மேலும் அறிய

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய சண்டிகேஸ்வரர் திருவீதி உலா

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சில நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் சிறப்பாக நிகழ்ச்சி தொடங்கியது.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சண்டிகேஸ்வரர் திருவீதி உலா.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தர்நாயகி, உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சில நாட்களுக்கு முன் கொடியேற்றத்துடன் சிறப்பாக நிகழ்ச்சி தொடங்கியது.

 


கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய சண்டிகேஸ்வரர் திருவீதி உலா

 

நாள்தோறும் திருவீதி உலா மற்றும் திருக்கல்யாணம் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிலையில் இன்று கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சண்டிகேஸ்வரர் திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து சிறப்பு வாகனத்தில் சுவாமியை கொலுவிருக்க செய்தனர்.

பின்னர் சுவாமிக்கு வண்ண மாலைகள் அணிவித்து மேல தாளங்கள் முழங்க ஆலயத்திலிருந்து சண்டிகேஸ்வரர் திருவீதி உலா புறப்பட்டார். ஆலய முக்கிய வீதியில் வழியாக வளம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தார். ஆலயம் குடிபுகுந்த சண்டிகேஸ்வர சுவாமிக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் தூப தீபங்கள் காட்டினார். அதைத்தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சண்டிகேஸ்வரர் திருவீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் வழியங்களும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

 


கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய சண்டிகேஸ்வரர் திருவீதி உலா

 

நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் பங்குனி மாத சங்கடஹரா சதுர்த்தி பூஜை.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாசாலை பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் பங்குனி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு மூலவர் கணபதிக்கு என்னை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், அரிசி மாவு ,கரும்புச்சாறு, இளநீர், பன்னீர், விபூதி உள்ளிட்ட சிறப்பு வாசனை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று, அதை தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் மூலவர் கணபதிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற பங்குனி மாத சங்கடகர சதுர்த்தி விழாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் பங்குனி மாத சங்கடஹரா சதுர்த்தி பூஜை சிறப்பு பொருட்களால் மூலவர் கணபதிக்கு அபிஷேகம்.

தேர் வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலைத்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் பங்குனி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு மூலவர் கணபதிக்கும், உற்சவர் கணபதிக்கும் என்னைக்காப்பு சாற்றி, பால், தயிர்,பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், அபிஷேகப்பொடி ,அரிசி மாவு, கரும்புச்சாறு, இளநீர், பன்னீர் மற்றும் விபூதியால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் மூலவர் கணபதிக்கும், உற்சவர் கணபதிக்கும் பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்து மூலவர் கணபதிக்கு தங்க கவசம் அணிவித்தார்.

 


கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய சண்டிகேஸ்வரர் திருவீதி உலா

 

அதைத்தொடர்ந்து உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறி, சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற பங்குனி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கஜேந்திரனை காத்த ஆதிமூலப்பெருமாள்... பக்தர்களையும் காக்கும் கபிஸ்தல நாயகர் 
கஜேந்திரனை காத்த ஆதிமூலப்பெருமாள்... பக்தர்களையும் காக்கும் கபிஸ்தல நாயகர் 
பித்ரு தோஷம் நீக்கும் புனிதத் தலம்... ஆவூர் பசுபதீஸ்வரர் கோயிலின் அதிசயம்!
பித்ரு தோஷம் நீக்கும் புனிதத் தலம்... ஆவூர் பசுபதீஸ்வரர் கோயிலின் அதிசயம்!
குரு பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சி... திட்டையில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
குரு பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சி... திட்டையில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
ராசி மாறினார் குருபகவான்! மயிலாடுதுறை மேதா தட்சிணாமூர்த்தியை தரிசித்தால் கிடைக்கும் பலன்கள் இதுதான்...
ராசி மாறினார் குருபகவான்! மயிலாடுதுறை மேதா தட்சிணாமூர்த்தியை தரிசித்தால் கிடைக்கும் பலன்கள் இதுதான்...
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?
தவெகவில் குவியும் அதிமுகவினர்
”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி
அருண் IPS-க்கு புது பதவி! CM விஜய் MASTERPLAN! கடுப்பாகும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பல்கலை. வேந்தராக முதல்வர் இருக்க வேண்டியதில்லையா? காங்கிரஸ் அமைச்சர் கருத்து- விசிக கண்டனம்!
பல்கலை. வேந்தராக முதல்வர் இருக்க வேண்டியதில்லையா? காங்கிரஸ் அமைச்சர் கருத்து- விசிக கண்டனம்!
US Iran War: மறுபடியும் போர் வெடிச்சுடும் போலயே.! அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் பதிலடி; மீண்டும் பதற்றம்
மறுபடியும் போர் வெடிச்சுடும் போலயே.! அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் பதிலடி; மீண்டும் பதற்றம்
பள்ளி மாணவர்களுக்கு பழைய முட்டையா? அலட்சியத்தை ஏற்க முடியாது- ஆவேசமான அண்ணாமலை!
பள்ளி மாணவர்களுக்கு பழைய முட்டையா? அலட்சியத்தை ஏற்க முடியாது- ஆவேசமான அண்ணாமலை!
Karnataka CM: முதலமைச்சர் பதவிக்கு பாய், பாய்..! ஈடுகட்ட கட்சி தலைவர், மகனுக்கு அமைச்சர் பதவி - காங்., டிக் அடிக்குமா?
முதலமைச்சர் பதவிக்கு பாய், பாய்..! ஈடுகட்ட கட்சி தலைவர், மகனுக்கு அமைச்சர் பதவி - காங்., டிக் அடிக்குமா?
அரசு பள்ளிகளில் 50ஆயிரம்+ காலியிடங்கள்: தகுதித்தேர்வில் வென்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க கோரிக்கை
அரசு பள்ளிகளில் 50ஆயிரம்+ காலியிடங்கள்: தகுதித்தேர்வில் வென்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க கோரிக்கை
ADMK: ”ரெட்டைக் கதிரே” இனி நமக்குள் பிரிவில்லை - எடப்பாடியின் தலைமையின் கீழ் இணைந்த வேலுமணி - அதிமுக
ADMK: ”ரெட்டைக் கதிரே” இனி நமக்குள் பிரிவில்லை - எடப்பாடியின் தலைமையின் கீழ் இணைந்த வேலுமணி - அதிமுக
Tamilnadu Round Up: டெல்லி புறப்பட்ட சிஎம் விஜய், தடாலடியாக குறைந்த தங்கம், அதிமுக இணைப்பு - தமிழ்நாட்டில் இதுவரை
டெல்லி புறப்பட்ட சிஎம் விஜய், தடாலடியாக குறைந்த தங்கம், அதிமுக இணைப்பு - தமிழ்நாட்டில் இதுவரை
ADMK: ”பதவிலாம் கொடுக்க முடியாது” கறார் காட்டிய எடப்பாடி - தோல்வியுடன் திரும்பிய எஸ்.பி. வேலுமணி அணி
”பதவிலாம் கொடுக்க முடியாது” கறார் காட்டிய எடப்பாடி - தோல்வியுடன் திரும்பிய எஸ்.பி. வேலுமணி அணி
Embed widget