ஆம் தேதி காலை தேரோட்டம் நடைபெற உள்ளது.
 
இதில் உளுந்தூர்பேட்டை மட்டும் இன்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். பக்தர்களின் வசதிக்காக சென்னை, திருச்சி, சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பெருநகரங்களில் இருந்து கூவாகம் கிராமத்திற்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. அதேபோல் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகளை ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 
"காவிரி பொங்கி வரணும்!" - கண்ணீரும் பக்தியுமாக ஆடிப்பெருக்கை கொண்டாடிய மயிலாடுதுறை மக்கள்.

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget