மேலும் அறிய

Srilanka Crisis : இலங்கையின் மோசமாகும் நிதி நிலைமை.. என்ன நடக்கிறது?

வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெறும் நிதி உதவி மற்றும் கடன்கள் இலங்கைக்கு வந்தடைவதில் பல சிக்கல்கள் நிலவுகின்றன.

இலங்கையில் நிலவும் மக்கள் போராட்டம், உறுதியற்ற அரசு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை இவற்றின் விளைவாக வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெறும் நிதி உதவி மற்றும் கடன்கள் இலங்கைக்கு வந்தடைவதில் பல சிக்கல்கள் நிலவுகின்றன.

இலங்கைக்கு உலக வங்கி கடன் தர இயலாது என்பதை ஒரு அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது.இதைப் போலவே சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பேச்சுவார்த்தையில்  சுமூகமான உடன்பாடு எட்டப்படவில்லை. இது இலங்கைக்கு மிகப்பெரிய பொருளாதார சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா "IMF ஆதரவு கிடைத்தால் மூன்று பில்லியன் டாலர்கள் இலங்கையின் நட்பு நாடுகளில் இருந்து கிடைக்கும் ,தற்சமயம் அவ்வாறு நட்பு நாடுகளிடமிருந்து பணம் பெற முடியவில்லை என்பதை தெரிவித்திருக்கிறார். அதேநேரம் ஏற்றுமதியின் மூலம் கிடைக்கும் வருமானத்தினை இறக்குமதிக்கு பயன்படுத்திக் கொள்வதாகவும் , சில கடன்களை மட்டும் நிறுத்தி இருப்பதாகவும் கூறி இருக்கிறார். ஆனாலும் சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி மற்றும் வங்கி உலக வங்கி ஆகியவற்றில் இருந்து வாங்கிய கடன்களை நிறுத்தவில்லை என்றும்,அந்த கடன் தொகைகள் முன்பு ஒப்பந்தமிட்டபடி செலுத்தப்பட்டு கொண்டிருக்கிறது என்றும்,இது நிறுத்த முடியாத  ஒரு கடன் நிலுவை  என்றும் கூறினார்.

மற்றொருபுறம் அமெரிக்கா  தெரிவித்த குறிப்பில் இலங்கை திவாலாக  மற்றும் ஒரு காரணம் சீனாவின் தேவையில்லாத கடன் ஒப்பந்தங்களும் சீனாவுக்கு மட்டுமே ஆதாயம் தருகின்ற திட்டங்களும் ஒரு முக்கிய காரணம் என்று கூறி இருக்கிறது. இவ்வாறான மோசமான நிதிநிலை நெருக்கடியிலும் கூட உலக வங்கி 160 மில்லியன் அமெரிக்க டாலர்களை அடிப்படைத் தேவைகளுக்காக வழங்கி இருப்பதாக கூறி இருக்கிறது.

இந்த நிதி கல்வி கட்டண தள்ளுபடி மருத்துவ பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் விநியோகம் ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டிருப்பதாகவும்,இந்த நிதி சரியாக பயன்படுத்தப்படுகிறதா? என்பதற்கான கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாகவும் கூறி இருக்கிறது.

மனிதாபிமான அடிப்படையிலான இந்த நிதியைத் தவிர வேறு நிதி வளங்களை இலங்கைக்கு தருவது என்றால் அங்கு  மிகச்சரியான பொருளாதாரக் கட்டமைப்புகளுடன் வலுவான சீர்திருத்தங்களை, வரும் அரசுகள் செய்யும் பட்சத்தில் மட்டுமே நிதி அளிக்க முடியும் என்பதை திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறது.அடுத்து வருகின்ற மாதங்கள் இலங்கைக்கு மிகவும் சவாலான மாதங்களாகவே இருக்கும் என்று தெரிகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Roundup:  தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட்! எடப்பாடி குற்றாச்சாட்டு..சீமான் சொன்ன புது தகவல் - 10 மணி செய்திகள்
TN Roundup: தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட்! எடப்பாடி குற்றாச்சாட்டு..சீமான் சொன்ன புது தகவல் - 10 மணி செய்திகள்
இன்றும் நாளையும் அலர்ட்டா இருங்க.! 10 மாவட்டம் ரொம்ப ரிஸ்க்- ஆட்சியர்களுக்கு பறந்த எச்சரிக்கை
இன்றும் நாளையும் அலர்ட்டா இருங்க.! 10 மாவட்டம் ரொம்ப ரிஸ்க்- ஆட்சியர்களுக்கு பறந்த எச்சரிக்கை
Tomato Price: மூட்டை மூட்டையாக வெங்காயம்.. கொட்டிக்கிடக்கும் தக்காளி- ஒரு கிலோ இவ்வளவு தானா.?
மூட்டை மூட்டையாக வெங்காயம்.. கொட்டிக்கிடக்கும் தக்காளி- ஒரு கிலோ இவ்வளவு தானா.?
திரூவாரூரில் கனமழை எச்சரிக்கை..“ யாரும் விடுமுறை எடுக்க வேண்டாம்” - ஆட்சியரின் அவசர உத்தரவு!
திரூவாரூரில் கனமழை எச்சரிக்கை..“ யாரும் விடுமுறை எடுக்க வேண்டாம்” - ஆட்சியரின் அவசர உத்தரவு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dog Bite | பிறப்புறுப்பில் கடித்த நாய்!வடமாநில இளைஞர் படுகாயம் பகீர் சிசிடிவி காட்சிகள்
”சேட்டன் வந்தல்லே”CSK-வில் இணைந்த சஞ்சு ஜடேஜா, சாம் கரனுக்கு TATA..! | CSK Trade 2026
பீகாரின் 25 வயது பாஜக MLA பாடகி To அரசியல்வாதி யார் இந்த மைதிலி தாக்கூர்? | Bihar | Maithili Thakur
Tirupattur School Caste issue | சாதி பெயரை சொல்லி திட்டிய சத்துணவு பெண்!சிறுவன் கண்ணீர் வாக்குமூலம்
Rahul vs Tejashwi Yadav | காங்கிரஸ் கவலைக்கிடம்!ஆத்திரத்தில் தேஜஸ்வி தரப்பு!தோல்விக்கான காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Roundup:  தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட்! எடப்பாடி குற்றாச்சாட்டு..சீமான் சொன்ன புது தகவல் - 10 மணி செய்திகள்
TN Roundup: தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட்! எடப்பாடி குற்றாச்சாட்டு..சீமான் சொன்ன புது தகவல் - 10 மணி செய்திகள்
இன்றும் நாளையும் அலர்ட்டா இருங்க.! 10 மாவட்டம் ரொம்ப ரிஸ்க்- ஆட்சியர்களுக்கு பறந்த எச்சரிக்கை
இன்றும் நாளையும் அலர்ட்டா இருங்க.! 10 மாவட்டம் ரொம்ப ரிஸ்க்- ஆட்சியர்களுக்கு பறந்த எச்சரிக்கை
Tomato Price: மூட்டை மூட்டையாக வெங்காயம்.. கொட்டிக்கிடக்கும் தக்காளி- ஒரு கிலோ இவ்வளவு தானா.?
மூட்டை மூட்டையாக வெங்காயம்.. கொட்டிக்கிடக்கும் தக்காளி- ஒரு கிலோ இவ்வளவு தானா.?
திரூவாரூரில் கனமழை எச்சரிக்கை..“ யாரும் விடுமுறை எடுக்க வேண்டாம்” - ஆட்சியரின் அவசர உத்தரவு!
திரூவாரூரில் கனமழை எச்சரிக்கை..“ யாரும் விடுமுறை எடுக்க வேண்டாம்” - ஆட்சியரின் அவசர உத்தரவு!
Rain Alert: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? முழு விவரம்
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? முழு விவரம்
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! அமீபா காய்ச்சல் எச்சரிக்கை: சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! அமீபா காய்ச்சல் எச்சரிக்கை: சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Crop Insurance: அப்பாடா.! டெல்டா விவசாயிகளுக்கு நிம்மதியான அறிவிப்பு; பயிர் காப்பீட்டு செய்ய அரசு அவகாசம்
அப்பாடா.! டெல்டா விவசாயிகளுக்கு நிம்மதியான அறிவிப்பு; பயிர் காப்பீட்டு செய்ய அரசு அவகாசம்
ECI on SIR Form: என்னது அதுக்குள்ளயுமா.? தமிழ்நாட்டில் 92% SIR படிவங்களை விநியோகித்து விட்டோம் - தேர்தல் ஆணையம்
என்னது அதுக்குள்ளயுமா.? தமிழ்நாட்டில் 92% SIR படிவங்களை விநியோகித்து விட்டோம் - தேர்தல் ஆணையம்
Embed widget