மேலும் அறிய

ஆன்மீகம்: குமரக்கோட்டம் கோயிலிலும் கொடியேற்றி ஆகிவிட்டது.. அடுத்தடுத்து வரும் திருவிழா..பக்தி வெள்ளத்தில் காஞ்சிபுரம்

" வேலும், மயிலும், வரைந்த கொடியை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க கோவில் அர்ச்சகர்கள் கொடியை ஏற்றி வைத்தனர் "

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்
 
கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமான காஞ்சிபுரம் குமரக்கோட்டம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில், (kanchipuram kumarakottam temple) வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நகரேஷு காஞ்சி என போற்றப்படும் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவிலுக்கும், அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவிலிலுக்கும் இடையில் சோமாஸ் கந்தர் மூர்த்த கோட்டமாக குமரக்கோட்டம் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது.

ஆன்மீகம்: குமரக்கோட்டம் கோயிலிலும் கொடியேற்றி ஆகிவிட்டது.. அடுத்தடுத்து வரும் திருவிழா..பக்தி வெள்ளத்தில் காஞ்சிபுரம்
 
இந்த திருக்கோவிலில் பிரணவ மந்திரத்திற்கு விளக்கம் கேட்டு, பதில் தெரியாமல் விழித்த பிரம்மனை சிறையில் இட்டு தானே படைப்புத் தொழிலை மேற்கொண்டு கையில் கமண்டலம், ருத்ராட்ச மாலையுடன் பிரம்மாவின் கோலத்தில் முருகப்பெருமான் காட்சி அளித்து வருகிறார். முருகப்பெருமானின் கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் முருகப்பெருமானுக்கு ஆண்டு தோறும் வைகாசி மாதம் வைகாசி விசாக திருவிழா உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும்.
 
மேளதாளங்கள் முழங்க 
 
அதன்படி சோபகிருது  வருடம் வைகாசி மாதத்தை முன்னிட்டு வைகாசி விசாக திருவிழா உற்சவத்தை ஒட்டி திருக்கொடியேற்ற உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கொடியேற்ற உற்சவத்தை முன்னிட்டு மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டதை தொடர்ந்து, வேலும் மயிலும் வரைந்த திருக்கொடிக்கு மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரத்துடன் மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க கோவில் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை செய்து கோவில் கொடிமரத்தில் திருகொடியை ஏற்றி வைத்தனர், பின்னர் கொடி மரத்திற்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தனர்.

ஆன்மீகம்: குமரக்கோட்டம் கோயிலிலும் கொடியேற்றி ஆகிவிட்டது.. அடுத்தடுத்து வரும் திருவிழா..பக்தி வெள்ளத்தில் காஞ்சிபுரம்
 
வைகாசி விசாக பெருவிழா 
 
வைகாசி விசாக திருவிழா கொடியேற்ற உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கொடியேற்ற உற்சவத்தை கண்டு விட்டு முருகப்பெருமானை வணங்கி வழிபட்டுச் சென்றனர். வைகாசி விசாக பெருவிழா உற்சவத்தை முன்னிட்டு இன்று முதல் முருகப்பெருமான் சுப்பிரமணிய சுவாமி நாள்தோறும் காலை மாலை என இரு வேலைகளிலும் ஆடு,புலி அன்னம், மயில்,நாகம், பூதம்,குதிரை, சந்திர பிரபை,சூரிய பிரபை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget