மேலும் அறிய

புரட்டாசி அமாவாசை: தங்கத் திருத்தேர் உற்சவம் - காஞ்சி காமாட்சியின் வரலாறு தெரியுமா?

காமாட்சியம்மன் சிகப்பு நிற பட்டாடை,தங்க,வைர,வைடூரிய ஆபரணங்கள் அணிந்து காட்சியளித்தனர், பக்தி பரவசத்துடன் மனமுறுகி வழிபட்ட பக்தர்கள்

சக்தி ஸ்த்லங்களில் ஒன்றாக போற்றப்படும் உலக புகழ்பெற்ற காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் மாதம்தோறும் அமாவாசை நல்நாளில் தங்க திருத்தேர் உற்ச்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் புரட்டாசி அமாவாசை நல்நாளான நேற்று காமாட்சி அம்பாள் லஷ்மி,சரஸ்வதி தேவிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையானது நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு காமாட்சி அம்மன் சிகப்பு நிற பட்டாடை உடுத்தியும் லஷ்மி சரஸ்வதி தேவியர்களுக்கு கத்ரிபூ பட்டாடைகள் உடுத்தியும், தங்க, வைர, வைடூரிய ஆபரணங்கள் அணிந்து செம்பங்கி பூ, விரிச்சை மலர் மாலைகள் அணிந்து தங்க தேரில் எழுந்தருளிய காமாட்சியம்மனுக்கு தூப தீப ஆராதனைகள் நடைபெற்று பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க திருகோயில் உள்பிரகாரத்தினை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு ஓம் சக்தி பராசக்தியென காமாட்சியம்மனை மனமுறுகி வேண்டி வழங்கி வழிபட்டு சென்றனர்.
 

புரட்டாசி அமாவாசை: தங்கத் திருத்தேர் உற்சவம் - காஞ்சி காமாட்சியின் வரலாறு தெரியுமா?
 
காஞ்சி காமாட்சி வரலாறு
 
 காமாட்சி என்றால் கருணையும், அன்பும் நிறைந்த கண்களையுடையவள் என்றும் பொருள் உண்டு. இத்தகு பெருமைகளைத் தன்னகத்தே கொண்ட காஞ்சி மாநகரத்தில் அன்னை காமாட்சி தேவி எழுந்தருளிய சம்பவம் ஒரு ஆற்றல்மிக்க வரலாறாக விரிகின்றது. முன்னொரு காலத்தில், பந்தகாசுரன் என்ற ஓர் அசுரன் வாழ்ந்து வந்தான். அவன் மிகக் கடுமையான தவங்களை மேற்கொண்டு, பிரம்ம தேவரிடமிருந்து அரிய பல வரங்களைப் பெற்றிருந்தான்.

புரட்டாசி அமாவாசை: தங்கத் திருத்தேர் உற்சவம் - காஞ்சி காமாட்சியின் வரலாறு தெரியுமா?
 
அந்த வரங்கள் அளித்த சக்தியாலும், ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும் கைப்பற்றித் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பலவித துன்பங்களை உண்டாக்கி வந்தான். பந்தகாசுரனின் கொடுமைகள் நாள்தோறும் அதிகமாகி வந்ததால், அதிக துன்பமுற்ற தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று தங்கள் துன்பத்தைக் கூறி முறையிட்டார்கள். பிரம்மாவின் வரங்களைப் பெற்றதால் பந்தகாசுரன் மிகுந்த வலிமை பெற்றிருப்பதை உணர்ந்த சிவபெருமான், “அந்தப் பந்தகாசுரனை அழிக்கும் ஆற்றல் அன்னை பராசக்தி தேவிக்குதான் உள்ளது“ என்று கூறி, அவர்களைப் பராசக்தியிடம் அனுப்பி வைத்தார். அத்தருணம், அன்னை பராசக்தி தேவி, காம கோட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், கிளி வடிவம் கொண்டு, ஒரு செண்பக மரத்தில் அமர்ந்து சிவபெருமானைக் குறித்து தவம் செய்து கொண்டிருந்தாள்.

புரட்டாசி அமாவாசை: தங்கத் திருத்தேர் உற்சவம் - காஞ்சி காமாட்சியின் வரலாறு தெரியுமா?
 
தேவர்களும், முனிவர்களும் அன்னை இருக்கும் இடத்துக்கு வந்து, அவளை வழிபட்டுத் தங்கள் துயரங்களைக் கூறினார்கள். அவர்களின் துன்பத்தைக் கண்டு மனம் இரங்கிய அன்னை, பந்தகாசுரனைக் கொன்று, அவர்களின் துயரத்தைத் தீர்ப்பதாக உறுதியளித்தாள். அத்தருணம், பந்தகாசுரன் கயிலாயத்தில், ஒரு இருண்ட குகையினுள்ளே, ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை அறிந்து, அவனைக் கொல்ல அதுவே தருணம் என்று முடிவு செய்த அன்னை, பதினெட்டுக் கரங்களில், பதினெட்டு வகையான ஆயுதங்களைத் தாங்கிய பைரவ ரூபிணியாக, உக்கிர உருவம் கொண்டாள்.

புரட்டாசி அமாவாசை: தங்கத் திருத்தேர் உற்சவம் - காஞ்சி காமாட்சியின் வரலாறு தெரியுமா?
 
பந்தகாசுரனின் கழுத்தில் ஒரு பாதத்தையும், மார்பில் ஒரு பாதத்தையும் வைத்து, அவனது தலையை அறுத்து, ஒரு கையில் தூக்கிப் பிடித்தபடி காஞ்சிபுரம் வந்தடைந்தாள். உக்கிர கோப ரூபத்தில் வந்த அன்னையைக் கண்ட தேவர்களும், முனிவர்களும் பயத்தில் நடுங்கி மயங்கி வீழ்ந்தனர். அவர்களின் பயத்தைப் போக்க விரும்பிய அன்னை, உடனே, அழகிய பட்டாடை அணிந்த சிறு பெண்ணின் உருவத்தில், புன்னகை தவழும் முகத்துடன் அவர்களுக்குக் காட்சியளித்தாள்.
 

புரட்டாசி அமாவாசை: தங்கத் திருத்தேர் உற்சவம் - காஞ்சி காமாட்சியின் வரலாறு தெரியுமா?
காஞ்சிபுரத் திருத்தலத்திலுள்ள எல்லா சிவாலயங்களுக்கும் காமாட்சி அம்பாளே மூலவர் அம்பாளாக விளங்குகிறாள். இதனால் காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களில், அம்பாளுக்குத் தனி சந்நிதிகள் இருப்பதில்லை. அம்பாளின் உற்சவ மூர்த்திகள் மட்டுமே எல்லா சிவாலயங்களிலும் காட்சியளிக்கின்றனர். மூல மூர்த்தியான காமகோடி காமாட்சியின் இடது பக்கத்தில் வட திசை நோக்கியவாறு அரூப லட்சுமியாகிய அஞ்சன காமாட்சி காட்சியளிக்கின்றாள். இது அன்னையின் சூட்சும வடிவமாகும். இந்த அன்னைக்கு வடிவம் கிடையாது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை மாசி வீதிகளில் புது சக்கரத்தில் உருண்டோடவிருக்கும் தேர்கள் - ஆஹா சூப்பர் அப்டேட் !
மதுரை மாசி வீதிகளில் புது சக்கரத்தில் உருண்டோடவிருக்கும் தேர்கள் - ஆஹா சூப்பர் அப்டேட் !
Koovagam Festival 2026: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா கோலாகலமாக தொடக்கம்...
Koovagam Festival 2026: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெருவிழா கோலாகலமாக தொடக்கம்...
நோய் தீர்க்கும் வைத்தியநாதர் சன்னதியில் குவிந்த பக்தர்கள்: சித்திரை முதல் நாளில் வைத்தீஸ்வரன் கோயிலில் சிறப்பு தரிசனம்!
நோய் தீர்க்கும் வைத்தியநாதர் சன்னதியில் குவிந்த பக்தர்கள்: சித்திரை முதல் நாளில் வைத்தீஸ்வரன் கோயிலில் சிறப்பு தரிசனம்!
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு தீர்த்தவாரி: புதன் பகவானுக்கு மகா அபிஷேகம்!
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு தீர்த்தவாரி: புதன் பகவானுக்கு மகா அபிஷேகம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாஞ்சில் சம்பத் ஆபாச பேச்சு: முகம் சுழித்த பெண்கள்! – பொதுமேடையில் அநாகரீகத்தின் உச்சம்
நாஞ்சில் சம்பத் ஆபாச பேச்சு: முகம் சுழித்த பெண்கள்! – பொதுமேடையில் அநாகரீகத்தின் உச்சம்
Delimitation: 60 பேரை தேடும் பாஜக..! இன்று மாலை வாக்கெடுப்பு - மக்களவையில் பலத்தை காட்டிடுமா? கணக்குகள் என்ன?
Delimitation: 60 பேரை தேடும் பாஜக..! இன்று மாலை வாக்கெடுப்பு - மக்களவையில் பலத்தை காட்டிடுமா? கணக்குகள் என்ன?
ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று முறை 'கீ' கொடுக்க வேண்டும் - பிரச்சாரத்தில் அண்ணாமலை கிண்டல்
ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று முறை 'கீ' கொடுக்க வேண்டும் - பிரச்சாரத்தில் அண்ணாமலை கிண்டல்
Delimitation: தெற்குக்கு 195, வடக்குக்கு 600+ தொகுதிகள் - மோடி,அமித் ஷா கணக்கில் எங்கே நியாயம்? யாருக்கு ஆபத்து?
Delimitation: தெற்குக்கு 195, வடக்குக்கு 600+ தொகுதிகள் - மோடி,அமித் ஷா கணக்கில் எங்கே நியாயம்? யாருக்கு ஆபத்து?
Jailer 2: இணையத்தில் கசிந்த ஜெயிலர் 2... சுதாரித்த சன் பிக்ச்சர்ஸ்...ஜனநாயகன் தயாரிப்பாளர் இத பண்ணிருக்கனும்
Jailer 2: இணையத்தில் கசிந்த ஜெயிலர் 2... சுதாரித்த சன் பிக்ச்சர்ஸ்...ஜனநாயகன் தயாரிப்பாளர் இத பண்ணிருக்கனும்
Pakistan Power Cut: போரால் வந்த வினை; தட்டுப்பாடான எரிபொருள், கட்டாகும் மின்சாரம்; பாகிஸ்தான் மக்கள் அவதி
போரால் வந்த வினை; தட்டுப்பாடான எரிபொருள், கட்டாகும் மின்சாரம்; பாகிஸ்தான் மக்கள் அவதி
USA Isarael IRAN War: போர் நிறுத்தம் ஓகே ஆகிடுச்சு..! விட்டுக்கொடுத்த ஈரான்? இனி கொலை இல்லை, ட்ரம்பை நம்பலமா?
USA Isarael IRAN War: போர் நிறுத்தம் ஓகே ஆகிடுச்சு..! விட்டுக்கொடுத்த ஈரான்? இனி கொலை இல்லை, ட்ரம்பை நம்பலமா?
Hyundai Hybrid: புதுசா 3 ஹைப்ரிட் மாடல நாங்க இறக்குறோம் - ரெண்டு 7 சீட்டரும் இருக்கு - ஹுண்டாயின் அதிரடி திட்டம்
Hyundai Hybrid: புதுசா 3 ஹைப்ரிட் மாடல நாங்க இறக்குறோம் - ரெண்டு 7 சீட்டரும் இருக்கு - ஹுண்டாயின் அதிரடி திட்டம்
Embed widget