கடன் தொல்லையா? ஒரே ஒரு தடவை இந்த கோயில்களுக்கு போயிட்டு வாங்க.. அப்புறம் பாருங்க
வாழ்வில் கடன் பிரச்சினை தீர கட்டாயம் செல்ல வேண்டிய திருக்கோயில்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

ஒவ்வொரு திருத்தலங்களுக்கும் ஒவ்வொரு தனித்தன்மையும், ஸ்தல வரலாறும் உள்ளது. ஒவ்வொரு கோயில்களுக்கும் நாம் சென்று வரும்போது நாம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தீரும் என்பது பக்தர்களின் ஐதீகம் ஆகும்.
இன்று பலரும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது கடன் பிரச்சினை. கடன் பிரச்சினையில் இருந்து மீள்வதற்கு எந்தெந்த கோயில்களுக்கு செல்லலாம்? என்பதை கீழே காணலாம்.
சவுரிராஜ பெருமாள் கோயில்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏராளமான புண்ணிய தலங்கள் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ளது திருமருகல். இந்த பகுதிக்கு அருகே அமைந்துள்ள திருக்கோயில் திருக்கண்ணாபுரம் சவுரிராஜப் பெருமாள் திருக்கோயில் ஆகும். திருமாலின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக இந்த கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள மூலவர் நீலமேகப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். இந்த கோயிலுக்குச் சென்று பெருமாளை மனமுருக வேண்டினால் நமது கடன் தொல்லை தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். இந்த பெருமாள் பக்தர்களின் பாவங்களை தானமாக வாங்கிக்கொண்டு, பக்தர்களின் தோஷங்களை நீக்கும் வல்லமை கொண்டவராக கருதப்படுகிறார்.
திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயில்:
கோயில் நகரமான கும்பகோணம் அருகே அமைந்துள்ள கோயில் திருச்சேறை சாரபரமேஸ்வரர் திருக்கோயில். புகழ்பெற்ற சிவன் கோயிலான இந்த கோயிலில் வீற்றிருக்கும் சிவபெருமானை கடன் நிவர்த்தீஸ்வரர் என்று பக்தர்கள் போற்றுகின்றனர். இந்த கோயில் 11 சோமவாரங்களில் அதாவது 11 திங்கட்கிழமையில் தொடர்ந்து சிவபெருமானை வணங்கி கடன் தொல்லைகள் நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.
கடும்பாடி சின்னம்மன் கோயில்:
சென்னையின் முக்கியமான நகரமாக திகழும் சைதாப்பேட்டையில் அமைந்துள்ள கடும்பாடி சின்னம்மன் கோயில். புற்றுவடிவில் சுயம்பாக தோன்றியதால் இந்த கோயில் மிக மிக பிரபலமான கோயிலாக திகழ்கிறது. இந்த கடும்பாடி சின்னம்மன் கோயில் சைதை மக்களின் குலதெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் உள்ளது. இந்த கோயிலில் மனமுருகி வேண்டிக்கொண்டால் கடன் பிரச்சினை தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
தாண்டிக்குடி பாலமுருகன் கோயில்:
திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற கொடைக்கானலில் அமைந்துள்ளது தாண்டிக்குடி. இங்கு அமைந்துள்ளது பாலமுருகன் கோயில். இந்த கோயிலுக்கு நேரில் சென்று இங்குள்ள முருகனை வழிபட்ட பிறகு, அங்குள்ள பைரவரை வணங்கினால் கடன் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும், கடன் தொல்லைகளில் இருந்தும் விடுபடலாம் என்பதும் நம்பிக்கை ஆகும்.
ட்ரெண்டிங் செய்திகள்






















