மேலும் அறிய

Andhra Pradesh: ஆந்திராவில் விஜயதசமியை முன்னிட்டு நடைபெற்ற தடியடி திருவிழா.. 2 பேர் உயிரிழப்பு..

ஆந்திர மாநிலம் தேவர்கட் மலையில் விஜயதசமியை முன்னிட்டு நடைபெற்ற தடியடி திருவிழாபில் 2 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் தேவர்கட் மலையில் விஜயதசமியை முன்னிட்டு மல்லேஸ்வர சுவாமி கோயிலில் நடைபெற்ற தடியடி திருவிழாபில் 2 பேர் உயிரிழந்தனர்.

கடந்த வாரம் முதல் நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நவராத்திரி பண்டிகை நேற்று முடிவுக்கு வந்தது. நவராத்திரி பண்டிகை என்பது 9 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். அதில் முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியையும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபட்டு வணங்குவர். ஒரு மனிதனுக்கு கல்வி, செல்வம், ஞானம் ஆகிய மூன்றும் முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

திங்கள்கிழமை ஆயுத பூஜையும் நேற்று விஜயதசமியும் கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதில் இருக்கும் ஹிந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் இது ஒன்றாகும். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு முறை கடைப்பிடிக்கப்படும். தமிழ்நாட்டில் பொதுவாக சரஸ்வதி பூஜையன்று வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு பொட்டு வைத்து பூஜை செய்வார்கள். சாமிக்கு நெய்வேத்தியமாக பொரி, கடலை, அவல், பழங்கள், வடை, பாயாசம், ஆகியவற்றை வைத்து வழிபடுவார்கள். குறிப்பாக வீட்டில் இருக்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சுத்தமாக கழுவி மாலை அணிவித்து அதற்கு பூஜை செய்வார்கள். இப்படி செய்வதன் மூலம் வாகனத்தில் எந்த பழுதும் ஏற்படாமல், விபத்துக்குள்ளாகாமல் இருக்கும் என நம்பப்படுகிறது. அதேபோல், நேற்று விஜயதசமியை முன்னிட்டு கோயில்களில் வித்யாரம்பம் நடைபெற்றது.  

இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் இப்படி தான் கொண்டாடப்படும். இந்நிலையில் ஆந்திரா மாநில அமராவதியில் விஜயதசமியை முன்னிட்டு வித்தியாசமான திருவிழா நடைபெற்றது. ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தின் தேவர்கட் மலையில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற மல்லேஸ்வர சுவாமி கோயிலில் கல்யாண உற்சவ விழா நடைபெறும்.

கல்யண உற்சவ விழா முடிந்தவுடன், உற்சவ மூர்த்தியை யார் கைப்பற்றுவது என்பது தொடர்பாக அப்பகுதியில் இருக்கும் கிராம மக்கள் இடையே தடியடி திருவிழா நடைபெறும். அப்படி அந்த தடியடி திருவிழாவில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே அந்த உற்சவரை கைப்பற்றுவார். அந்த வகையில் நேற்று கல்யாண் உற்சவ விழா முடிந்தவுடன், நள்ளிரவு 12 மணிக்கு 23 கிராம மக்கள் இடையே தடியடி திருவிழா நடைபெற்றது.

அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து தீவட்டி, தடி ஆகியவற்றை ஏந்தியபடி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த நிலையில் 2 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த திருவிழாவை அதிகாரிகள் தடுத்து நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் ஆனால் ஊர் மக்கள் தங்கள் பாரம்பரியத்தை கடைப்பிடிக்கும் வகையில் இந்த தடியடி உற்சவ திருவிழாவை நடத்தி வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thalaivar 170: 33 வருடத்திற்கு பிறகு... ‘இதயம் சந்தோஷத்தில் துடிக்கிறது’ - அமிதாப்புடன் அழகிய புகைப்படத்தை பகிர்ந்த சூப்பர்ஸ்டார்!

மீண்டும் திடீரென நிறம் மாறிய புதுச்சேரி கடல் நீர் - காரணம் என்ன தெரியுமா ?

குலசையில் விமரிசையாக நடைபெற்ற சூரசம்ஹார விழா - லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget