மேலும் அறிய

Kandadevi Temple: 17 ஆண்டுக்கு பிறகு போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற கண்டதேவி கோயில் தேரோட்டம்

Kandadevi Temple: 17 ஆண்டுகளுக்குப் பிறகு அமைதியாக நடைபெற்று முடிந்த கண்டதேவி தேரோட்டத்தால் அதிகாரிகளும் சுற்றுவட்டார பகுதி மக்களும் நிம்மதி அடைந்தனர்.

தேவகோட்டை அருகே கண்டதேவி கோயில் தேரோட்டம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியாக நடைபெற்றது.
 

கண்டதேவி கோயில்

 
Kandadevi Temple: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில், சிவகங்கை சமஸ்தானம் மற்றும் அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் சொர்ண மூர்த்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற இக்கோயிலில், 4 நாட்டார்கள் எனப்படும் உஞ்சனை, செம்பொன்மாரி, தென்னீர்வயல், இறகு சேரியை சேர்ந்த கிராம மக்கள் ஒன்று கூடி இக்கோயிலின் தேரோட்டத்தை வெகு விமரிசையாக நடத்தி வந்தனர். இந்த சூழலில் பழமையாகி பழுதானதன் காரணமாக 2006-ம் ஆண்டு தேரோட்டம் நிறுத்தப்பட்டது. பின்பு புதிய தேர் உருவாக்கப்பட்டு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தேரோட்டம் நடத்த முற்பட்டபோது வடம் பிடித்து இழுப்பதில் இரண்டு சமூகத்தை சேர்ந்தவர்கள் இடையே பிரச்னை ஏற்பட்டதால், இந்து அறநிலை துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் அடிப்படையில் தேரோட்டம் நிறுத்தப்பட்டது.
 

தேர் வெள்ளோட்டம்

புதிய தேர் செய்யப்பட்ட நிலையில் தேர் வெள்ளோட்டம் நடத்தாமல் இருந்தது. தேர் வெள்ளோட்டம் நடத்த தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவுபடி கடந்த பிப்ரவரி 11-ம் தேதி தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. தேவஸ்தான ஊழியர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் இக்கோயில் ஆனித் திருவிழா ஜூன் 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருவாய்துறை காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்தைக்கு பின் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையுடன் வடம் பிடித்து தேரை இழுக்க முடிவு செய்தனர். 
 

அமைதியாக நடந்த தேர்திருவிழா

 
இந்நிலையில் இன்று தேரோட்டம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியாக நடைபெற்றது. இதற்காக முன்அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பலத்த சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேளதாளங்கள் முழங்க சொர்ணமூர்த்தீஸ்வரர் திருத்தேரில் எழுந்தருள, நீதிமன்ற உத்தரவின் படி கோயிலில் இருந்து புறப்பட்ட தேர் கோயிலை சுற்றி சுமார் ஒன்னரை கிலோ மீட்டர் தூரம் வந்து  மீண்டும் நிலையை அடைந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு தென் மண்டல ஐ.ஜி கண்ணன் தலைமையில், 5 டி.ஐ.ஜி ,12 எஸ்.பி உட்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்டதேவியை சுற்றிலும் 18 சோதனை சாவடிகள், 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு விரிவானபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு அமைதியாக நடைபெற்று முடிந்த கண்டதேவி தேரோட்டத்தால் அதிகாரிகளும் சுற்றுவட்டார பகுதி மக்களும் நிம்மதி அடைந்தனர்.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா! கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. மு.க முத்து பற்றிய சுவாரஸ்யம்
உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா! கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. மு.க முத்து பற்றிய சுவாரஸ்யம்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா! கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. மு.க முத்து பற்றிய சுவாரஸ்யம்
உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா! கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. மு.க முத்து பற்றிய சுவாரஸ்யம்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
பக்தர்களுக்கு ஷாக்... திருவண்ணாமலை கோவில் தரிசன கட்டணம் உயர்வு! முழு விவரம்
பக்தர்களுக்கு ஷாக்... திருவண்ணாமலை கோவில் தரிசன கட்டணம் உயர்வு! முழு விவரம்
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
Railway Board Approval: 4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
Embed widget