Chitra Pournami: சித்ரா பெளர்ணமி அன்று பர்வதமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.. யாருக்கெல்லாம் தடை - புதிய கட்டுப்பாடுகள் வெளியீடு!
Chitra Pournami 2026: சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு பர்வதமலை ஏறும் பக்தர்களுக்காக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு பர்வதமலை ஏறும் பக்தர்களுக்காக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் வரும் பெளர்ணமி விஷேஷம் என்றாலும், சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பெளர்ணமி இன்னும் கூடுதல் சிறப்புடையது. அதனால், அந்த பெளர்ணமியில் கிரிவலம் செல்வதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். மற்ற மாதங்களில் செல்ல முடியாமல் இருப்பவகர்கள், சித்ரா பெளர்ணமியில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வார்கள். இதேபோல், திருவண்ணாமலை அருகே உள்ள பர்வதவமலையில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில், இந்தாண்டு சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு பர்வதமலை ஏறும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்
* சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் காலை 5 மணி முதல் 3 மணி வரை பர்வதமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
* 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மட்டும் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.
* கர்ப்பிணிகள், நடக்க இயலாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
* நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள், சுவாசப் பிரச்னை உள்ளவர்கள், இதயநோயாளிகள் உள்ளிட்டோர் மலையேற முயற்சிக்க வேண்டாம்.
* தமிழ்நாட்டில் நிலவும் வெப்ப அலை காரணமாக உடல் உபாதைகள் உள்ளவர்கள் மலையேறுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
* பர்வதமலை அடிவாரம், மலையேறும் வழிகளில் சுழற்சி முறையில் வனத்துறை, காவல்துறை, தீயணைப்புத் துறையினர் பணியில் ஈடுபட வேண்டும்.
* பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகளையும் அரசு அதிகாரிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
Chitra Pournami Girivalam: சித்ரா பெளர்ணமியில் கிரிவலம் போறீங்களா? இதுதான் கரெக்ட் டைம் பக்தர்களே!
சித்ரா பெளர்ணமி - சிறப்பு ரயில் இயக்கம்
சித்ரா பெளர்மணியை முன்னிட்டு விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாளை மற்றும் மே 1, 2 ஆகிய தேதிகளில் காலை 10.10 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் இயக்கப்படும். திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரத்துக்கு நாளை, மே 1,2 இல் நண்பகல் 12.15 மணிக்கு ரயில் புறப்படும்.
ட்ரெண்டிங் செய்திகள்





















