மேலும் அறிய

Borish Johnson: காலை வாரிய போரிஸ் ஜான்சன்.. கவிழப்போகிறதா ரிஷிசுனக் அரசு..? பிரிட்டன் அரசியலில் புது திருப்பம்..!

பிரிட்டன் நாட்டின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததால் ரிஷி சுனக்கிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்றத்தின் உறுப்பினர் பதவியை அந்நாட்டின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்துள்ளார். இது அந்நாட்டு அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.

போரிஸ் ஜான்சனுக்கு எதிராக எழுந்த புகார்கள்:

கடந்த 2020 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் சமயத்தில் பிரிட்டனில்  கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்த காலத்தில் பிரதமர் அலுவலகம் மற்றும் பிரதமரின் அதிகாரப்பூர்வ வீடு அமைந்துள்ள டவுனிங் தெருவில் போரிஸ் ஜான்சன் பார்ட்டி நடத்தியதாக கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புகார் எழுந்தது. 

முதலில் இதை போரிஸ் ஜான்சன் தரப்பு மறுத்த நிலையில், பின் அதற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் அவருக்கு லண்டன் போலீசாரால் அபராதம் விதிக்கப்பட்டது. இதன் காரணமாக, சொந்த கட்சியை சேர்ந்த எம்.பி.க்களே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். பரபரப்பான அரசியல் கட்டத்திற்கு மத்தியில், கடந்தாண்டு ஜூலை 7ஆம் தேதி, பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகினார்.

பிரதமர் பதவியில் இருந்து விலகிய போரிஸ் ஜான்சன், தற்போது பிரதமராக உள்ள ரிஷி சுனக்கின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். போரிஸ் ஜான்சனுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகார்கள் குறித்து விசாரித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவை கங்காரு நீதிமன்றம் என சாடியுள்ளார்.

கடந்த ஆண்டு தனது அரசியல் வீழ்ச்சியில் ரிஷி சுனக் பெரும் பங்காற்றியதாக குற்றம்சாட்டியுள்ள போரிஸ், "நாடாளுமன்ற சிறப்பு அதிகாரங்கள் குழு அரசியல் அடியாள் வேலை செய்து வருகிறது. அதன் தலைவரான லேபரின் ஹாரியட் ஹர்மன் ஒரு சார்புடன் செயல்பட்டு வருகிறார்" என தெரிவித்துள்ளார்.

போரிஸ், ரிஷி சுனக் இடையே முற்றும் மோதல்: 

போரிஸின் குற்றச்சாட்டுகளுக்கு நாடாளுமன்ற குழு எந்த விதமான விளக்கத்தையும் அளிக்கவில்லை. கொரோனா விதிகளை அதிகாரிகள் மீறியது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் போரிஸ் ஜான்சன் பொய் சொன்னாரா என நாடாளுமன்ற குழு விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் குழு சமர்பித்த அறிக்கை குறித்து போரிஸ் ஜான்சனிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இன்னும் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து போரிஸ் ஜான்சன் வெளியிட்ட அறிக்கையில், "கமிட்டியின் அறிக்கை துல்லியமற்றது. பாரபட்சம் நிறைந்ததாக உள்ளது. இப்போது ஒருசில மக்களால் நான் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து போரிஸ் விலகியிருப்பதால், அந்த தொகுதிக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியமாகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், சிறிய வாக்கு வித்தியாசத்தில்தான் போரிஸ் அந்த தொகுதியில் வெற்றிபெற்றார். தற்போது, அந்த தொகுதிக்கு தேர்தல் நடுத்தப்படும் பட்சத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி உள்ளது. 

போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசில் நிதி அமைச்சராக பதவி வகித்தவர்தான் ரிஷி சுனக். போரிஸ் ஜான்சனுக்கு எதிராக ரிஷி  போர்கொடி தூக்கியதால்தான் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் விலக நேர்ந்தது. தற்போது, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து போரிஸ் ராஜினாமா செய்திருப்பதால், இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget