மேலும் அறிய

Vaccum Bombs: மனிதர்களை ஆவியாக்கும் குண்டை பயன்படுத்தியதா ரஷ்யா? அதென்ன ஆவியாக்கும் குண்டு?

Vacuum Bombs: இந்த வகையான குண்டுகள்  ஏற்படுத்தும் வெடிப்பு அலைகள் (Blast Waves) நீண்ட நேரம் நீடிக்கும். அபாயகரமாக வாக்யூம் குண்டுகள் மனிதனை ஒரு நொடியில் அழிக்கும் வல்லமை வாய்தவை.

ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமடைந்து வருகிறது. ரஷ்யா உக்ரைனில் உள்ள ராணுவ தளவாடங்கள், அரசு அலுவலங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான இடங்களை தாக்கி வருகிறது. இதையெடுத்து, ரஷ்யா மக்கள் வாழும் பகுதிகளிலும் தனது தாக்ககுதலை தொடங்கியிருக்கிறது. பேச்சிவார்த்தை என்பதை தாண்டி, உக்ரைனை அழிப்பதில்தான் ரஷ்யா முழுவீச்சில் செயல்ப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரஷ்ய படையினர் உக்ரைனில் உள்ள கீவ் நகரை சுற்றி கிளஸ்டர் (Cluster Bomb) குண்டுகள் மற்றும் வேக்யூம் (Vaccum Bomb) குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஹுயூமன் ரைட்ஸ் வாட்ச், அம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட அமைப்புகள் இதனைக் கண்டித்துள்ளன. அதேசமயம் அமெரிக்காவிற்கான உக்ரைன் தூதர் ஒக்ஸானா மார்க்கரோவா, ரஷ்யாவின் மாஸ்கோ படையினர் உக்ரைன் நாட்டு மக்கள் மீது வேக்யூம் குண்டுகளை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

A vacuum bomb அல்லது thermobaric weapon என்றழைக்கப்படும் வாக்யூம் குண்டுகள் பரவலாக தடைசெய்யப்பட்டவைகளாகும். இவை காற்றிலிருக்கும் ஆக்சிஜனை மொத்தமாக உள் இழுத்து கொண்டு, அதன் துணையோடு, மிக உயர்ந்த வெப்பநிலையில் மிகவும் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பை ஏற்படுத்த வல்லவை. இதன் மூலம் கடுமையான பேரழிவை ஏற்படுத்தாலாம். இந்த வகையான குண்டுகள் பயன்படுத்தப்படும் இடத்தில் உள்ள மக்கள் ஒட்டு மொத்தமாக அழிந்துவிடுவார்கள்.

வேக்யூம் குண்டுகள்:

போர் காலங்களில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான குண்டுகள் இலக்குகளை அழிக்க, சக்தி வாய்ந்த வெடிமருந்துகளை பயன்படுத்தி இயங்குகின்றன. ஆனால், இந்த வாக்யூம் குண்டுகள் அப்படி இயங்குவதில்லை. இந்த மெக்கானிசம்,  அதிக வெப்பநிலை மற்றும் கடும் அழுத்தத்தை பயன்படுத்தி வெடிக்கும் இயல்பை கொண்டிருக்கிறது. அதாவது ஒரு இடத்தில்  பேரழிவை உருவாக்க  சுற்றியுள்ள காற்றில் இருக்கும் ஆக்சிஜனை மொத்தமாக உறிஞ்சுகிறது. இந்த குண்டுகள் செய்லபட தொடங்கியதும், ஒரு உயர் வெப்பநிலை வெடிப்பை உருவாக்குகிறது.  அதிதீவிர வெடிப்பிற்கு வழிவகுக்கிறது. இதற்கு மனித உடல்களை நொடிப்பொழுதில் ஆவியாக்கும் திறன் இருக்கிறது. இதைப் பயன்படுத்தினால் மனித உடல்களின் ஒரு அணுவைக் கண்டறிவது கடினம்தான்.

இந்த வாக்யூம் குண்டுகள் பல வகைகளிலும், உருவங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. இதை தனிர்நபர் பயன்படுத்தும் வகையில் கையில் வைத்து இயக்கக் கூடிய ஏவுகணைகளாக  (hand-held rocket launchers.)  பயன்படுத்தலாம். பெரிய ஏவுகணைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது. குலைகள்,டனல்ஸ் ஆகியவற்றை அழிப்பதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, இந்த வகையான குண்டுகள் மூடப்பட்டிருக்கும் இடங்களில் பேரழிவை ஏற்படுத்தும்.

அமெரிக்கா  2003 ஆம் ஆண்டில் 9,800 கிலோ குண்டுகளை பரிசோதனை செய்து, இந்த வாக்யூம் குண்டுகளுக்கு,  ”Mother of all bombs" என்று பெயரிட்டது. நான்கு ஆண்டுகளுக்கு பின், ரஷ்யா இதைப்போன்ற குண்டுகளைத் தயாரித்து அதற்கு ” Father of all bombs" என்றது. 44 டன் வழக்கமான குண்டுகள் ஏற்படுத்தும் பேரழிவை இந்த ஒற்றை குண்டுகளால் சாத்தியமாகும். அதிக சக்தி வாய்ந்த நியூக்ளியர் குண்டுகளுடன் போட்டி போடும் திறன் கொண்டது.

இந்த வேக்யூம் குண்டுகள் இரண்டாம் உலக போரிலே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும், அமெரிக்கா, வியட்நாம் போரில் அதிக அளவில் இந்த குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. 2001-இல் அமெரிக்க அல்-கெய்தா அமைப்புகளை அழிப்பதற்கு இந்த வகையான குண்டுகளைப் பயன்படுத்தியது.

உக்ரைன் அல்லது ரஷ்யா சார்பில் வாக்யூம் குண்டுகள் பயன்பாடு குறித்து உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சட்டம் மற்றும் 1928-ஜெனீவா உடன்படிக்கை ஆகியவற்றின் அடிப்படையில்  இதுபோன்ற குண்டுகளை போரில் பயன்படுத்தக்கூடாது. இதன்படி போரில் வேதியல் மற்றும் உயிரியல் ஆயுதங்களை பயன்படுத்தும் எந்த நாடும் போர்க்குற்றம் செய்த நாடாகவே கருதப்படும். சர்வதேச நீதிமன்றத்தில் இந்த குற்றங்கள் விசாரிக்கப்படும். அப்படி ரஷ்யா வாக்யூம் குண்டுகளை பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டால், தற்போதுள்ள பொருளாதார தடைகளுடன் போர் குற்றத்திற்கான தண்டனைகளையும் ரஷ்யாவுக்கு வழங்கப்படும்.

இந்த வகையான குண்டுகள்  ஏற்படுத்தும் வெடிப்பு அலைகள் (Blast Waves) நீண்ட நேரம் நீடிக்கும். அபாயகரமாக வாக்யூம் குண்டுகள் மனிதனை ஒரு நொடியில் அழிக்கும் வல்லமை வாய்தவை.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget