மேலும் அறிய

மூலவர் தரிசிக்க நாளையே கடைசி.. காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் இருந்து வந்த அறிவிப்பு.. ஏன் தெரியுமா ?

Kanchipuram Ekambaranathar Temple: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் திருப்பணிகள் நடைபெற உள்ளதால், ஜூன் மாதம் நான்காம் தேதி வரை மட்டுமே மூலவரை தரிசிக்க முடியும்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயிலில் வரும் ஜூன் 6 ஆம் தேதி பாலாலயம் நடைபெற இருப்பதையொட்டி, ஜூன் 04 ஆம் தேதி வரை மூலவரை தரிசிக்கலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏகாம்பர மூலவரை சந்திக்க வேண்டும் என்றால், கும்பாபிஷேகம் முடியும் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில்

பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்குரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாத சுவாமி கோயில் உலகப் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக இருந்து வருகிறது. வரலாற்றுச் சிறப்பு வாயந்த இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்வது என முடிவு செய்து இதுவரை, 3 பாலாலயம் நடைபெற்று கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 

பாலாலயம் வரும் ஜூன் 06 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் நடைபெற உள்ளது. மூலவர் கருவறையில் திருப்பணி செய்ய இருப்பதால், நாளை வரை ( ஜூன் 04 ஆம் தேதி) மட்டுமே ஏகாம்பரநாதரை பக்தர்கள் தரிசிக்கலாம். அதன் பின்பு மகா கும்பாபிஷேகத்திற்கு பிறகே மூலவரை தரிசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பக்தர்கள் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பாலாலய சிறப்பு அபிஷேகம்

யாக சாலையில் ஏகாம்பரநாதரை எழுந்தருளச் செய்வதற்காக அத்திமரத்தால் செய்யப்பட்ட சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பெற்று, தினசரி 4 கால பூஜைகள் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அத்திமரத்தால் செய்யப்பட்ட யாகசாலையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்தை மட்டுமே அதன் பிறகு தரிசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 9 நவகுண்டம் அமைக்கப்பட்டு 35 சிவாச்சாரியார்கள் பாலாலய பூஜையினை வரும் ஜூன் 4 ஆம் தேதி தொடங்கவுள்ளனர்.

பாலாலய சிறப்பு அபிஷேகம் ஜூன் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது .கோயில் திருப்பணிக்காக அரசு நிதி ரூ.12.75 கோடி, ஆணையர் பொது நல நிதி ரூ.1.74 கோடி, திருக்கோயில் நிதி ரூ.4.61 கோடி, உபயதாரர் நிதி ரூ.32.14 லட்சம் உட்பட மொத்தம் 28.48 கோடி மதிப்பில் கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

பணிகள் பெருமளவு நிறைவு

திருக்கோயிலில் அமைந்துள்ள பல்லவகோபுரம், சிவகங்கை தீர்த்தக்குளம் ,1000 கால் மண்டபம் மேல்தளம் பழுது பார்த்தல்,கம்பா நதி தீர்த்தம் பழுது பார்த்தல்,அபிஷேகநீர் மற்றும் மழைநீர் சிவகங்கை தீர்த்துக்குளத்துக்கு வரும் வகையில் கால்வாய் அமைத்தல் ஆகிய பணிகள் பெருமளவு நிறைவு பெற்று விட்டன.

தெற்கு ராஜகோபுரம் பழுது பார்த்தல், 3 ஆம் பிரகாரம் தரைதளத்தில் கருங்கல் அமைக்கும் பணி,4 மற்றும் 3 ஆம் பிரகாரத்தில் மதில் சுவர் அமைக்கும் பணியை பழமை மாறாமல் புதுப்பித்தல் ஆகிய பணிகள் நடந்து வருகின்றன. நடராஜர் சந்நிதியும்,1000 கால் மண்டப உட்புற பகுதி பழுது பார்த்தல் பணிகள் 90 சதவிகிதம் நிறைவு பெற்று பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

எப்போது கும்பாபிஷேகம் நடைபெறுகிறது ?

கோயில் ராஜகோபுரம் மீண்டும் ஒரு முறை வர்ணம் தீட்ட வேண்டிய நிலையில் இருந்து வருகிறது. கும்பாபிஷேக திருப்பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் முடித்து நிகழாண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் கும்பாபிஷேகத்தை நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Pakistan Exposed: யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Embed widget